Archives: ஆகஸ்ட் 2022

வாழ்நாள் பாடம்

ஷிபுமோனும் எலிசபெத்தும் கேரள மாகாணத்தின் பசுமையான ஊரிலிருந்து, டெல்லியின் புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்து, பாம்பு பிடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு அவ்வளவு யாரும் சென்றதில்லை. ஆனாலும் அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தொழிலைத் தொடரக்கூடாது என்பதற்காக இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

 யோய்தா என்னும் பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத ஒன்று. ஆனால் அதற்கு தேவனுக்கான வாழ்நாள் அர்ப்பணம் என்று அர்த்தம். நேர்த்தியாக ஆட்சி செய்த யோவாஸ் ராஜாவின் நாட்களில் இவன் ஆசாரிய ஊழியம் செய்தான் - யோய்தாவிற்காய் நன்றி. யோவாஸ் ஏழு வயதாயிருக்கும்போது, அவரை ராஜாவின் ஸ்தானத்திற்கு அபிஷேகம் பண்ணியது ஆசாரியனாகிய இந்த யோய்தா (2 இராஜ. 11:1-16). ஆனால் இது அதிகார பறிப்பு இல்லை. யோவாஸின் முடிசூட்டு நிகழ்வில் யோய்தா, “அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கை பண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும்” செய்தான் (வச. 17). அவன் தேசத்தின் மீது சீர்திருத்தத்தை ஏற்படுத்தினான். “யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்” (2 நாளாகமம் 24:14). அவனுடைய அர்ப்பணிப்பிநிமித்தம், “அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்” (வச. 16).

தேவனை மையமாய் வைக்கும் இந்த வாழ்க்கை முறையை, “ஒரே பாதையில் நிலையான கீழ்ப்படிதல்” என யூஜின் பீட்டர்சன் குறிப்பிடுகிறார். புகழ், பதவி மற்றும் சுயநலத்தினால் கறைபடிந்திருக்கிற உலகத்தில் இவ்வகையான கீழ்ப்படிதல் அவசியப்படுகிறது.

சத்தியத்தை பறைசாற்றுதல்

கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில், முதியவர்கள் பலர் தங்கள் பேரப்பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். அதிலிருந்து மீளுவதற்கு அவர்கள் புதிய வழியை கண்டுபிடித்தனர். முதியவர்களில் பலர் சமூக ஊடகங்களின் உதவியோடு தங்கள் பேரப்பிள்ளைகளோடு தங்களுடைய உறவை வலுப்படுத்தினர். காணொலி ஊடகங்கள் வாயிலாக பலர் குடும்ப ஜெபங்களையும் செய்தனர். வேதாகமத்தின் சத்தியத்தை பெற்றோரும், முதியவர்களும் அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியான வழியில் கொடுப்பதென்பது, தங்களுடைய சந்ததிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழியாகும். உபாகமம் 4இல், “உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும்,” “அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும்” (வச. 10) என மோசே ஜனங்களை எச்சரிக்கிறார். மேலும் இந்த

காரியங்களை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சொல்லுவதின் மூலம் அவர்கள் தேவனை கனப்படுத்துவார்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் சத்தியத்தின்படி வாழ்வார்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

நம்முடைய குடும்ப உறவுகளை நம்முடைய மகிழ்ச்சிக்காய் தேவன் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில், அவ்வுறவு தேவனுடைய ஞானத்தை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவும் “நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக(வும்)” (2 தீமோத்தேயு 3:16-17) வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி, செல் அழைப்பு, காணொலி மூலம் அல்லது நேரடியாகவோ, அடுத்த தலைமுறையினருக்கு நாம் தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் தேவனை ருசிபார்க்க நாம் உதவுகிறோம்.

இரு வீடுகள்

வீடுகளின் ஸ்திரத்தன்மையை பரிசோதிக்கத் தீர்மானித்த பொறியாளர்கள், மூன்று வகையான வீடுகளைக் கட்டி, அதை 8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தின் மூலம் பரிசோதித்தனர். அதில் களிமண் சுவர்களால் கட்டப்பட்ட வீடு முற்றிலும் அழிந்துபோனது. மண் சாந்து மற்றும் செங்கல் சுவர்களால் கட்டப்பட்ட வீடும் விழுந்துபோனது. ஆனால் நல்ல தரமான சிமெண்ட் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடானது பலத்த விரிசல்களோடு அப்படியே நின்றது. “இதில் நீங்கள் எந்த வீட்டில் வசிக்க விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியோடு பொறியாளர் இந்த ஆய்வினை நிறைவுசெய்தார். 

தேவனுடைய இராஜ்யத்தின் மேன்மையைக் குறித்த இயேசுவின் போதனையின் இறுதியில், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24) என்று குறிப்பிடுகிறார். பலத்த காற்று வீசியபோதும் அந்த வீடு நிலைத்து நின்றது. ஆனால் அதற்கு முரணாக, தன்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26) என்றும் குறிப்பிடுகிறார். பெருங்காற்று வீசியபோது, புயலின் கோரத்தை தாங்க முடியாமல் அந்த வீடானது விழுந்துபோனது.  

இயேசு மக்களுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறார்: கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நிலையான அஸ்திபாரத்தில் வீட்டைக் கட்டுவது அல்லது சுய வழியில் வீட்டைக் கட்டுவது. நாம் சரியானதைத் தெரிந்தெடுக்க வேண்டும். நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீதும், அவருடைய வார்த்தைகளின் மீதும் கட்டுகிறோமா? அல்லது சுய வழியில் கட்டுகிறோமா? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீது கட்ட முற்படுவோம்.

