Archives: மே 2016

அறிந்து செயல்படல்

சீன தத்துவஞானி ஹான் ஃபீஜூ, “உண்மையை அறிந்து கொள்வது எளிது, ஆனால் அந்த உண்மையின்படி எப்படிச் செயல்படவேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்” என்று வாழ்க்கையைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட பிரச்சனையோடு ஓர் ஐசுவரியவான் ஒரு முறை இயேசுவிடம் வந்தான். அவன் மோசேயின் நியாயப்பிரமாணங்களை நன்கு அறிந்தவனாகவும், சிறு வயதிலிருந்தே அவற்றை ஒழுங்காகக் கைக்கொள்ளுபவனாகவும் இருந்தான் (மாற். 10:20). இதற்கும் மேலாக, இயேசு என்ன செய்யச் சொல்லப்போகிறார் என்பதை அறிய மிக ஆவலோடு இருந்தான், “நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான்…

சுத்த இருதயங்களிலிருந்து வரும் துதி

எனது சிநேகிதி மிர்னா வேறு ஒரு நாட்டிற்கு சென்றபொழுது, அங்கிருந்த ஓர் ஆலயத்தில் நடந்த ஆராதனையில் பங்கெடுத்தாள். மக்கள் ஆலயத்திற்கு நுழைந்தவுடன், ஆலயத்தின் முகப்பு பகுதிக்கு எதிர்த்திசையில் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்கள். அந்த சபை மக்கள், ஆராதனை வேளை ஆரம்பிக்கும் முன்பு அவர்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டார்கள் என்பதை என் சிநேகிதி அறிந்தாள்.

அந்தத் திருச்சபை மக்களின் இந்தத் தாழ்மையான செயல் சங். 51ல் தாவீது கூறின “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை, நீர் புறக்கணியீர்” (சங். 51:17) என்ற வசனம் என்…

ஒருமுறை மட்டும்தான் மரிக்க இயலும்

ஹாரியட் டப்மேன் (1822–1913) அடிமையாகப் பிறந்து, அடிமையாக வாழ்ந்தாள். அவளது வாலிபப் பருவத்தில் அடிமையாக மிகவும் மோசமாக நடத்தப்பட்டாள். ஆனால், அவளுடைய தாயார் கூறின வேதாகமக் கதைகள் மூலமாக வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியைப் பெற்றாள். பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இஸ்ரவேல் மக்களின் வரலாற்றின் மூலமாக, தேவன் அவருடைய மக்களின் விடுதலையை விரும்புகிறார் என்பதை அறிந்தாள்.

ஹாரியட், மேரிலேண்ட் மாநிலத்தின் எல்லையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்றதினால், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றாள். ஆனால் இன்னமும் அநேக மக்கள் அடிமைத்தளையில் இருப்பதை அவள் அறிந்திருந்ததால், அவளால் வாழ்க்கையில்…

நம்மைப் போலவே நடந்தார்

டேவிட் டில்லர்ட், அவருக்குக் கீழாகப் பணி புரியும் இளம் கட்டிடக் கலைஞர்களிடம் அவர்கள், யாருக்கு வீடுகளை வடிவமைக்கிறார்களோ அவர்களோடு போய் தங்கி இருக்க அனுப்புவார். அவர்கள் மூத்தகுடிமக்கள் வாழும் இடத்திற்குச் சென்று அங்குள்ள 80, 90 வயதுள்ளவர்களைப் போலவே பைஜாமா அணிந்து கொண்டு, அவர்கள் வாழும் சூழ்நிலையிலேயே அவர்களைப் போலவே 24 மணி நேரம் வாழ்வார்கள். காது கேளாதவர்களைப்போல இருக்க அவர்களது காதுகளை மூடக்கூடிய காது கேட்க உதவும் கருவிகளை பொருத்திக் கொள்வார்கள். விரல்களின் வேலை செய்யும் திறனைக்குறைக்க அவர்களது விரல்களை ஒட்டும் நாடாவினால்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”