என்னுடைய இளம்பிராயத்தில் என்னுடைய தாயார் ஓர் சுவரோவியத்தை எங்களுடைய அறையின் சுவரில் வரைந்தார்கள், அது நெடுநாட்களாய் அங்கேயேயிருந்தது. அது தகர்க்கப்பட்ட ஒரு பழமையான கிரேக்க ஆலயம், அதின் ஓரத்தில் வெள்ளை நிற தூண்கள் நிற்க, நொறுக்கப்பட்ட நீருற்று குழாய்கள், தகர்க்கப்பட்ட சிலைகள் அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்தது. கிரேக்க கட்டடக்கலையின் பிரம்மாண்டத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, எது அந்த கோயிலை தகர்த்திருக்கவேண்டும் என்று யோசித்தேன். அந்த சிதைவுகளுக்குள் ஒரு காலத்தில் ஓங்கியிருந்த அந்த நாகரீகத்தின் செழிப்பையும் பிரம்மாண்டத்தையும் ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தேன்.

இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பாவமான விரும்பத்தகாத சீரழிவுகள் நம்மை தொந்தரவு செய்யலாம். இந்த தேசங்களெல்லாம் தேவனை நிராகரித்ததுதான் அதற்கான காரணம் என்று நாம் சுலபமாய் சொல்லிவிடலாம். ஆனால் நம் பார்வையை உள்நோக்கி செலுத்தவேண்டாமா? நம்முடைய இருதயத்தில் உள்ளதை பொருட்படுத்தாமல் மற்றவர்களுடைய பாவ வழிகளை குற்றப்படுத்தும் நம்மை வேதம் மாயக்காரர்கள் என்று எச்சரிக்கிறது (மத்தேயு 7:1-5). 

சங்கீதம் 32, நம்முடைய பாவத்தைப் பார்த்து, அறிக்கையிட சவால்விடுகிறது. நம்முடைய பாவத்தை உணர்ந்து, அறிக்கையிட்டு, அந்த குற்றமனசாட்சியிலிருந்து விடுபட்டால், மெய்யான மனந்திரும்புதலின் மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கமுடியும் (வச. 1-5). தேவன் நமக்கு அளிக்கும் முழுமையான மன்னிப்பில் மகிழ்ந்திருப்பதோடு, பாவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் நபர்களுக்கும் அந்த நம்பிக்கையை கொடுக்க முயற்சிக்கலாம்.