Archives: ஏப்ரல் 2016

தேவனுடைய பார்வையில் நேர்மையானதைச் செய்தல்

அநேக ஆங்கிலேய வீட்டுச் சொந்தக்காரர்கள் போலியான தரங்குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகட்டுபவர்களை, “கவ்பாய் பில்டர்ஸ்” என்ற பதத்தால் அழைப்பார்கள். வீட்டுச் சொந்தக்காரர்கள் தாங்கள் அடைந்த மோசமான அனுபவங்களால் ஏற்பட்ட பயம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அப்பெயரை அவர்களுக்கு வழங்கினர்.

ஏமாற்றும் தச்சர்கள், கொத்தனார்கள், கல்தச்சர்கள் போன்றோர் வேதாகம காலத்திலும் சந்தேகமின்றி வாழ்ந்திருப்பார்கள். யோவாஸ் அரசன், ஆலயத்தைப் பழுதுபார்த்து கட்டிய வரலாற்றில், அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பழுதுபார்க்கும் பணியைச் செய்தவர்களும், அவர்களைக் கண்காணித்தவர்களும் முற்றிலும் நேர்மையுடனும், உண்மையாகவும் செயல்பட்டார்கள் (2 இரா 12:15).

எனினும்…

கிறிஸ்துவின் சுகந்த வாசனை

நம்மில் உள்ள ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு மிகவும் கூர்மையான ஞாபகசக்தியை நமக்கு உணர்த்துகிறது? என்னைப் பொறுத்தவரையில் மோப்பம் என்னும் உணர்வுதான் என்று நான் நிச்சயமாகக் கூறமுடியும். ஒரு வகையான சூரிய எண்ணையின் மணம் என்னை உடனே பிரெஞ்சுக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுவிடும். “கோழிக்கறி கூட்டு” என் சிறு பிராயத்தில் பாட்டி வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டும். “பைன்” பற்றிய ஓர் வார்த்தை “கிறிஸ்மஸிற்கும்” முகச்சவரம் செய்தபின் பயன்படுத்தும் ஒருவித வாசைன திரவியம் என் மகளின் பதின் வயதை ஞாபகத்திற்கு கொண்டு வரும்.

கொரிந்தியர் கிறிஸ்துவுக்கு…

அதிசயிக்கத்தக்க அன்பு

பழைய ஏற்பாட்டில் நடந்த இறுதிக்கட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்ச்சியாகிய இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி மறுபடியுமாக எருசலேமில் வந்து குடியேறிய நிகழ்ச்சியை எஸ்றா, நெகேமியா புத்தகங்களில் வாசிக்கிறோம். தாவீதின் நகரம் மீண்டும் எபிரேயக் குடும்பங்களால் ஜனத்தொகை பெருகியது, தேவாலயம் கட்டப்பட்டது, சுவர்கள் பழுதுபார்க்கப்பட்டு கட்டப்பட்டது.

பின் மல்கியா தீர்க்கதரிசி மூலம் சில காரியங்களைத் தெரிந்து கொள்கிறோம். நெகேமியாவுடன் ஒரேகாலத்தில் வாழ்ந்த மல்கியா பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பகுதிகளை மக்களுக்கு கொண்டுவருகிறார். அதில் முதலாவதாக இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது என்னவென்றால் “நான் உங்களை சிநேகித்தேன்…

தொடுவானத்தில் புயல்

அலாஸ்காவில் உள்ள கோடியாக்கில் எங்கள் மகன் ஜோஷ், சால்மன் மீன்களைப் பிடிக்கும் தொழில் செய்யும் ஓர் மீனவ வணிகர்; சில காலத்திற்கு முன்பு எங்கள் மகன் எனக்கு ஓர் புகைப்படத்தை அனுப்பியிருந்தான். அதில் அவன் படகிற்கு சில நூறு அடிகளுக்கு முன்னால் ஓர் சிறிய படகு ஓர் குறுகிய கணவாயின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தொடுவானத்தில் கேடுகளை விளைவிக்கக் கூடிய புயல் மேகங்கள் சூழ்ந்து கொண்டது. ஆனால், தேவனுடைய தெய்வீகத் தன்மையையும், கரிசனையையும் வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக கணவாயின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக அந்த…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?