ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நேராய் நகர்தல்
வாழ்க்கையின் எந்த பருவத்தில் ஒரு மனிதன் முதிர்ச்சியடைகிறான் என்னும் புள்ளிவிபர கணக்கிற்கான கேள்வியுடன் சமீபத்தில் பலரை அனுகினர். தாங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டோம் என்று நம்புகிற பலர், குறிப்பிட்ட சில சுபாவங்களை சுட்டிக்காண்பித்து தங்களுடைய முதிர்ச்சியை ஆதாரமாய் காண்பித்தனர். வரவுசெலவைத் திட்டமிட்டு, சொந்தமாக வீடு வாங்கியதே முதிர்ச்சிக்கு அடையாளமாய் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும், சமைத்தல், மருத்துவரைச் சந்திக்க முன்பதிவுசெய்தல், நொறுக்குத் தீனியை தானே தேர்ந்தெடுத்தல் போன்ற வேடிக்கையான பதில்கள், அல்லது இரவில் தனியே நடந்துசெல்லுதல் போன்ற பல்வேறு காரியங்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
வேதாகமமும் நாம் ஆவிக்குரிய முதிர்ச்சியடையவேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கிறது. பவுல் எபேசு சபைக்கு எழுதும்போது, சபையின் மக்களை “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்...” என்று உற்சாகப்படுத்துகிறார் (எபே. 4:11). நம்முடைய விசுவாசத்தில் குழந்தைகளாயிருந்தபோது, நமக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்திய “காற்றினாலே அலைகளைப்போல அடிபட்(ட)” பலவித போதனைகளுக்கு செவிசாய்த்தோம். அதற்கு பதிலாக, சத்தியத்தைக் குறித்த அறிவில் முதிர்ச்சியடையும்போது, “தலையாகிய கிறிஸ்துவுக்குள்” (வச. 15) ஒன்றாக்கப்பட்ட சரீரமாய் செயல்படுகிறோம்.
தேவன் யார் என்று அறிகிற பூரண அறிவில் தேறுவதற்கு அவருடைய ஆவியை நமக்கு தருகிறார் (யோவான் 14:26). அத்துடன், விசுவாச முதிர்ச்சிக்கு நேராய் நம்மை வழிநடத்துவதற்கு மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களை தேவன் கொடுத்துள்ளார் (எபே. 4:11-12-13). நம்முடைய சரீர முதிர்ச்சியை அடையாளப்படுத்த சில காரியங்கள் இருப்பதுபோல, தேவனுடைய சரீரத்தின் அவயவங்களாய் ஒன்றிணைவதே ஆவிக்குரிய முதிர்ச்சிக்கான அடையாளம்.

தெய்வீக மீட்பு
நேரிடப்போகிற ஒரு பெரிய ஆபத்தைக் குறித்த செய்தியை தொலைபேசி வாயிலாக கேள்விப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய வாகனத்தை இருட்டான இரயில் பாதையில் வேகமாய் செலுத்தி, அந்த இரயில் பாதையில் கார் சிக்கியிருந்த இருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார். வெகுவேகமாய் வந்த இரயிலானது அந்த காரை உடைத்து நொறுக்கியது அருகிலிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. “50லிருந்து 80 மைல் வேகத்தில்” அந்த இரயில் வந்தது என்று அந்த அதிகாரி அறிவித்தார். அந்த இரயில் காரை உடைத்து நொறுக்குவுதற்கு சற்று முன், சற்றும் யோசிக்காமல் அந்த காவல் அதிகாரி, காரில் சுயநினைவிழந்திருந்த நபரை வெளியே இழுத்து கனப்பொழுதில் அவரின் உயிரைக் காப்பாற்றினார்.
நம்பிக்கையிழக்கும் வாழ்க்கைத் தருணத்திலெல்லாம் தேவன் நம்மை விடுவிக்கிறவர் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கி, ஒடுக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்கள், தாங்கள் விடுவிக்கப்படுவது சாத்தியமேயில்லை என்று நினைத்தனர். யாத்திராகமத்தில் தேவன் அவர்களுக்கான நம்பிக்கையின் வார்த்தையைக் கொடுக்கிறார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து,” “அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன்,” “அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (3:7). தேவன் பார்ப்பது மட்டுமின்றி, கிரியையும் செய்கிறார். “அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க... இறங்கினேன்” (வச. 8) என்று கூறுகிறார். அதற்கேற்ப, தேவன் இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். இதுதான் தெய்வீக மீட்பு.
