அமைதியான ஒளி; மென்மையான ஒளி
சீனாவில், யூனான் மாகாணத்தில் ஒரு கிராமப்புறத்தில் ஷோயிங் வசித்து வருகிறாள். உடல் நலக்குறைவினால் அவளது கணவனுக்கு வயல் வெளியில் வேலை செய்ய இயலவில்லை. இதனால் அவர்களுடைய குடும்பம் மிகுந்த வறுமையில் வாடியது. இவ்வாறு அவர்கள் குடும்பம் கஷ்டப்படுவதற்கு தேவன் மேல் ஷோயிங் வைத்திருக்கும் விசுவாசம்தான் காரணமென்று, அவளது கணவனின் தாயார் குறை கூறினார்கள். ஆகவே, ஷோயிங்கை அவள் கடினமாக நடத்தினதோடு, அவர்களது முன்னோர்களின் பாரம்பரிய மதத்திற்கு திரும்பும்படி வற்புறுத்தினார்கள்.
ஆனால் ஷோயிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்து அவளது கணவன், அவனது தாயாரைப் பார்த்து…
அன்புத் தீவு
மிக்சிகனில் சகிநாவ் விரிகுடாவில் உள்ள கியுரான் ஏரியிலுள்ள மிகப்பெரிய தீவு அன்புத் தீவு ஆகும். அநேக ஆண்டுகளாக கடலில் பயணம் செய்பவர்கள் பத்திரமாக பயணம் செய்வதற்கான ஒரு கலங்கரை விளக்கையும் பாதுகாப்பான ஒரு துறைமுகத்தையும் உடையதாய் இருந்தது. “கடவுளுடைய அன்பினால் தான்” அந்தத் தீவு அந்த இடத்திலிருந்ததென்று, கடலில் பயணம் செய்தவர்கள் நம்பினதினால் அந்தத் தீவிற்கு அன்புத் தீவு என்று பெயர் வந்தது.
சில சமயங்களில் நமது வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை கடந்து வர வேண்டியதிருக்கும். அந்தக் கடல் பயணிகளைப் போல நமக்கும் வழிகாட்டுதலும்,…
நமது நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வருதல்
எனது சிறு பிள்ளைப்பிராயத்தில் உலகை மிகவும் அச்சுறுத்தக் கூடிய வியாதி “போலியோ” என்ற இளம் பிள்ளைவாதமாகும்.” ஏனெனில் அதனால் அதிகமான அளவு சிறுபிள்ளைகள் தான் பாதிக்கப்பட்டார்கள். 1950களின் மத்தியில் போலியோவிற்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 20,000 பேர் போலியோவினால் பாதிக்கப்பட்டதோடு, ஏறக்குறைய 1000 பேர் அதனால் ஒவ்வொரு ஆண்டும் மரித்தார்கள்.
ஆதிக்காலத்தில் திமிர்வாதம் என்பது குணமாக்க இயலாத நிரந்தரமான நம்பிக்கையற்ற நிலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கூட்ட மக்கள் திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட அவர்களது சிநேகிதனை…
பெயரைச் சொல்லுங்கள்
ஒரு திருச்சபையிலிருந்த ஒரு குழுவினர் அவர்களது கூடுகையில் செய்தி அளிப்பதற்காக ஒரு செய்தியாளரை அழைத்தார்கள். “ தேவனைப்பற்றி பேசுங்கள் ஆனால் இயேசுவை விட்டு விடுங்கள்” என்று அந்தக் குழுவின் தலைவர் செய்தியாளரிடம் கூறினார்.
மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த மனிதர் “ஏன்” என்று கேட்டார். “எங்களது குழுவிலுள்ள சில முக்கிய அங்கத்தினர்கள் இயேசு என்றால் சங்கடப்படுகிறார்கள். ஆகவே கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துங்கள், அப்பொழுது நாங்கள் நன்றாக உணருவோம்” என்று அந்தத்தலைவர் விளக்கினர்.
அவர்கள் கூறின கட்டளைகளை ஏற்றுக்கொள்வது செய்தியாளருக்கு பெரிய பிரச்சனையாக…
என் கைகளை அவர் பழக்குவிக்கிறார்.
