வகை  |  odb

தேவனின் திட்டம்

ஒரு படை அதிகாரிக்கு குறிப்பிட்ட விதிமுறைகள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு யுத்தத்திற்கு முன்பும் புதிய விதிமுறைகளைப் பெறவும் வேண்டும், கொடுக்கவும் வேண்டும். இஸ்ரவேல் மக்களின் தலைவனாகிய யோசுவா இந்தப் பாடத்தைப் படிக்க வேண்டியதிருந்தது. தேவனுடைய ஜனங்கள் வனாந்திரத்தில் நாற்பது ஆண்டுகள் கழித்தபின்பு, தேவன் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு. இஸ்ரவேல் மக்களை தலைமை தாங்கி நடத்திச்செல்ல தேவன் யோசுவாவை தெரிந்தெடுத்தார்.

முதல், முதல் அவர்கள் சந்தித்த அரணிப்பான இடம் எரிகோவாகும். யுத்தத்திற்கு முன்பு யோசுவா, “தேவனுடைய சேனைகளின் தலைவனை” (ஒருவேளை தேவனாகவே இருக்கலாம்) உருவின பட்டயத்துடன்…

நம்பிக்கை என்ற சிற்றலை

1966ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உயர்பதவியிலிருந்த ராபர்ட் கென்னடி தென் ஆப்பிரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின ஒரு பயணத்தை மேற்கொண்டார். அங்கு கேப் டவுன் பல்கலைக் கழகத்தில் நிற வெறிக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் புகழ்பெற்ற “நம்பிக்கை” என்ற சிற்றலை என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சில் ஒரு குறிக்கோளுக்காகவோ அல்லது பிறருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது அநீதியை எதிர்த்தோ ஒரு தனிமனிதன் நின்றால் அவன் நம்பிக்கை என்ற சிறு அலையை தோற்றுவிக்கிறான். இதுபோல பல்லாயிரக்கணக்கான சிற்றலைகள் பல்வேறு மையங்களிலிருந்து தோற்றுவிக்கப்படும்பொழுது,…

தொடரும்

1950களில் வளர்ந்த நான் சனிக்கிழமைகளில் உள்ளுர் திரைப்பட அரங்கில் மதியக் காட்சிகளை அடிக்கடிப் பார்த்து வந்தேன். கேலிப்படங்களோடு, சாகசச் செயல்களில் ஈடுபடும் கதாநாயகி அல்லது கதாநாயகன் பற்றிய திரைப்படத் தொடர்ச்சி காண்பிக்கப்படும். அத்தொடர்கதை எளிதில் முடிவடையாது ஒவ்வொரு வாரமும் “தொடரும்” என்ற வார்த்தைகளோடு முடியும்.

பவுல் அப்போஸ்தலன் உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் சூழ்நிலைக்கு புதியவரல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துச் சென்றபொழுது, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அடிபட்டார், கல்லெறியுண்டார், கப்பல் சேதங்களை சந்தித்தார். என்றோ ஒருநாள் அவர் மரிக்கப்போவதை அவர் அறிந்திருந்தார்.…

காதல் பூட்டுக்கள்

“காதல் பூட்டுக்கள்” என்பது சமுதாயத்தில் வளர்ந்து வரும் நிகழ்வாகும். காதல் வசப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் காதல் பூட்டுக்களை பிரான்ஸ், சீனா, அஸ்டிரியா, செக் குடியரசு, செர்பியா, ஸ்பெயின், மெக்ஸிகோ, வட அயர்லாந்து போன்ற உலகின் பல பகுதிகளிலுள்ள பாலங்கள், கதவுகள், வேலிகள் ஆகிய இடங்களில் மாட்டி வைத்துள்ளனர். தம்பதிகள் அவர்களது பெயர்களை பூட்டுக்களில் பதித்து பொதுவான இடங்களில் அவர்களின் மாறாத அன்பின் சின்னங்களாக வைக்கின்றனர். அதிகமான அளவில் பூட்டுக்கள் மாட்டப்பட்டால், அவற்றின் அதிக எடையினால் பாலங்கள் போன்ற பொது இடங்கள் பாதிக்கப்படும் என்று…