தேவன் இஸ்ரவேலை மீட்கும் இந்த சம்பவம், இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நமக்கு தேவனுடைய இருதயத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. தேவன் வந்து விடுவித்தாலொழிய வாய்ப்பே இல்லை என்று அழிவின் பாதையில் பயணிக்கும் நம்மில் பலருக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நம்முடைய சூழ்நிலைகள் சாத்தியமில்லாமல் தெரியலாம். அதிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவரான தேவனை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து, நம் இருதயத்தை அவரிடமாய் திருப்புவோம்.

புத்தியுள்ள கட்டுநர்
வேளிநாட்டவரான ட்ரூத் என்று அழைக்கப்படுகிற “இசபெல்லா பாம்ஃப்ரீ” என்ற பெண், 1797இல் நியூயார்க்கில் அடிமையாய் பிறந்தவள். அவளுடைய எல்லா குழந்தைகளும் அடிமைகளாகவே விற்கப்பட்டாலும்; 1826இல் அவளும் அவளுடைய மகளும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தங்களை பணம்கொடுத்து விடுவித்த அந்த குடும்பத்துடனே தங்கிக்கொண்டனர். தன்னுடைய குடும்பத்தை சிதறடித்த இந்த அநீதியான அடிமைத்தன வாழ்க்கையோடு பழக விரும்பாமல், தன்னுடைய இளைய மகன் பீட்டரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டாள் - அந்த நாட்களில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணுக்கு இது ஒரு அற்புதமான சாதனையாகும். தேவனுடைய துணையில்லாமல் தன் பிள்ளைகளை வளர்க்கமுடியாது என்று நம்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனுடைய சத்தியத்தில் தன் வாழ்க்கைக்கு அஸ்திபாரம்போட்டதற்கு அடையாளமாய் தன் பெயரை sojourner truth (வெளிநாட்டு சத்தியம்) என்று மாற்றிக்கொண்டாள். நீதிமொழிகள் 14ன் ஆசிரியரான சாலமோன் ராஜா, “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்” (வச. 1) என்று கூறுகிறார். அதற்கு மாறாக, “புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.” தேவனுடைய ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த வீடுகட்டுகிற உருவகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தியோடு கட்டுவது எப்படி? மற்றவர்களை கட்டியெழுப்புகிற வார்த்தைகளை பேசுவதின் மூலமாக (எபே. 4:29; 1 தெச. 5:11) அதைச் செய்யமுடியும். தன் வீட்டை இடித்துப்போடுவது எப்படி? நீதிமொழிகள் 14 அதற்கும் பதிலளிக்கிறது. “மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு” (வச. 3).
கடிமான தருணத்தில் தேவனிடத்தில் அடைக்கலம் புகுந்த இந்த “இசபெல்லாவிற்கு” என்ற பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தேவ ஞானத்திற்காய் நன்றி. உங்களுடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் தேவை உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் அந்த பெண் தன் வீட்டைக் கட்டியதுபோல், “தேவ ஞானம்” என்னும் அஸ்திபாரத்தின் மீது நம் வீட்டை கட்டவேண்டியது அவசியம்.

நமது நிஜமான அங்கீகாரம்
எனது பெற்றோரின் புகைப்பட ஆல்பத்தில் ஒரு சிறுவனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பருக்கள் நிறைந்த வட்ட முகமும் நீட்டிக்கொண்டிருந்த தலைமுடியும் அவனுக்கு இருந்தது. அவனுக்கு கேலிச் சித்திரங்கள் பிடிக்கும்; சில பழவகைகள் பிடிக்காது; ஒரு வகையான இசையை விரும்புவான். அதே புகைப்பட ஆல்பத்தில் ஒரு இளைஞனுடைய புகைப்படம் ஒன்றும் இருந்தது. அவனுடைய முகம் வட்டமாய் இல்லாமல் சற்று நீண்டிருந்தது; தலைமுடி நீட்டிக்கொண்டில்லாமல் படிந்திருந்தது; முகத்தில் பருக்கள் இல்லை; அவனுக்கும் சில பழவகைகள் பிடிக்கும்; கேலிச் சித்திரங்களை விட திரைப்படங்களை அதிகம் விரும்புகிறான்; குறிப்பிட்ட சில இசைகளில் ஆர்வமுள்ளவன். அந்த சிறுவனின் முகமும் இந்த இளைஞனின் முகமும் ஒன்றுபோலவே இருந்தது. அறிவியல்பூர்வமாய் தோல், பற்கள், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் உருவ அமைப்பில் இருவரும் மற்றவரிலிருந்து வேறுபடுகின்றனர். எனினும், அந்த இரண்டு படங்களும் என்னுடையதுதான். மனிதனின் இந்த தோற்ற முரண்பாடு தத்துவமேதைகளையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு பருவத்திலும் நம்முடைய உருவ அமைப்பு மாற்றமடைந்துகொண்டே இருப்பதால் எது நம்முடைய நிஜமான உருவம்?
