வகை  |  odb

சுதந்திரத்தோடு அலைவது

மூன்றாம் தலைமுறை விவசாயியான பாலா, “என் நாமத்துக்கு பயந்திருக்கும்... நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள்” (மல்கியா 4:2), என்பதை வாசிக்கும்போது மிகவும் உற்சாகமடைந்து, தேவன் அளிக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஜெபித்தார். தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட கன்றுகள் துள்ளி குதித்து அதி வேகமாக, உற்சாகத்தோடு வெளியேறுவதை தெளிவாக நினைவுக்கூர்ந்த பாலா தேவன் வாக்குப் பண்ணின உண்மையான சுதந்திரத்தைக் குறித்து புரிந்துகொண்டார். 

தேவனுடைய நமத்துக்குப் பயந்தவர்கள் மற்றும் அவருக்கு உண்மையாயிருக்கிறவர்களுக்கும், தங்களை மட்டுமே நம்பியிருக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி தீர்க்கதரிசி, மல்கியா 4ல் கொடுக்கப்பட்டுள்ள கற்பனைகளைப் பற்றி நானும் பாலாவின் மகளும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் இந்தக் கதையைப் பற்றி என்னிடம் கூறினாள் (4:1-2). மத போதகர்கள் உட்பட பலர் தேவனையும் அவருடைய நம்பிக்கையுள்ள வாழ்க்கைத் தரங்களையும் புறக்கணித்த நேரத்தில், இந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களை தேவனைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார் (1:12-14; 3:5-9). இந்த இரண்டு விதமான மக்களிடையே தேவன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் நாள் வருமென்று சொல்லி மக்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ மல்கியா அழைத்தார். சுதந்திரமான கன்றைப் போல, விசுவாசமுள்ளவர்கள் “நீதியின் சூரியன், செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு உதிக்கும்போது” அனுபவிக்கும் சொல்லிமுடியாத மகிழ்ச்சியை எதிர்பாராத விதத்தில் இந்தப் பகுதியில் மல்கியா ஒப்பிட்டுக் காட்டுகிறார் (4:2).

உண்மையுள்ள சுதந்திரம் எல்லா மக்களுக்கும் கிடைக்கப்பெறும் நல்லச் செய்தியைக் கொண்டுவரும் இயேசுவே இந்த வாக்குத்தத்தத்தை இறுதியாக நிறைவேற்றுபவர் (லூக்கா 4:16-21). ஒரு நாள் தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட கிரியைகளாய், இந்த சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். அங்கே சுதந்திரமாய் இருப்பது விவரிக்கமுடியாத மகிழ்ச்சியாய் இருக்கும்!

தவறான புரிந்துகொள்ளுதல் இல்லை

நம்முடைய வீடுகளில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் அலெக்ஸா மற்றும் சிரி போன்ற குரல் உதவி கருவிகள் சில நேரங்களில் நாம் சொல்வதை தவறாக புரிந்துக்கொள்ளுகிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை தன் குடும்பத்தில் புதிதாக வாங்கப்பட்ட இந்தக் கருவியிடம் குக்கிஸ்களைப் பற்றியும் பொம்மை வீட்டைப் பற்றியும் பேசினாள். சற்று நேரத்திற்குப் பிறகு, ஏழு பவுண்ட் குக்கிஸ்களும், 170 டாலர் மதிப்புக்கொண்ட பொம்மை வீடும் தங்கள் வீடு நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக அவள் தாய்க்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. லண்டனில் ஒரு பேசும் கிளி, தன்னுடைய உரிமையாளர் ஆன்லைனில் எதுவும் வாங்கவில்லை என்றாலும், அவருக்குத் தெரியாமல், தங்கப்பரிசுகள் உள்ள டப்பாக்களின் ஒரு பொட்டலத்தை ஆர்டர் செய்திருந்தது. ஒரு நபர் இந்தக் கருவியிடம் “வாழும் அரையின் விளக்குகளை இயக்க” சொன்னபோது “புட்டிங் அரை இங்கு இல்லை” என்று பதிலளித்தது.

தேவனிடம் நாம் பேசும்போது அத்தகைய தவறான புரிதல் அவரிடமில்லை. நாம் செய்யும் செயலைவிட நம்முடைய இருதயத்தை அவர் நன்கு அறிந்தபடியால் அவர் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துப்பார்த்து, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார். தேவன் நம்மை முதிர்ச்சியுள்ளவர்களாக்குவதற்கும், அவருடைய குமாரனைப் போல நாம் மாறுவதற்கும், தமது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாவிலுள்ள தேவாலயங்களுக்கு கூறினார் (ரோமர் 8:28). ஆவியானவரும் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்வது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (வச. 26-27).

