Archives: ஜூலை 2017

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஆனைத்து தலைமுறையினரும்

உலகளாவிய பஞ்சம் தலைவிரித்தாடிய காலங்களில், 1933ஆம் ஆண்டு எனது பெற்றோருக்கு திருமணம் நடந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்ப முடியாத ஜனத்தொகை பெருக்கத்தில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன. அக்காலத்தில்தான் நானும் என் சகோதரியும் பிறந்தோம். இளைய தலைமுறையைச் சார்ந்த 1970-1980களில் எங்களது நான்கு பெண்களும் பிறந்தார்கள். அப்படிப்பட்ட வேறுபட்ட காலங்களில் வளர்ந்த எங்களுக்கு அநேகக் காரியங்களைக் குறித்து வேறுபட்ட கருத்துக்களை, நாங்களும் எங்கள் பிள்ளைகளும் கொண்டிருந்தோம் என்பதில் ஆச்சரியமில்லை.

பல்வேறு தலைமுறைகளில் வாழும் மக்கள், அவர்களது அனுபவங்களிலும், வாழ்க்கை மதிப்புகளிலும் மிக அதிக வேறுபட்ட எண்ணங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். இது இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் உண்மையாக இருக்கிறது. நாம் உடுத்தியிருக்கும் உடையில், நாம் கேட்டு மகிழும் பாடல்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மிடையே உள்ள ஆவிக்கேற்ற தொடர்பு அந்த வேறுபாடுகளைவிட பலமானது.

தேவனைத் துதித்துப்பாடும் சிறந்த பாடலான சங்கீதம் 145, நமது விசுவாசத்தின் பற்றுதியை அறிவிக்கிறது. “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்… அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியை கெம்பீரித்துப் பாடுவார்கள்” (வச. 4,7). பல்வேறு கால வேறுபாடுகளும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கு இருந்தாலும், நாம் ஒன்று கூடி “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும் தெரிவித்து” தேவனை கனப்படுத்துகிறோம் (வச. 11).

விருப்புகளும், வெறுப்புகளும் நம்மைப் பிரிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம், ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை ஊக்கம், ஒருவரையொருவர் போற்றுவது ஆகிய இவைகள் நம்மை ஒன்றாக இனைக்கிறது. நமது வயதும், வாழ்க்கையைக் குறித்த கண்ணோட்டமும் வேறுபட்டிருந்தாலும், நாம் சிறந்த வாழ்க்கை வாழ ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம். நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு அனைவரும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தலாம். “உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்து பேசுவார்கள்” (வச. 12).

உள்ளே நுளைவதற்கான உரிமை

அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.

email and mobile

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மகிழ்ச்சியும் ஞானமும்

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் "சத்தியத்தை அறிவோம்", பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை  பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.