டேவிட் உட் என்ற NBAயின் முன்னாள் விளையாட்டு வீரர், டாக்ரஸ் டி பாஸ்கோனியா சார்பில் விளையாடிய பொழுது ஸ்பானியா நாட்டு கூடைப்பந்து விளையாட்டில் இறுதிக் கோப்பைக்கான போட்டியில் அவரோடு கூட நான் இருந்தேன். ஒரு போட்டிக்கு முன் அவர் “என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சங்கீதம் 144:1 ஐ வாசித்தார். பின்பு என்னிடம் திரும்பி “பார் தேவன் இந்த வசனத்தை எனக்காகவே எழுதியுள்ளார். துள்ளி வரும் பந்துகளைப் பிடிக்கவும் பந்தை சரியான முறைகளில்…
கோபத்துடன் கூடிய ஜெபங்கள்
குளிர் காலத்தில் ஒரு நாள், எனது தோட்டத்தில் பனிவாரிக்கருவியை எனது கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு, மிகவும் கோபத்துடனும், வேகத்துடனும் மூலையிலிருந்த மழை நீர் வெளியேற்றுக் குழாயை அடைத்துக் கொண்டிருந்த உறை பனியை நீக்கி கொண்டிருந்தேன். என்னை அவர்களது ஜன்னல்களின் வழியாகப் பார்த்த என் அயலகத்தார் என்னைக் குறித்து என்ன எண்ணுவது என்று ஒருவேளை அவர்களுக்கே தெரியாதிருக்கும். நுண் பனியை நீக்கும் பொழுது ஒவ்வொரு காலடி வைக்கும் பொழுது “என்னால் இதைச் செய்ய இயலாது, இதைச் செய்ய எனக்கு பெலன் இல்லை” என்பது பற்றிய…
எரிச்சலுள்ள நமது தேவன்
2014ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர், ஓர் இறந்துபோன நாயின் உள்பகுதியை நீக்கிவிட்டு அதைப் பஞ்சினாலும், வைக்கோலாலும் அடைத்தார். பின்பு அந்த பொம்மை நாயைப் பயன்படுத்தி மிருகங்களும் கூட பொறாமைப்படக்கூடியவை என்று காண்பித்தார். கிறிஸ்டியன் ஹாரிஸ் என்ற அந்தப் பேராசிரியை நாய்களுக்கு சொந்தமானவர்கள், அவர்களது செல்லப் பிராணிகளுக்கு முன்பாக பஞ்சடைக்கப்பட்ட நாய்பொம்மையைக் கொஞ்சி விளையாடும்படி கேட்டார். அதைக்கண்ட அநேக நாய்கள் வெளிப்படையாக அவற்றின் பொறாமையை வெளிப்படுத்தின. சில நாய்கள் அவற்றின் எஜமான்களை மெதுவாகத் தொடுவதின் மூலமாகவோ, அல்லது இலேசாக மோதுவதின் மூலமாகவோ…
அனுதினமும் சலிப்படைதல்
நான் படித்து வந்த உயர்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் இலத்தீன் மொழியைக் கற்றுக் கொள்வது அவசியமாக இருந்தது. அவ்வாறு கஷ்டப்பட்டு இலத்தீன் மொழியை படித்ததை இப்பொழுது நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைப் படித்து வந்தபொழுது, அது மிகவும் சலிப்பூட்டுவதாக இருந்தது. மறுபடியும், மறுபடியும் சொல்லி பயிற்றுவிப்பதில் எனது ஆசிரியர் நம்பிக்கை உடையவராக இருந்தார். “மறுபடியும், மறுபடியும் சொல்லுவதே கற்றுக் கொள்வதற்கான மூல ஆதாரம்” என்று எனது ஆசிரியர், ஒரு நாளில் பலமுறை கூறுவார்;. மறுபடியும், மறுபடியும் கூறுதல் மிக அவசியமானது என்று கூறுவதை…
ஞானிகளின் வார்த்தைகள்
எனது சகோதரனின் மருமகன் ஒரு சமூக வலைத்தளத்தில் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினார். “மெல்லிய சத்தத்தில் செய்ய வேண்டாமென்று எனக்குள்ளாக வார்த்தைகள் கேட்கப்படாமல் இருந்திருந்தால், நான் இன்னும் அதிகமாக இணயதளத்தில் சொல்லி இருப்பேன். கிறிஸ்தவ விசுவாசிகளாக நீங்கள் அந்த மெல்லிய சத்தம் பரிசுத்த ஆவியானவருடையது என்று எண்ணுவீர்கள். அப்படி இல்லை. அது என் மனைவி ஹெய்டியின் சத்தமே”
சிரிப்புடன் கூட ஒரு தெளிவான எண்ணமும் வருகிறது. உண்மையான தன்மையை அறியக்கூடிய ஒரு சிநேகிதனின் எச்சரிப்புகள், தேவனின் ஞானத்தைப் பிரதிபலிக்கலாம். “ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்” என்று…