Archives: ஜூலை 2017

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஆனைத்து தலைமுறையினரும்

உலகளாவிய பஞ்சம் தலைவிரித்தாடிய காலங்களில், 1933ஆம் ஆண்டு எனது பெற்றோருக்கு திருமணம் நடந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்ப முடியாத ஜனத்தொகை பெருக்கத்தில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன. அக்காலத்தில்தான் நானும் என் சகோதரியும் பிறந்தோம். இளைய தலைமுறையைச் சார்ந்த 1970-1980களில் எங்களது நான்கு பெண்களும் பிறந்தார்கள். அப்படிப்பட்ட வேறுபட்ட காலங்களில் வளர்ந்த எங்களுக்கு அநேகக் காரியங்களைக் குறித்து வேறுபட்ட கருத்துக்களை, நாங்களும் எங்கள் பிள்ளைகளும் கொண்டிருந்தோம் என்பதில் ஆச்சரியமில்லை.

பல்வேறு தலைமுறைகளில் வாழும் மக்கள், அவர்களது அனுபவங்களிலும், வாழ்க்கை மதிப்புகளிலும் மிக அதிக வேறுபட்ட எண்ணங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். இது இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் உண்மையாக இருக்கிறது. நாம் உடுத்தியிருக்கும் உடையில், நாம் கேட்டு மகிழும் பாடல்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மிடையே உள்ள ஆவிக்கேற்ற தொடர்பு அந்த வேறுபாடுகளைவிட பலமானது.

தேவனைத் துதித்துப்பாடும் சிறந்த பாடலான சங்கீதம் 145, நமது விசுவாசத்தின் பற்றுதியை அறிவிக்கிறது. “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்… அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியை கெம்பீரித்துப் பாடுவார்கள்” (வச. 4,7). பல்வேறு கால வேறுபாடுகளும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கு இருந்தாலும், நாம் ஒன்று கூடி “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும் தெரிவித்து” தேவனை கனப்படுத்துகிறோம் (வச. 11).

விருப்புகளும், வெறுப்புகளும் நம்மைப் பிரிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம், ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை ஊக்கம், ஒருவரையொருவர் போற்றுவது ஆகிய இவைகள் நம்மை ஒன்றாக இனைக்கிறது. நமது வயதும், வாழ்க்கையைக் குறித்த கண்ணோட்டமும் வேறுபட்டிருந்தாலும், நாம் சிறந்த வாழ்க்கை வாழ ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம். நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு அனைவரும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தலாம். “உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்து பேசுவார்கள்” (வச. 12).

உள்ளே நுளைவதற்கான உரிமை

அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.

email and mobile

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.