உங்களை தேவனிடம் வெளிப்படுத்துவதற்கு சங்கடமாக இருக்கிறதா? என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று புரியவில்லையா? இருதயத்தில் இருந்து முடிந்ததைச் சொல்லுங்கள். ஆவியானவர் உங்களைப் புரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்.

உண்மை, பொய், கண்காணிப்பு

2018 பேஸ்பால் காலத்தில், களத்தில் இல்லாத விளையாட்டு வீரர்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனுக்கு, பயிற்சியாளர் ஒரு பந்தைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பயிற்சியாளர் அந்தப் பந்தை சிறுவனை நோக்கி எறியும்போது வேறொரு நபர் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் காணொளி புகழ்பெற்றதாகி விட்டது. செய்தி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அந்த மனிதனின் முரட்டுத்தனத்தை விமர்சித்தது. தவிர, அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு முழு நிகழ்வும் தெரியாது. இதற்கு முன்பு, ஒரு தவறாய் அடிக்கப்பட்ட பந்தை பிடிப்பதற்கு அந்த மனிதர் இளைஞனுக்கு உதவி செய்திருந்தார் மற்றும் அடுத்தடுத்து அவர்கள் வழியிலே வரும் பந்துகளைப் பகிர்ந்துக்கொண்டு பிடிக்க அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக உண்மையான நிகழ்வு வெளிவர இருபத்து நான்கு மணி நேரம் ஆனது. அதற்குள்ளாக கலவரக் கும்பல் அந்த குற்றமற்ற மனிதரை அடித்து, காயப்படுத்திவிட்டனர்.

அநேக நேரங்களில், நாம் துணுக்குளை மட்டும் வைத்துக்கொண்டு முழு உண்மைகளும் தெரிந்துவிட்டதாக நினைக்கிறோம். நம்முடைய நவீன அரைகுறை கலாச்சாரத்தில், முழு நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளாமல், வியத்தகு காணொலிகளையும், கோபமூட்டும் துணுக்குகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கண்டனம் செய்வது எளிது. இருந்தாலும் “அபாண்டமான சொல்லைப் பரப்ப வேண்டாம்” (யாத். 23:1) என்று வேதாகமம் எச்சரிக்கிறது. குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன், உண்மையைத் தெரிந்துக்கொள்ள, முடிந்த அனைத்தையும் நாம் செய்து, பொய்யில் பங்கேற்காமல் இருக்க உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விழிப்புணர்வு ஆவி மேற்கொள்ளும்போதும், உணர்வுகள் தூண்டப்படும்போதும், தீர்ப்பலைகள் பெருகும்போதும், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தவறுசெய்யும் கூட்டத்தைப் பின்தொடர்வதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (வச. 2).

இயேசுவில் விசுவாசிகளாயிருக்கும் நாம், அபாண்டமான சொல்லைப் பரப்பாமலிருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஞானத்தை வெளிப்படுத்தவும், நம்முடைய வார்த்தைகள் உண்மை என்பதை உறுதிப்படுத்த அவர் நமக்குத் தேவையானதை கொடுப்பாராக.

எதிர்பாராத விருந்தினர்

சாக் ஒரு தனிமையான ஆள். அவன் நகர வீதிகளில் நடந்து செல்லும்போது அவனை எதிர்க்கின்ற இரைச்சலை உணர்ந்தான். ஆனால் பிறகு அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அலெக்ஸாந்திரியாவிலுள்ள கிளெமண்ட் என்ற திருச்சபை தலைவர், “சாக் ஒரு முக்கியமான கிறிஸ்தவத் தலைவரும், சிசெரியாவில் ஒரு சபையின் போதகருமானார்” என்றார். ஆம், இயேசுவைப் பார்க்க வேணடுமென்று காட்டத்தி மரத்தில் ஏறின, வரி வசூலிக்கும் சகேயுவைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் (லூக்கா 19:1-10).

