கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில், முதியவர்கள் பலர் தங்கள் பேரப்பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். அதிலிருந்து மீளுவதற்கு அவர்கள் புதிய வழியை கண்டுபிடித்தனர். முதியவர்களில் பலர் சமூக ஊடகங்களின் உதவியோடு தங்கள் பேரப்பிள்ளைகளோடு தங்களுடைய உறவை வலுப்படுத்தினர். காணொலி ஊடகங்கள் வாயிலாக பலர் குடும்ப ஜெபங்களையும் செய்தனர். வேதாகமத்தின் சத்தியத்தை பெற்றோரும், முதியவர்களும் அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியான வழியில் கொடுப்பதென்பது, தங்களுடைய சந்ததிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழியாகும். உபாகமம் 4இல், “உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும்,” “அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும்” (வச. 10) என மோசே ஜனங்களை எச்சரிக்கிறார். மேலும் இந்த

காரியங்களை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சொல்லுவதின் மூலம் அவர்கள் தேவனை கனப்படுத்துவார்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் சத்தியத்தின்படி வாழ்வார்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

நம்முடைய குடும்ப உறவுகளை நம்முடைய மகிழ்ச்சிக்காய் தேவன் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில், அவ்வுறவு தேவனுடைய ஞானத்தை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவும் “நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக(வும்)” (2 தீமோத்தேயு 3:16-17) வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி, செல் அழைப்பு, காணொலி மூலம் அல்லது நேரடியாகவோ, அடுத்த தலைமுறையினருக்கு நாம் தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் தேவனை ருசிபார்க்க நாம் உதவுகிறோம்.