வேதம் இக்கேள்விக்கு பதிலளிக்கிறது. தாயின் கருவிலே தேவன் நம்மை உருவாக்கத் துவங்கினதுமுதல் (சங். 139:13-14), படிப்படியாய் வளர்ந்து ஒரு நேர்த்தியான உருவத்தை நாம் அடைகிறோம். நம்முடைய வாழ்க்கையின் இறுதியில் நாம் எந்த உருவத்தில் இருக்கப்போகிறோம் என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தால் இயேசுவைப் போல மாறுவோம் என்பதை மட்டும் நன்கு அறிந்திருக்கிறோம் (1 யோ. 3:2): நம்முடைய சரீரம் அவருடைய தன்மையையும், நம்முடைய ஆள் தத்துவம் அவருடைய சுபாவத்தையும், பாவங்கள் தொலைந்து, வரங்கள் பிரதிபலிக்கிற வாழ்க்கையையும் பெற்றுக்கொள்வோம்.
இயேசுவின் வருகை வரும்வரை இந்த எதிர்கால உருவ மாற்றத்திற்கு நேராய் நாம் இழுக்கப்படுகிறோம். தேவன் நம்மில் கிரியை செய்யும்போது படிப்படியாய் அவருடைய சாயலை நாம் தெளிவாய் பிரதிபலிக்கமுடியும் (2 கொரி. 3:18). நாம் தெரிந்துகொள்ளப்பட்ட நோக்கத்தை இன்னும் அடையவில்லை. ஆனால் கிறிஸ்துவைப் போல் மாறும்போது நம்முடைய நிஜமான அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.

நம்பிக்கையோடு காத்திருத்தல்
விடுமுறை நாட்களை கழிக்கச் சென்ற இடத்தில் எங்களுக்கு உதவிபுரிய ரொஜிலியோ என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, தேவன் அவருக்கு கலி என்னும் பேர்கொண்ட இரக்ககுணமுள்ள, விசுவாசத்தில் உறுதியான மனைவியை கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தபின்பு, மனநலிவு நோயினால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய சகோதரியின் குழந்தையையும் சேர்த்து பராமரிக்கவேண்டிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அதற்கு பின்பு, வயது முதிர்ந்த ரொஜிலியோவின் மாமியாரையும் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டிய அவசியமும் நேரிட்டது.
தேவன் பராமரிக்கும்படி அவர்களுடைய பொறுப்பில் கொடுத்த உறவுகளை அவருடைய மனைவியின் பொறுப்பில் நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, ரொஜிலியோ அதிகமான நேரம் வேலை பார்க்க முடிந்தது. கணவன் மனைவியாய் அவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பும், உறவுகளை பராமரிக்கும் அவர்களின் கரிசணை குணமும் என்னை ஈர்த்ததைக் குறித்து அவரிடம் தெரிவித்தபோது, “அவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சேவை செய்வதும் என்னுடைய மகிழ்ச்சி” என்று ரொஜிலியோ புன்சிரிப்புடன் தெரிவித்தார்.
ரொஜிலியோவின் வாழ்க்கை, பரந்த மனப்பான்மையோடு வாழ்தலின் மேன்மையையும் சுயநலமில்லாமல் உதவுவதின் மூலம் தேவனை சார்ந்திருத்தலையும் உறுதியளிக்கிறது. பவுல் அப்போஸ்தலர், “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்… நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்; பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” (ரோமர் 12:10-13) என்று தேவஜனத்தை ஊக்கப்படுத்துகிறார்.
நம்மால் அல்லது நாம் நேசிக்கிறவர்களால் மேற்கொள்ள முடியாத பிரச்சனைகளுக்குள் இந்த வாழ்க்கை நம்மை நடத்தலாம். ஆனால் தேவனுக்காய் காத்திருக்கும் இந்த நாட்களில் தேவன் நமக்கு கொடுத்துள்ள அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, நாம் தேவனுடைய தெய்வீக அன்போடு இணைந்துகொள்கிறோம்.