 

ஒளிரும் பரதேசிகள்

2020ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், சான் டியாகோ கடற்கரையின் ஒளிரும் அலைகளின் மீது, மிதவைதட்டின் உதவியோடு வீரர்கள் உலா வந்தனர். இந்த ஒளிரும் அலைகள், பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய உயிரிகளால் ஏற்படுத்தப்பட்டவைகள். அதற்கு கிரேக்கத்தில், “பரதேசி” அல்லது “சுற்றித் திரிபவன்” என்று பொருள். இந்த உயிரிகள் பகல் நேரத்தில், சிவப்பு அலைகளை உருவாக்கி அவற்றை இரசாயன ஆற்றலாக மாற்றும் சூரிய ஒளியை உள்வாங்குகிறது. இரவில் அவை நீல நிற மின்சார ஒளியை உருவாக்கும்.

பரலோகவாசிகளாகிய கிறிஸ்தவர்கள், பூமியில் வாழும் நாட்களில் இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும், பரதேசிகளாகவும் சுற்றித் திரிபவர்களாகவுமே வாழுகிறார்கள். தேவன் நமக்கு வகுத்திருக்கிற திட்டத்தை கடினமான சூழ்நிலைகள் தொந்தரவுசெய்யும்போது, உலகத்தின் ஒளியான இயேசுவைப் போல இருளில்  பிரகாசிக்கும் ஒளியாய் பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தேவனோடு இருக்கிற உறவு மற்றும் அவர் மூலமாய் நமக்கு உண்டாகும் நீதியைவிட மேன்மையானது வேறு இல்லை (பிலிப்பியர் 3:8-9). இயேசுவை அறிகிற அறிவும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையும், பாடுகளின் மத்தியில் நம்முடைய வாழ்க்கை முறையை பாதிக்கிறது (வச. 10-16).

தேவகுமாரனோடு நாம் அனுதினமும் நேரம் செலவிடும்போது, கிறிஸ்துவின் சுபாவத்தை பிரதிபலிக்கும் வகையில் சவால்களை சந்திக்கும் சத்தியத்தை அறிகிற அறிவிற்கு நேராய் ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் (வச. 17-21). நாம் பரதீசு சேரும் நாள்வரை, தேவனுடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்காய் நாம் செயல்படமுடியும்.

இரும்பைப் போல் வலிமையான

இரும்பொறை வண்டுகள் என்று அழைக்கப்படும் வண்டுகளின் கடினமான வெளிப்புற அமைப்பு அதை மற்ற உயிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட வகை, மிக அதிகமான அழுத்தத்தையும் தாங்கக்கூடியவை. அந்த வண்டுகளின் வெளிப்புற ஓடானது, அதிக அழுத்தத்தின் போது உடைந்து நொறுங்காமல் விரிவடையக்கூடிய தன்மையுடையது. அதனுடைய தட்டையான அடிப்பக்கம், விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனுடைய உடல் எடையைக் காட்டிலும் 40,000 மடங்கு அதிக அழுத்தத்தை அதனால் தாங்க முடியும் என அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.  

இந்த பூச்சியினத்தை தேவன் எந்த அளவிற்கு பாதுகாப்பாய் வடிவமைத்தாரோ, அதே அளவிற்கு எரேமியாவையும் பாதுகாப்போடு தேவன் நடத்தினார். இஸ்ரவேலுக்கு பிரியமில்லாத செய்தியை அறிவிக்கப்போகும் இந்த தீர்க்கதரிசி அதிகபட்சமான அழுத்தத்தை சகிக்கவேண்டியுள்ளதால், தேவன் அவரை “இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும்” (எரேமியா 1:18) ஆக்குவேன் என்று வாக்குப்பண்ணினார்.

தீர்க்கதரிசியை யாரும் வீழ்த்தவோ, செயலிழக்கசெய்யவோ, மேற்கொள்ளவோ முடியாது. தேவனுடைய பிரசன்னத்தினாலும் பாதுகாப்பினாலும் அவருடைய வார்த்தை உறுதியாய் ஸ்தாபிக்கப்படும். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எரேமியா, தவறாய் குற்றஞ்சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, கிணற்றில் தூக்கி எறியப்பட்டு துன்பங்களை அனுபவித்தாலும், அவன் ஜீவித்தான். தன்னுடைய மன ரீதியான அழுத்தத்தையும் மேற்கொண்டு எரேமியா ஜெயமெடுத்தான். சந்தேகமும் துயரமும் அவனை ஆட்கொள்ள நேரிட்டது. தொடர்ந்த நிராகரிப்பும், பாபிலோனிய படையெடுப்பைக் குறித்த பயமும் அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. எரேமியாவின் ஆவியும் சாட்சியும் உடைக்கப்படாவண்ணம் தேவன் எரேமியாவுக்கு தேவன் தொடர்ந்து உதவி செய்தார்.  

தேவன் நமக்கு கொடுத்த பணியில் நாம் சோர்வுற்றாலோ அல்லது பின்வாங்கினாலோ, எரேமியாவின் தேவன் நம் தேவன் என்பதை நினைவில் கொள்வோம். அவர் நம்மை இரும்புத்தூணாய் மாற்றி, நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலனை விளங்கச் செய்வார் (2 கொரிந்தியர் 12:9).