எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மாரியன் ஸ்ட்ரோட்கட்டுரைகள்

எதை நான் தருவேன்?

 

கிறிஸ்துமஸிற்காக தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கும் பொறுப்பை பெற்ற சிலர் அந்த வருடம் ஓர் புதுமையான வழியை கையாண்டனர். “கிறிஸ்துமஸ் பட்டியல்” என்ற கருப் பொருளின் அடிப்படையில் அலங்கரித்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்காமல், ஒவ்வொரு நபரிடமும் ஓர் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஒரு சீட்டை கொடுத்தனர். இயேசுவிடத்திலிருந்து என்ன பரிசு வேண்டும் என்று ஒரு பக்கத்திலும், பின்பக்கத்தில் அவருடைய பிறப்பைக் கொண்டாடி அங்கீகரிக்கும் விதத்தில் அவருக்கு என்ன பரிசு கொடுக்க போகின்றனர் என்றும் எழுதவேண்டும். அதை வைத்து ஆலயத்தை அலங்கரிக்க எண்ணினர்.

நீங்கள் இதை செய்வீர்களானால் என்ன பரிசைக் கேட்பீர்கள், எதைக் கொடுப்பீர்கள்? வேதாகமத்தில் அநேக யோசனைகளைக் காணலாம். தேவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பதாக வாக்களித்துள்ளார். அதனால் நாம் ஓர் புதிய வேலையைக் கேட்கலாம், பணத் தேவைகளை சந்திக்கும்படியாகவும், நம்முடைய அல்லது மற்றவருடைய சரீர சுகத்திற்காகவும், குடும்பங்களில் நல்லுறவு மேம்படவும் நாம் வேண்டிக்கொள்ளலாம். மேலும் தேவனுடைய பணியைச் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பரிசு என்ன என்று நாம் எண்ணலாம். அவற்றில் பல ரோமர் 12 மற்றும் 1 கொரிந்தியர் 12ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்னும் ஆவியின் கனி நம்வாழ்வில் இன்னும் அதிகமாக வெளிப்பட விரும்புவோம் (கலா. 5:22-23).

அவரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகச்சிறந்த பரிசு - தேவனின் ஈவாகிய குமாரனும் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து தான். அவரின் மூலம் பாவ மன்னிப்பையும், மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கையையும், சதாகாலமும் நீடிக்கும் நித்திய வாழ்வின் வாக்குறு தியையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே அவருக்கு நம்மால் தரக்கூடிய மிகச் சிறந்த பரிசு என்னவென்றால் நம்முடைய இருதயம் தான்.

எல்லோருக்கும் நல்வரவு!

திருச்சபையின் வாலிபருக்கான திரைப்படம் காண்பிப்பதற்காக அநேக நாட்களாக ஜெபத்துடன் காத்திருந்தோம். காண்பிப்பதற்கான இரவும் வந்தது. கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் அந்த நாளுக்கான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சூட்டடுப்பில் பிஸ்ஸாக்கள் (ரொட்டி போன்ற ஒருவகை உணவு) சூடாகிக் கொண்டிருந்தன. நியூயார்க்கில் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஓர் இளைஞர் குழுவினர் ஒரு இளம் போதகர் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்ட விதத்தை விளக்கும் அந்தத் திரைப்படம், மேலும் அநேக வாலிபப்பிள்ளைகள் திருச்சபையின் வாலிபக்குழுவில் சேர்வதற்கு காரணமாக இருக்குமென்று, அந்தத் திருச்சபையின் வாலிபர்களின் போதகர் ஸ்டீவ் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால், அந்த மாலைப்பொழுதில் மிக முக்கியமான கால்பந்தாட்டப் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படப்போவதை அவர் அறியவில்லை. ஆகவே அவர் எதிர்பார்த்தை விட குறைவாகவே வாலிபர்கள் அன்று வந்தார்கள். மனதிற்குள்ளாக பெருமூச்சுவிட்டு, அறையிலிருந்த விளக்குகளை ஒளி மங்கச்செய்து ஸ்டீவ் திரைப்படத்தைப்போட ஆயத்தமானார். அப்பொழுது திடீரென தோல்உடைகளை அணிந்த மோட்டார் பைக் குழுவைச் சேர்ந்த 5 வாலிபர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். ஸ்டீவின் முகம் பயத்தினால் வெளிறியது.

