Archives: டிசம்பர் 2020

வாழ்க்கையின் வெடிகள்

புத்தாண்டு தினத்தன்று உலகெங்கிலும் உள்ள நகரம் மற்றும் மாநகரங்களில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடிக்கும்போது, அதனுடைய சத்தம் நோக்கத்துடன் அதிகமாக இருக்கும். உற்பத்தியாளர்கள் கூறுகையில், அவற்றின் இயல்பால் ஒளிரும் பட்டாசுகள் வளிமண்டலத்தை பிளவுபடுத்துவதாக இருக்கும். 'ரிப்பீட்டர்ஸ்" அதாவது ஒரே சமயத்தில் மீண்டும் மீண்டும் வெடிப்பவை, குறிப்பாக தரையில் வெடிக்கப்படும்போது அதிக சத்தத்துடன் வெடிக்கும்.

தொல்லைகள் நம் இதயங்கள், மனங்கள் மற்றும் வீட்டின் மூலமாக ஏற்றம் பெறலாம். வாழ்க்கையின் பட்டாசுகள், குடும்பப் பிரச்சனைகள், உறவுப் பிரச்சனைகள், வேலை சவால்கள், நிதி நெருக்கடி, தேவாலயத்தில் பிரிவுகள் - இவைகள் நம்முடைய உணர்வு சூழலை பாதித்து ஒரு பெரிய வெடியைப் போல வெடிக்கும்.

இப்படிப்பட்ட ஒரு சலசலப்புக்கு மேலே நம்மை தூக்கி நிறுத்துபவர் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்முடைய சமாதானக் காரணர் என்று பவுல் எபேசியர் 2:14ல் எழுதுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் உறுதியாக நிற்கும்போது, அவருடைய சமாதானம் எப்படிப்பட்ட இடையூரைக் காட்டிலும் மகா பெரியது. எந்த ஒரு கவலை, காயம் மற்றும் ஒற்றுமையின்மையின் சத்தத்தையும் அமைதிப்படுத்தும்.

இது யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் ஒரு ஆற்றல் மிக்க உறுதிமொழியாய் இருந்திருக்கும். அவர்கள் ஒருகாலத்தில் 'இந்த உலகத்தில் நம்பிக்கையில்லாமலும், தேவனில்லாமலும் வாழ்ந்து வந்தனர்" (வச. 12). இப்போது அவர்கள் துன்புறுத்தலின் அச்சுறுத்தல்களையும், அவர்களுக்குள்ளே பிரிவினையின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கிறிஸ்துவினால் அவர்கள் தேவனுக்கும், அதன் விளைவால் ஒருவருக்கொருவர் அவருடைய இரத்தத்தினாலே நெருங்கி கொண்டுவரப்பட்டனர். 'அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினைர்யாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் (வச. 14).

ஒரு புதிய ஆண்டை நாம் தொடங்கும்போது, அமைதியின்மை மற்றும் வானவெளியில் எப்போதும் உருட்டிக்கொண்டிருக்கும் பிரிவினையின் அச்சுறுத்தல்களிலிருந்து வாழ்க்கையின் இரைச்சல்மிக்க சோதனைகளிலிருந்து நாம் எப்போதும் இருக்கிற சமாதானத்திற்கு திரும்பக் கடவோம். அவர் வெள்ளப்பெருக்கை அமைதிப்படுத்தி நம்மை குணப்படுத்துகிறார்.

உண்மையான வெற்றி

என்னுடைய நேர்காணல் விருந்தினர் எனது கேள்விகளுக்கு பணிவுடன் பதிலளித்தார். சம்பாஷணைக்குள் அடியில் ஏதோ பதுங்கியிருப்பதாக எனக்கு ஒரு உணர்வு. தற்செயலாக சொல்லப்பட்ட கருத்து அதை வெளியே கொண்டு வந்தது.

'நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்" என்றேன். “ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல. கோடிக்கணக்கானவர்கள்" என்று அவர் முணுமுணுத்தார்.

எனது அறியாமையைப் பரிதாபப்படுத்துவதுப் போல எனது விருந்தினர் அவருடைய நற்சான்றிதழ்களை நினைவூட்டினார் - அவர் வகித்திருந்த பதவிகள், அவர் சாதித்த விஷயங்கள், அவர் அருளிய பத்திரிக்கை. அது ஒரு தடுமாற்றமான தருணம்.

அந்த அனுபவத்திலிருந்து, தேவன் சீனாய் மலையில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தியதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன் (யாத். 34:5-7). இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர், மனுகுலத்தின் நியாயாதிபதி இங்கே தன்னுடைய பதவிகளை பயன்படுத்தவில்லை. 100 கோடி விண்மீன் திரள்களை உருவாக்கியவர் அவர், ஆனால் அந்த சாதனைகள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தேவன் தன்னை இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ளவர் (வச. 6) என அறிமுகப்படுத்துகிறார். அவர் யார் என்பதை அவர் வெளிப்படுத்தும்போது, அவருடைய பட்டங்களையோ அல்லது சாததைனகளையோ அல்ல, மாறாக தன்னுடைய குணத்தை பட்டியலிடுகிறார்.