மரத்தில் ஏறுவதற்கு எது அவரைத் தூண்டியது? வரி வசூலிப்பவர்கள் துரோகிகளாகக் கருதப்பட்டனர். ஏனென்றால் ரோம அரசாங்கத்திற்கு சேவை செய்ய தங்கள் சொந்த மக்களிடமே மிக அதிகமாக இவர்கள் வரி வசூலித்தனர். அவர்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நற்பண்பு இயேசுவிடம் இருந்தது. தன்னையும் இயேசு ஏற்றுக்கொள்வாரா என்று சகேயு நினைத்திருக்கக் கூடும். அவன் குள்ளனாயிருந்தப்படியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியவில்லை (லூக்கா 19:3). ஒருவேளை இயேசுவைப் பார்க்க அவன் காட்டத்தி மரத்தில் ஏறியிருக்கலாம். 

இயேசுவும் சகேயுவைத் தேடிக்கொண்டிருந்தார். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துப் பார்த்து, அவனைக் கண்டு “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்றார் (வச. 5). இப்படி தள்ளப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகப் போவது மிகவும் அவசியம் என்று இயேசு எண்ணினார். கற்பனை செய்துப் பாருங்கள்! உலகத்தின் இரட்சகர் இயேசு, சமுதாயத்தில் தள்ளப்பட்டவருடன் நேரம் செலவிட விரும்பினார். 

ஒருவேளை நம்முடைய இருதயம், உறவுகள், அல்லது வாழ்க்கை சீர்படவேண்டுமோ, சகேயுவைப் போல நமக்கும் நம்பிக்கை உண்டு. நாம் அவரிடத்தில் திரும்பும்போது இயேசு ஒருபோதும் நம்மை புறக்கணிக்கமாட்டார். உடைந்ததையும், இழந்ததையும் அவர் திரும்பத் தந்து, நம்முடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுப்பார். 

கிறிஸ்துவுக்குள் உடையாமலிப்பது

லூயி செம்பரெனியுடைய இராணுவ விமானம் இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மோதியது. அதிலிருந்த பதினொரு பேர்களில் எட்டுப் பேர் மரித்தனர். லூயி மற்றும் மற்ற இரண்டு பேரும் உயிர்காக்கும் படகில் ஏறிக்கொண்டனர். அவர்கள் அந்தப் படகில் இரண்டு மாதங்கள், சுறாக்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டு, புயல்களைக் கடந்து, எதிராளி போர் விமானங்களின் குண்டுவீச்சிலிருந்து வரும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து, மீன்களையும், பறவைகளையும் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு திரிந்துக்கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு தீவில் அவர்கள் இறங்கினவுடன் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக லூயி அடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இரக்கமின்றி போர்க்கைதியாக வேலை செய்தார். அவருடைய குறிப்பிடத்தக்க கதை “அன்புரோக்கன்” என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

வேதாகமத்திலுள்ள உடைக்கப்படமுடியாத கதாபாத்திரங்களில் எரேமியாவும் ஒருவர். எதிராளிகளின் சதிச்செயல்களை சகித்துக்கொண்டார் (எரேமியா 11:18), கசையால் அடிக்கப்பட்டு, காவலிலே போடப்பட்டார் (20:2), அடிக்கப்பட்டு காவற்கிடங்கில் போடப்பட்டார் (37:15-16), கயிறுகளால் கட்டி உளையிலே இறக்கிவிட்டார்கள் (38:6). தேவன் அவரைக் காக்கும்படி அவரோடு கூட இருப்பதாக வாக்குபண்ணினதால் அவர் உயிர்பிழைத்தார் (1:8). “நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுவதில்லை” (எபிரெயர் 13:5) என்று தேவன் அதேபோல ஒரு வாக்குத்தத்தத்தை நமக்கும் கொடுத்திருக்கிறார். எரேமியாவையோ, நம்மையோ, பிரச்சனை வராதபடி காப்பாற்றுவேன் என்று வாக்களிக்கவில்லை; மாறாக, பிரச்சனைகளைக் கடக்க நம்மோடுகூட இருப்பதாக வாக்களித்திருக்கிறார். 

லூயி தேவனுடைய பாதுகாப்பைக் கண்டுக்கொண்டார். போருக்குப் பின் தன்னுடைய வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். தன்னை சிறைப்பிடித்தவர்களை மன்னித்து, சிலரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார். நாம் எல்லா பிராச்சனைகளையும் தவிர்க்கமுடியாவிட்டாலும், நாம் அவைகளோடு தனிமையாக அவதிப்பட வேண்டியதில்லை என்று லூயி உணர்ந்தார். இயேசுவோடு அவைகளை நாம் எதிர்கொண்டால் நாம் உடைக்கப்பட முடியாதவர்களாகி விடுவோம்.