டீ டாக் (T Dog) என்று அழைக்கப்பட்ட அந்த குழுவின் தலைவன், ஸ்டீவைப் பார்த்து அவன் தலையை துலுக்கி, “இந்தத் திரைப்படம் அனைவருக்கும் இலவசம்தானே?” என்று கூறினான். “திருச்சபையின் வாலிபர் குழுவிற்கு மட்டும்தான்” என்று ஸ்டீவ் கூறப்போன சமயத்தில் டீ டாக் (T Dog) என்ற அந்தத் தலைவன் கீழே குனிந்து இயேசு என்ன செய்வார்? என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த WWJD (What would Jesus Do) ஒரு கைப்பட்டையை எடுத்து, “இது உங்களுடையது தானே நண்பா?” என்று கேட்டான். மிகவும் சங்கடமான உணர்வுடன், ஆமாம் என்று ஸ்டீவ் கூறினார். பின் அங்கு வந்த புதிய விருந்தாளிகள் இருக்கையில் அமரும் வரை காத்திருந்தார்.

ஸ்டீவின் நிலையில் நீங்கள் எப்பொழுதாவது இருந்ததுண்டா? இயேசுவைப்பற்றிய நற்செய்தியை பிறருக்கு அறிவிக்க நீங்கள் ஆவலாக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்மனதில் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியவர்கள் “இவர்கள்தான்” என்ற பட்டியலை வைத்திருக்கலாம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, அவர் பழகின மக்களைப்பற்றி யூத மதத்தலைவர்கள் அவரைக் குற்றப்படுத்தினார்கள். ஆனால் பிறரால் வேண்டாம் என்று தள்ளப்பட்ட மக்களை இயேசு அன்புடன் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அவர்களுக்கு அவர் அதிகமாக தேவைப்படுகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார் (லூக். 5:31–32).

இடர்பாடுகள் மத்தியில் மகிழ்ச்சியாயிருங்கள்

எமில் ஒரு வீடற்ற மனிதன். அவன் ஒவ்வொரு நாளும் சாலையிலுள்ள நடைபாதையை குனிந்து பார்த்துக்கொண்டே நடந்து ஆண்டு முழுவதையும் கழித்தவன். யாராவது அவனை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களை நேருக்கு நேராக சந்திக்க வெட்கப்பட்டான். ஏனெனில் அவனது வாழ்க்கை எப்பொழுதும் இதுபோல நடைபாதையில் கழிக்கப்படவில்லை. அவன் சாலையில், கீழே விழுந்து கிடக்கும் காசு அல்லது பாதி புகைத்து வீசப்பட்ட சிகரெட் துண்டு கிடைக்குமாவென்று அவ்வாறு குனிந்தே நடந்தான். அவ்வாறு அவன் தொடர்ந்து குனிந்தே நடப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டதால், அவனுடைய முதுகெலும்புத் தண்டும் நிலையாக…

கற்றுக்கொண்ட பாடம்

விதவையான மேரி, மோசமான உடல்நிலை பாதிப்பினால் பலவிதமான உடல்நலக் கேடுகளை சந்தித்த பொழுது அவளுடைய மகள், அவளுடைய வீட்டுடன் இணைந்துள்ள புதிய “பாட்டிகள் அறையில்” வந்து தங்க அவளுக்கு அழைப்பு விடுத்தாள். சிநேகிதிகளையும், அவளுடைய பிற குடும்பத்தினரையும் விட்டுவிட்டு பலதூர மைல்களுக்கு அப்பால் செல்லவேண்டியதிருந்தாலும், தேவன் அளித்த பராமரிப்பிற்காக மேரி சந்தோஷப்பட்டாள்.

இந்த புதிய வாழ்க்கை முதல் ஆறு மாதங்கள் மகிழ்ச்சியாகவும், மனரம்மியமாகவும் கடந்த நிலையில், தான் இங்கு வந்தது உண்மையாகவே தேவனுடைய திட்டம் தானா என்ற சந்தேகம் என்னும் சோதனையில் விழுந்து தனக்குள்ளே…