தேவனுடைய சாயலாய் படைக்கப்பட்ட மக்களாகவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அழைக்கப்பட்ட நமக்கு இது ஆழமான ஒன்று (ஆதி. 1:27, எபே. 5:1-2). சாதனைகள் நல்லது தான், பட்டங்களுக்கு அவைகளுக்குள்ள இடம் உண்டு, ஆனால் நாம் எவ்வளவு இரக்கம், கிருபை, அன்புள்ளவர் களாயிருக்கிறோம் என்பது தான் முக்கியம். அந்த நேர்காணல் விருந்தினரைப் போல, நாமும் நம்முடைய சாதனைகளை அடிப்படையாக முக்கியப்படுத்தலாம், ஆனால் உண்மையான வெற்றி எது என்பதற்கு தேவன் முன்மாதிரியானவர் - நம்முடைய தொழில் அட்டைகளில் அல்லது நம்முடைய தற்குறிப்பில் எழுதப்பட்டவைகள் அல்ல மாறாக நாம் அவரைப்போல எப்படி மாறுகிறோம் என்பதே.

இடிபாடுகளின் மறுசீரமைபட்பு

1876ம் ஆண்டில், மத்திய இந்தியானாவில், நிலக்கரிக்காக துளையிடுபவர்கள் நரகத்தின் வாசலைக் கண்டுபிடித்ததாக நினைத்தனர். வரலாற்றாசிரியர் ஜான் பார்லோ மார்ட்டின், அறுநூறு அடியின் கீழே, அற்புhதமான சத்தங்கள் மத்தியில் தீப்பொறிகள் எழும்பின என்று தெரிவிக்கிறார். அவர்கள் பிசாசின் குகையின் கூரையை உடைத்திருப்பதாக நினைத்து, பயந்து, வேகமாக தோண்டிய துளையை மூடிவிட்டு தங்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

சுரங்கத் தொழிளாலர்கள், நிச்சயாமாகத் தவராகப் புரிந்துக்கொண்டனர் - சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் துளையிட்டு, இயற்கை எரிவாயுவினால் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டாலும், நான் அவர்களைக் குறித்து சற்று பொறாமைப்படுகிறேன். இந்தச் சுரங்கத் தொழிளாலர்கள், என் சொந்த வாழ்க்கையில் அடிக்கடி நான் காணாமலிருந்த, ஆன்மீக உலகத்தின் விழிப்புணர்வோடு இருந்தனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் இயற்கையும் ஒன்றிணைவது அறிதாக இருக்கிறது என்று நான் வாழ்வது சுலபமானதாக இருந்தாலும், 'மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல... வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்கு போராட்டம் உண்டு" எபேசியர் 6:12 என்பதை மறந்துவிட முடியாது.

நம் உலகில் தீமை வெற்றியடைவதைக் காணும்போது, நாம் அதை விட்டுவிடவோ அல்லது சொந்த பலத்தில் போராடவோ முயற்சிக்கக்கூடாது. ஆனால் நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (வச. 13-18) தரித்துக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டும். வேதத்தை வாசிப்பதும், ஊக்கப்படுவதற்காக மற்ற விசுவாகிளை தொடர்ந்து சந்திப்பதும், மற்றவர்களின் நன்மைகளை மனதில் கொள்வதும், நாம் பிசாசினுடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்க உதவி செய்யும் (வச. 11). பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு எதையும் எதிர்கொண்டு உறுதியாக நிற்க முடியும் (வச. 13).

இடிபாடுகளின் மறுசீரமைபட்பு

பதினேழு வயதில், டோவெய்ன், திருடுதல் மற்றும் போதைக்கு அடிமைபட்டிருந்ததால், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தன்னுடைய குடும்ப வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் வெகுதூரம் செல்லவில்லை, தனது தாயின் கொல்லைப்புறத்தில் நெளிந்த உலோகத்தினால் ஒரு சிறு குடிலை அமைத்து, நாளடைவில் இது போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் கேசினோ என்ற இடமாக அறியப்பட்டது. எனினும் தன் பத்தொன்பதாம் வயதில் டோவெய்ன் இயேசுவின் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வந்தார். போதைப் பொருட்களிலிருந்து விடுதலைப் பெறுவது ஒரு நீண்டதும் சோர்வானதாவும் ஆனால், தேவனுடைய உதவியாலும், இயேசுவை விசுவாசிக்கும் நண்பர்களின் ஆதரவோடும் அவர் சுத்தமாகிவிட்டடர். டோவெய்ன் கேசினோ கட்டிப் பத்து வருடங்கள் கழித்து அவரும் மற்றவர்களும் சேர்ந்து அந்த குடிசையை ஒரு ஆலய வீடாக மாற்றினர். ஒரு காலத்தில் இருண்ட மற்றும் தடை செய்யப்பட்டதாக இருந்த இடம் இப்போது ஜெபிக்கும் மற்றும் ஆராதனைச் செய்யும் இடமாகியது.

இந்த ஆலயத்தின் தலைவர்கள், எரேமியா 33ல், டோவெய்ன் மற்றும் முன்னாள் கேசினோவுக்கு செய்ததைப் போல, தேவன் மக்களையும், இடத்தையும் எவ்வாறு குணப்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்பதைக் காண்கிறார்கள். எரேமியா தீர்க்கதரிசி, சிறைப்பிடிக்கப்பட்ட தேவமக்களிடம் பேசி, நகரம் காப்பாற்றப்படாது என்றாலும், தேவன் தம்முடைய ஜனத்தை குணமாக்கி அவர்களைக் கட்டுவித்து, அவர்களுடைய பாவங்களற அவர்களை சுத்திகரிப்பேன் என்று பேசினார் (எரே. 33:7,8). அப்பொழுது அந்த நகரம் அவருக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையுமாய் இருக்கும் (எரே. 33:9).

இதயத்தை உடைக்கும் பாவத்தைப்பற்றி நாம் விரக்தியடைந்து மனக்கசப்புடன் இருக்கும்போது, அவர் மேனன்பெர்க்கில் கொல்லைப்புறத்தில் செய்தது போல, தேவன் சுகத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வர நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.