தண்ணீரும், வாழ்க்கையும்
டேவ் மியூல்லர் கீழே இறங்கி குழாயின் கைப்பிடியை திறந்தவுடன், குழாயிலிருந்து சுத்தமான நீர், கீழே வைக்கப்பட்டிருந்த நீல நிற வாளியில் கொட்டியது. சுற்றியிருந்த மக்கள் நீரைக் கண்டவுடன் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த சமுதாயத்தின் முதல் முறையாக சுத்தமான குடிநீரைக் கண்டதால் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். கென்யாவில் வசித்த அந்த பகுதி மக்களுக்கு கிடைத்த சுத்தமான குடிநீர், அம்மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது.
சுத்தமான நீரை அந்த மக்களுக்கு வழங்குவதின் மூலம் அவர்களது தேவைகளை சந்திக்க டேவ்வும், அவரது மனைவி…
பழுது பார்த்தலா அல்லது மாற்றுவதா
எங்களது வீட்டில் ஜன்னல்களின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த அழகுபடுத்தும் சாதனங்களை பழுது பார்க்க வேண்டிய சமயம் வந்தது. ஆகவே பழமையாய்ப் போன அந்தப் பலகைகளைத் தேய்த்து, சுத்தப்படுத்தி, பெயர்ந்து போன இடங்களை எல்லாம் நிரப்பி வண்ணம் பூச ஆயத்தப் படுத்தினேன். முதலாவது அடிக்க வேண்டிய பிரைமரை அடித்து அதற்கு மேல் விலைமதிப்புள்ள வண்ணமும் அடித்தேன். இந்த எனது முயற்சிகளால் அந்தப் பொருள் அழகாகவும், நன்றாகவும் இருந்தது ஆனாலும் அது புதியதாகத் தோன்றவில்லை. அது புதியதாகக் காணப்பட வேண்டுமென்றால், அந்த பழைய மரத்தை மாற்றியாக வேண்டும்.
காலப்…
வாழ்க்கையின் புயல்கள்
வேதாகமத்தில் மாற்கு என்ற புத்தகத்தில் பயங்கரமான புயல் காற்றைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் சீஷர்கள் இயேசுவோடு கூட ஒரு படகில் கலிலேயாக் கடலில் சென்று கொண்டிருந்தார்கள். “பலத்த சுழல் காற்று” அடித்த பொழுது, சீஷர்கள் அவர்களில் சிலர் அனுபவமிக்க மீனவர்களாக இருந்தபொழுதும், அவர்களது ஜீவனைக் குறித்து பயந்தார்கள். (4:37-38) தேவன் கவலைப்படவில்லையா? அவர்கள் இயேசுவினால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், இயேசுவுக்கு மிகவும் நெருங்கினவர்களாகவும் இல்லையா? “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு கூறினதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் அல்லவா? (வச.35) பின்பு ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான…
வேலியைத் தொடாதே!
நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது. ஒரு பண்ணைக்கு அருகில் வசித்து வந்த எனது பாட்டியின் தாயாரைப் பார்க்க எனது பெற்றோருடன் சென்றேன். அவர்களது முற்றத்தின் திறந்த வெளிக்குள் மாடுகள் வந்து புல்வெளியை மேய்ந்து விடாத படி ஒரு மின்வேலி போடப் பட்டிருந்தது. முற்றத்திற்குச் சென்று நான் விளையாடலாமா என்று எனது பெற்றோரிடம் கேட்ட பொழுது, அவர்கள் எனக்கு அனுமதி கொடுத்தார்கள், ஆனால் அந்த மின் வேலியைத் தொட்டால் மின் அதிர்ச்சி ஏற்படும் என்று விவரித்துக் கூறி அதைத் தொடாமல் விளையாடக் கூறினார்கள்.
துரதிஷ்டவசமாக…
என்னுடைய கவனம் எங்குள்ளது
2011ம் ஆண்டு செப்டம்பர் மாத துவக்க நாட்களில் மத்திய டெக்ஸாசிலுள்ள பாஸ்ட்ராப் என்ற நகரிலும், அதைச் சுற்றிலுமிருந்த 600 வீடுகளை பயங்கரமான காட்டுத்தீ அழித்து நிர் மூலமாக்கிவிட்டது. சில வாரங்கள் கழித்து ஆஸ்டின் அமெரிக்கன் ஸ்டேட்மேன் என்ற பத்திரிக்கையில் “அநேகத்தை இழந்த மக்கள், இழக்காத பொருட்கள்மீது கவனத்தைச் செலுத்தினார்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை, சமுதாயத்தினர் தாராளமாய்ச் செய்த உதவிகளையும், உதவி பெற்றோர், தாங்கள் இழந்தவற்றைவிட, உதவிய அயலகத்தார் நண்பர்கள், சமுதாயத்தினரை அதிக மேன்மையாகக் கருதினர்.
முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்…
நீங்கள் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டீர்கள்
இன்றையதினம் மிகவும் துக்ககரமான வார்த்தைகளைக் கேட்டேன். இரண்டு விசுவாசிகள் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுடைய ஒரு காரியத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரில் மூத்தவர் தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் உடையவராக, வேதவசனங்களை ஆயுதம் போல அதிகாரத்தோடு பயன்படுத்தி அடுத்த நபரின் வாழ்க்கையில், காணப்பட்ட தவறுகளைக் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார். வயதில் இளயவர் மூத்தவராலும், அவரது குறைகூறுதலினாலும் சோர்வடைந்து ஆர்வத்தை இழந்து விட்டார்.
அவர்களுடைய அந்த உரையாடல் முடிவுக்கு வந்த பொழுது, மூத்த மனிதன் இளய மனிதனின் ஆர்வமற்ற தன்மையைக் குறித்து விமர்சித்தான்.…
எனது இருதயத்தில் மறைந்துள்ளது.
டீஜிட்டல் முறையில் (Digital) கணினியில் வெளியிடப்படும் இதழ்களை வாசிப்பதில் பழக்கப்பட்டுவிட்டேன். இதன் மூலம் மரங்களைக் காப்பாற்றுகிறேன் என மன மகிழ்ச்சி அடைகிறேன். அத்தோடு கூட தபாலில் மாத இதழ் வருவதற்காக நான் காத்திருக்கத் தேவை இல்லை. ஆனால் அச்சிடப்பட்ட காகிதத்தை வாசிக்காததால் அதிகம் மனம் வருந்துகிறேன். ஏனெனில் பளபளப்பான அந்த காகிதத்தின் பக்கங்களை என் விரல்களால் தடவிப் பார்ப்பது எனக்கு இனிமையான அனுபவமாகும். அதில் வெளியாகும் முக்கிய சமையல் குறிப்புகளை வெட்டி எடுக்கும் சந்தர்ப்பத்தையும் இழந்ததால் மனம் வருத்தமடைகிறேன்.
கணினியின் மூலம் வாசிக்கக்கூடிய டிஜிட்டல்…
திரைக்குப் பின்னால்
எங்களது திருச்சபையின் வெளி ஊழியத்தின் நிறைவு நிகழ்ச்சி, நகரில் ஒரு ஆராதனையோடு முடிவடைந்தது. அந்த ஊழியத்திற்காக திட்டமிட்டு செயல்பட்ட குழுவிலிருந்த எங்கள் திருச்சபையின் வாலிப ஐக்கியத்தின் இசைக் குழுவினர், ஆலோசகர்கள், திருச்சபையின் தலைவர்கள் ஆகியோர் அந்த இறுதி நாளில் மேடைக்கு வந்தார்கள். உடனே நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியினால் கைகளைத் தட்டி அவர்களது கடினமான ஊழியத்திற்காக அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தினோம்.
அந்தக் குழுவில் ஒரு மனிதர், ஒருவராலும் காணப்படாமலே இருந்தார். ஆனால் அவர்தான் அக்குழுவின் தலைவர், ஒரு சில நாட்களுக்குப் பின் அவரை நான் பார்த்த…
கண்களுக்கு மறைந்து போதல்
நான் வசிக்கும் பகுதியில் தாவரங்களில் சில பகுதிகள் பூமிக்கு அடியிலேயே சில காலம் இருந்து விட்டு, மறுபடியும் முளைத்து வெளியே வரக்கூடிய காலமாகும். பூமியியே பனி விழுந்து தரை உறைந்து போகும் முன்பு தாவரங்கள் அழகாக பூத்துக் குலுங்குகின்றன. பனிக்காலம் முடிந்து மறுபடியும் வசந்தகாலம் வரும் வரை பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. பனியிலே இறுகிப்போன மண் இளக்கமானவுடன், இவை மறுபடியும் தங்கள் தலைகளை வானத்திற்கு நேராய் உயர்த்துகின்றன. உயர்த்தி பற்பல வண்ணப் பூக்களால் தங்கள் சிருஷ்டிகரை ஆராதிக்கின்றன.
நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் செயலற்று அமைதியாக…