வளருவதற்கு ஏற்ற தருணம்

டெப்பியின் புதிய வீட்டின் சமையலறையில் இருண்ட ஒரு மூலையில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு செடியைக் கண்டுபிடித்தாள். தூசுபடிந்த கிழிந்து அதன் இலைகளைப் பார்த்தபொழுது, அச்செடி மாத் ஆர்க்கிட் வகையைச் சேர்ந்தது போல இருந்தது. புதிய பூக்கும் தண்டு, அச்செடியில் வளர்ந்தால் அச்செடி பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்குமென்று அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்தச் செடியை ஜன்னலின் அருகில் கொண்டு போய் வைத்து, அதின் காய்ந்த இலைகளெல்லாம் எடுத்துப்போட்டு, அச்செடிக்கு தண்ணீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை வாங்கிப்போட்டாள். வாரா வாரம் அச்செடியை கண்காணித்து…

கிறிஸ்துவின் சுகந்த வாசனை

நம்மில் உள்ள ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு மிகவும் கூர்மையான ஞாபகசக்தியை நமக்கு உணர்த்துகிறது? என்னைப் பொறுத்தவரையில் மோப்பம் என்னும் உணர்வுதான் என்று நான் நிச்சயமாகக் கூறமுடியும். ஒரு வகையான சூரிய எண்ணையின் மணம் என்னை உடனே பிரெஞ்சுக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுவிடும். “கோழிக்கறி கூட்டு” என் சிறு பிராயத்தில் பாட்டி வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டும். “பைன்” பற்றிய ஓர் வார்த்தை “கிறிஸ்மஸிற்கும்” முகச்சவரம் செய்தபின் பயன்படுத்தும் ஒருவித வாசைன திரவியம் என் மகளின் பதின் வயதை ஞாபகத்திற்கு கொண்டு வரும்.

கொரிந்தியர் கிறிஸ்துவுக்கு…

தேவனுடைய வழி

நாம் கட்டாயம் தேவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இரு சிறு பிள்ளைகளைத் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நாங்கள் எங்கள் வீட்டில் வைத்து வளர்க்க கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது, அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. வயதுவந்த எங்கள் மூன்று பிள்ளைகளுடன், பள்ளிச் செல்லாத இரண்டு பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருப்பது எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதாகவும், குடும்பம் இருமடங்கு பெரிதானதால் வேலைப்பளுவும் அதிகமாகும் நிலை ஏற்படும். ஊழியப் பாதையில் நீண்ட கால அனுபவமுள்ள மிஷனரி ஏமி கார்மிக்கேல் அம்மையார் எழுதிய “எங்கள் அனுதின…

தயவு செய்து உள்ளே வாருங்கள்

ஜென்னியின் வீடு நகர்ப்புறத்திலுள்ள ஒரு தெருவில் இருந்தது. போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பொழுது, அநேக வாகன ஓட்டிகள் அருகிலுள்ள பிரதான சாலையையும் அதிலுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகளையும் தவிர்ப்பதற்காக, இந்த ஒதுக்கு புறமான சாலையை பயன்படுத்தினார்கள். அதனால் மிகவும் மோசமாக பழுதடைந்த அந்த சாலையை பழது பார்ப்பதற்காக ஒரு சில வாரங்களுக்கு முன்பாக அநேக பணியாட்கள் வந்தார்கள். அவர்கள் அநேக தடுப்புகளையும், உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்பட்ட பலகையுடனும் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் “சாலையை பழுதுபார்த்து முடிக்கும் வரைக்கும் எனது…

அஜாக்கிரதையான வார்த்தைகள்

சமீபகாலமாக மிகவும் நோய்வாய்பட்டிருந்த என்னுடைய மகளை அவளுடைய கணவன் அவளுக்கு நல்ல துணையாய் இருந்து அவளை மிக அற்புதமாய்க் கவனித்துக் கொண்டான். அதைக் கண்டு, “உன்னிடமுள்ள பெரிய பொக்கிஷம் உன் கணவனே!” என்றேன்.

அதற்கு அவள் புன்முறுவலுடன், “எங்களுடைய திருமணத்திற்கு முன் நீங்கள் அப்படி நினைக்கவில்லையே”, என கூறினாள். அது உண்மைதான். இசில்டாவும் (Icilda) பிலிப்பும் (Philip) திருமணம் செய்ய முடிவு செய்த போது நான் கவலையுற்றேன். அவர்கள் இருவரும் வெவ்வேறு குணநலனுடையவர்கள். நாங்கள் கலகலப்பான பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பிலிப்பு மிகவும்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.