பிப்ரவரி 2020ல் கோவிட் தொற்று பரவத்துவங்கிய தருணத்தில், ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தியது. மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நம்முடைய வேலை, பயணம் மற்றும் ஷாப்பிங் பழக்கத்தை விட்டுவிட்டு, நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொள்வதை விரும்புவோமா? மேலும் அவள், “இது மருத்துவ பரிசோதனை மட்டுமல்ல, நாம் வெளியே போகாமல் மற்றவர்களை பாதுகாக்கும் உணர்வு” என்று எழுதுகிறாள். திடீரென்று நல்லொழுக்கத்தின் தேவை முதல் பக்க செய்தியாய் மாறுகிறது. 

நம்மைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்போமாகில் மற்றவர்களின் தேவையை உணர முடியாது. நம்முடைய வேறுபாடுகளை மாற்றும் அன்பையும், சோகத்தை மாற்றும் சந்தோஷத்தையும், கவலையை மாற்றும் சமாதானத்தையும், மனக்கிளர்ச்சியை மாற்றும் நீடிய பொறுமையையும், மற்றவர்களிடத்தில் காண்பிக்கும் தயவையும், மற்றவர்களின் தேவைகளை சந்திக்கும் நற்குணத்தையும், நம் வாக்கை நிறைவேற்றுவதில் விசுவாசமும், கோபத்திற்கு பதிலாக சாந்தத்தையும், சுய நலத்திற்கு அப்பாற்பட்ட இச்சையடக்கத்தையும் பரிசுத்த ஆவயானவரிடத்தில் கேட்கலாம் (கலாத்தியர் 5:22-23). இவைகள் எல்லாவற்றிலும் நாம் நேர்த்தியாய் செயல்படமுடியாத பட்சத்தில், ஆவியானவரின் நற்பண்புகளை தொடர்ந்து நாடுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் (எபேசியர் 5:18).

செய்யப்படவேண்டிய நேரத்தில் ஒன்றை செய்யும் திறனையே பரிசுத்தம் என்று ஒரு ஆசிரியர் குறிப்பிடுகிறார். நோய் தொற்று காலத்தில் மட்டுமல்லாது, இந்த பரிசுத்தம் எல்லா காலகட்டத்திலும் அவசியப்படுகிறது. மற்றவர்களுக்காய் தியாகமாய் வாழும் குணம் நம்மிடத்தில் உள்ளதா? பரிசுத்த ஆவியானவர் செய்யப்படவேண்டியதை செய்யும் வல்லமையினால் நம்மை நிரப்பட்டும்.