“இரகசியங்களை சொல்லுதல்” என்னும் தன்னுடைய சிறப்பான படைப்பில், ப்ரெட்ரிக் ப்யூச்னர், “பேசாதே, நம்பாதே, உணராதே என்னும் விதிகளோடு நாம் வாழுகிறோம்; அதை மீறுபவனுக்கு ஐயோ” என்கிறார். அவர், “ஒரு சில காரணங்களால் செயலிழந்து நிற்கிற குடும்பங்களின் எழுதப்படாத விதிகளைக்” குறித்து விவரிக்கிறார். இந்த விதியானது, அவருடைய சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட அவருடைய தகப்பனாரின் தற்கொலையைக் குறித்து பேசவும் வருந்தவும் அவரை அனுமதிக்கவில்லை. அவருடைய வலி மிகுந்த தருணத்திலும் யாரையும் நம்பவிடாமல் அவரைத் தடுத்தது.

அதை தொடர்புபடுத்தி பார்க்கமுடியுமா? நம்மில் பலர் ஒரு சில விஷயங்களில் நம்முடைய பாதிப்பைக் குறித்து மௌனம் சாதிக்கும் தவறான அன்பின் கண்ணோட்டத்தோடு வாழ பழகிக்கொண்டோம். அந்த வகையான அன்பு ஒருவிதமான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அது ஒருவகையான அடிமைத்தனம். 

நாம் இழந்துவிடுவோமோ என்ற பயத்தினிமித்தம் சிக்கியுள்ள இந்த நிபந்தனைக்குட்பட்ட அன்பிலிருந்து, இயேசுவின் அன்பு எவ்வாறு வித்தியாசமாயுள்ளது என்பதைப் பார்க்க நாம் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் அன்பின் மூலமாய் நாம் பயத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதையும் (ரோமர் 8:15), நமக்கு வாக்குப்பண்ணப்பட்ட மகிமையான சுதந்திரத்தை புரிந்துகொள்ளவும் (வச.21) முடியும் என்றும் பவுல் கூறுகிறார். உண்மையாய், ஆழமாய் நிபந்தனையில்லாமல் நேசிக்கப்படுவதை நாம் உணர்ந்தால். பயமில்லாத வாழ்க்கையை வாழ வெளிப்படையாய் பேசவும் நம்பவும் உதவியாயிருக்கும்.