மக்களின் சக்தி

ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் புகை வண்டி நிலையத்தில் ஒரு மனிதன் புகை வண்டியில் ஏறும்பொழுது கால் நழுவினதினால், அவனது கால் புகை வண்டியின் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டது. அவனுக்கு உடனே உதவிசெய்ய அநேக பயணிகள் முன்வந்தார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களது முழுபலத்தையும் பயன்படுத்தி, புகை வண்டியை பிளாட்பாரத்தைவிட்டு சாய்த்தார்கள். கால்மாட்டிக் கொண்ட மனிதன் விடுவிக்கப்பட்டான். புகை வண்டி பயணச் சேவைக்கான செய்தி தொடர்பாளரான டேவிட் ஹைனஸ் “ஒவ்வொரு மனிதனும் அவர்களது முழு சக்தியையும் கொடுத்தார்கள் மிகவும் படுகாயம் அடையவிருந்த ஒருவரை மக்களின் சக்திதான்…

பரிபூரணத்தின் கொடுமை

டாக்டர் பிரையன் கோல்டுமேன் அவரது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறிதுகூட தவறு இழைக்காமல் செயல்பட வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டார். ஆனால் தேசீய அளவில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் அவர் செய்த தவறுகளை ஒத்துக் கொண்டார். அவர் ஒரு பெண்ணிற்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தவுடன், அவளை வீட்டிற்கு அனுப்ப தீர்மானித்ததை வெளிப்படையாகக் கூறினார். அந்த நாளின் பின் பகுதியில் ஒரு செவிலியர் “நீங்கள் வீட்டிற்கு அனுப்பின அந்தப் பெண் பற்றி ஞாபகம் வைத்துள்ளீர்களா? அந்தப் பெண் திரும்ப வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள் என்று…

பாபேல் திட்டம்

இரண்டு கட்டிடப் பணியாளர்களிடம் அவர்கள் என்ன கட்டிக் கொண்டிருக்கிறார்களென்று கேட்கப்பட்டது. ஒருவன் கார் நிறுத்தும் இடத்தை கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். மற்றவன் ஒரு பேராலயத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறேன் என்றான். அடுத்தநாள், ஒரு மனிதன் மட்டும் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருந்தான். அடுத்த மனிதன் எங்கே என்று அவனிடம் கேட்கப்பட்டபொழுது, “அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டான். கார் நிறுத்துமிடம் கட்டுவதற்குப் பதிலாக ஒரு பேராலாயம் கட்ட வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தான்” என்று அந்த மனிதன் பதில் கூறினான்.

இதைப் போலத்தான் ஆதியிலே பாபேல் கோபுரம்…

வயது ஒரு பொருட்டல்ல

50 ஆண்டுகளாக, டேவ் பௌமேன் அவருக்குச் சொந்தமான பல் மருத்துவ சோதனைக் கூடத்தில் பணி செய்த பின், மனநிம்மதியோடு ஓய்வுத் பெற தீர்மானம் பண்ணினார். அவர் சர்க்கரை நோயாளியாகவும், இருதய அறுவை சிகிச்சை செய்தவருமாக இருந்தபடியினால், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதில் உறுதியாயிருந்தார். ஆனால் சூடானிலிருந்து வந்திருந்த வாலிப அகதிகளைக் குறித்து கேள்விப்பட்டவுடன் பௌமேன் அவரது வாழ்க்கையையே மாற்றியமைக்க கூடிய தீர்மானத்தை எடுத்தார். அவர்களில் 5 பேரை தாங்கி ஆதரவளிக்க முன் வந்தார்.

சூடானிய வாலிபர்களைப் பற்றி டேவ் நன்கு அறிந்தபொழுது அவர்கள் மருத்துவரிடமோ அல்லது…

தேவன் நம் மீது கரிசனை கொள்கிறாரா?

இயேசு போதுமானவரா? நம்மைத் தாங்கி நடத்த கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவு போதுமானதா? தொடர்ந்து நமது வாழ்க்கையில் நமக்கு உதவ அவர் போதுமானவரா? அவர் நம்மீது கரிசனை உடையவராய் இருக்கிறாரா? போன்ற சில கேள்விகளை மின்னியும், ஜர்ஜ் லாஸியும் தங்களிடமே கேட்டனர்.

பணித்தள மிஷனரிகளாக அவர்கள் 1904 இல் பணியாற்றி வந்த பொழுது லாசியின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டாள். பின் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளும் அடுத்தடுத்து, வெகு விரைவில் “ஸ்கார்லெட்” காய்ச்சலினால் மரித்துப் போனார்கள். புதிய ஆண்டைப் பார்க்க ஒருவரும் உயிருடனில்லை. மிஷனரி ஸ்தாபனத்திற்கு தங்கள்…