Archives: ஜூலை 2016

அனுமதிக் கட்டணம்

ஆண்டு தோறும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் லண்டனிலுள்ள தூய பவுல் பேராலயத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். 17ம் நூற்றாண்டின் பிந்திய காலத்தில் சர். கிறிஸ்டோபர் ரென் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அவ்வாலயத்தைப் பார்ப்பதற்கு வசூலிக்கும் அனுமதிக் கட்டணம் மிகவும் பொருத்தமானதே. கிறிஸ்தவ ஆராதனைக் கூடமான இதைச் சுற்றுலா பயணிகள் பார்ப்பது என்பது முக்கியமான ஒன்றல்ல. ஆனால் “பலதரப்பட்ட மக்கள் அப்பேராலயத்திற்குள் வரும்பொழுது இயேசு கிறிஸ்துவில் தேவனின் மறுரூபமாக்கும் பிரசன்னத்தை உணர்வடையச் செய்வது” தான் பிரதானமான நோக்கமாகும். அவ்வாலயக் கட்டடத்தை…

விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல்

விசுவாசத்தை ஓர் மந்திர சூத்திரமாகக் கருதுவது ஓர் சோதனையாக இருக்கிறது. இதிலே நாம் வளர்ந்து பெருகினால் நாம் ஐசுவரியவான்களாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும், எல்லா ஜெபத்திற்கும் பதில் பெற்றுக்கொண்டவர்களாய் திருப்திகரமான ஓர் வாழ்க்கை வாழுவோம். ஆனால், எப்பொழுதுமே வாழ்க்கை நேர்த்தியான ஓர் சூத்திரமாக அமையாது. அதற்கு சாட்சியாக எபிரெய நிரூபத்தின் ஆக்கியோன் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் அனைவரையும் உலுக்கும் வகையில் பழைய ஏற்பாட்டில் “உண்மை விசுவாசத்தை” வெளிப்படுத்தும் வகையில் விசுவாச வீரர்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” என்று (எபி. 11:6)ல் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்.…

உன் அயலானை நேசி

மனித இன ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு குக்கிராமத்தில் பல மாதங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தன் பணியை முடித்தவராய் தன் அனுபவத்தைக் கூறுகிறார். தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காக விமான நிலையம் செல்ல, ஓர் வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் பொழுது, நேரம் போவதற்காக சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு ஒன்றை நடத்த எண்ணினார். ஒரு மரத்திற்கருகாமையில் ஓர் பழக்கூடையையும், மிட்டாய்களையும் வைத்துவிட்டு அதை எடுக்க பிள்ளைகளிடம் ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். அவர்கள் ஓடுவதற்குரிய சைகையைக் காட்டியபொழுது முடிவு கோட்டை அடைய ஒருவரும் போட்டி, போட்டுக்கொண்டு ஓட முயற்சிக்கவில்லை. அதற்கு…

சிறந்த நண்பர் - எப்பொழுதும்

என் தந்தை அடிக்கடி எனக்குக் கூறும் ஞானமுள்ள ஆலோசனைகளில் நான் மதித்து ஏற்றுக்கொள்ளும் ஆலோசனை, “ஜோ, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளும் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று ஆகும்”. இது எவ்வளவு உண்மை! நல்ல நண்பர்கள் நமக்கிருக்கும் பொழுது நாம் ஒருபோதும் தனிமையாகவே இல்லை. அவர்கள் உங்கள் தேவைகள் என்ன என்பதில் கண்ணோக்கமாயிருப்பதுடன், உங்கள் சுக, துக்கங்களில் மிகவும் கரிசனையுடன் பங்கு கொள்வார்கள்.

இயேசு இவ்வுலகிற்கு வருவதற்கு முன் இரண்டு நபர்கள் மாத்திரம் தேவனின் சிநேகிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான கீழ்ப்படிதல்

எங்கள் திருமணத்தின்போது, எங்கள் போதகர் என்னிடம், “உன் கணவரை நேசிக்கவும், மதிக்கவும், கீழ்ப்படிவதாகவும் உறுதியளிக்கிறீர்களா? நீங்கள் இறக்கும் வரை இணைந்திருப்பீர்களா?” என்று கேட்டார். என் கணவரைப் பார்த்து, “கீழ்ப்படிதலா?”  என்று நான் கிசுகிசுத்தேன். நாங்கள் எங்கள் உறவை அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பினோம். நான் உறுதியயெடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் அல்ல. நான் கீழ்படிதல் என்ற வார்த்தையை புரிந்துகொண்டு, மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தபோது, அந்த நிகழ்வை என்னுடைய மாமனார் தன்னுடைய கேமராவில் படம்பிடித்தார். 

பல ஆண்டுகளாக, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எனது எதிர்ப்பும், கணவன்-மனைவி இடையே உள்ள நம்பமுடியாத சிக்கலான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். கீழ்ப்படிதல் என்றால் “அடிபணிக்கப்பட்ட” அல்லது “கட்டாயமான சமர்ப்பணம்” என்று நான் புரிந்திருந்தேன். இந்த புரிதலை வேதாகமம் ஆதரிக்கவில்லை. மாறாக, வேதாகமத்தில் உள்ள கீழ்ப்படிதல் என்ற வார்த்தை, நாம் தேவனை நேசிக்கக்கூடிய பல வழிகளை வெளிப்படுத்துகிறது. நானும் என் கணவரும் முப்பது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடிய போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் இன்னும் இயேசுவையும், ஒருவரையொருவரையும் அதிகமாய் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு சொன்னதின் மூலம், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிவது அவருடன் தொடர்ந்து அன்பான மற்றும் நெருக்கமான உறவின் விளைவாக இருக்கும் என்று அவர் நமக்குக் காண்பித்துள்ளார் (வச. 16-21).

இயேசுவின் அன்பு தன்னலமற்றது, நிபந்தனையற்றது; ஒருபோதும் வலுக்கட்டாயமானதோ அல்லது தவறானதோ அல்ல. நம்முடைய எல்லா உறவுகளிலும் நாம் அவரைப் பின்பற்றி கனப்படுத்தும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதை ஞானமான, அன்பான நம்பிக்கை மற்றும் ஆராதனையின் விளைவாகக் காண பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக. 

 

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.