வகை  |  odb

எனக்கு தேவையானது அதுதான்

அலாஸ்காவிலுள்ள பால்மர் என்ற நகரத்தில், முதியோர் இல்லத்தில் ஓர் அறையின் பின் பகுதியில் நின்று கொண்டு எனது மகளுடைய உயர்நிலைப்பள்ளியின் பாடகர் குழு “என் ஆத்துமாவிற்கு எல்லாம் நன்றாக உள்ளது” என்ற பாடலைப் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாடல் குழுவின் தலைவியான என் மகள், அந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று சிந்தித்தேன். அந்தப்பாடல் அவளது சகோதரி மெலிசாவின் அடக்க ஆராதனையில் பாடப்பட்ட பாடலாகும். அந்தப்பாடலைக் கேட்பது என் உணர்வுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை என் மகள் லிசா அறிந்திருந்தாள்.

நான், என் சூழ்நிலையை…

அதன் ஊடாகப் பிரகாசியுங்கள்

ஒரு பரிசுத்தவான் எப்படி இருப்பாரென்று தெரிந்துகொள்ள ஒரு சிறுமி விரும்பினாள். ஒரு நாள் அவளுடைய தாயார் பிரமாண்டமாகவும், மிக அழகாகவும் வேதாகம காட்சிகளை வண்ணம் தீட்டியிருந்த கண்ணாடி ஜன்னல்களை உடைய பேராலயம் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றார்கள். அவற்றின் அழகைப் பார்த்த அவள், “இப்பொழுது பரிசுத்தவான் யார் என்பதை அறிந்து கொண்டேன். தங்கள் மூலமாக ஒளியைப் பிரகாசிப்பவர்களே பரிசுத்தவான்கள்” என்று சத்தமாகக் கூறினாள்.

பரிசுத்தவான்கள் என்றால், எந்தவிதமான குற்றமும் புரியாமல் இயேசுவைப்போல அற்புதங்களைச் செய்த கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் என்று, நம்மில் பலர்…

மீட்டெடுக்கும் தொழில்

ஆதாம் மின்ட்டர் தேவையற்ற பழைய பொருட்களை வாங்கும், விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பழைய தேவையற்ற பொருட்களை வாங்கும், விற்கும் தொழில் செய்பவரின் மகனான இவர், அப்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உலகமெங்கும் சுற்றி வருகிறார். ‘பழைய தேவையற்ற பொருட்களால் நிறைந்த கோள்’ என்ற அவரது புத்தகத்தில், இக்குப்பைகளை மறு சுழற்சி செய்யும் தொழில் பல கோடி டாலர் கிடைக்கக் கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உலகமெங்குமுள்ள தொழில் முனைவர்கள், பயன்படுத்த இயலாது என்று தள்ளப்பட்ட தாமிரக் கம்பிகள், அழுக்கான கந்தைத் துணிகள், உடைந்த பிளாஸ்டிக்குகள்…

தேவனுடைய பார்வையில் நேர்மையானதைச் செய்தல்

அநேக ஆங்கிலேய வீட்டுச் சொந்தக்காரர்கள் போலியான தரங்குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகட்டுபவர்களை, “கவ்பாய் பில்டர்ஸ்” என்ற பதத்தால் அழைப்பார்கள். வீட்டுச் சொந்தக்காரர்கள் தாங்கள் அடைந்த மோசமான அனுபவங்களால் ஏற்பட்ட பயம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அப்பெயரை அவர்களுக்கு வழங்கினர்.

ஏமாற்றும் தச்சர்கள், கொத்தனார்கள், கல்தச்சர்கள் போன்றோர் வேதாகம காலத்திலும் சந்தேகமின்றி வாழ்ந்திருப்பார்கள். யோவாஸ் அரசன், ஆலயத்தைப் பழுதுபார்த்து கட்டிய வரலாற்றில், அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பழுதுபார்க்கும் பணியைச் செய்தவர்களும், அவர்களைக் கண்காணித்தவர்களும் முற்றிலும் நேர்மையுடனும், உண்மையாகவும் செயல்பட்டார்கள் (2 இரா 12:15).

எனினும்…

கிறிஸ்துவின் சுகந்த வாசனை

நம்மில் உள்ள ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு மிகவும் கூர்மையான ஞாபகசக்தியை நமக்கு உணர்த்துகிறது? என்னைப் பொறுத்தவரையில் மோப்பம் என்னும் உணர்வுதான் என்று நான் நிச்சயமாகக் கூறமுடியும். ஒரு வகையான சூரிய எண்ணையின் மணம் என்னை உடனே பிரெஞ்சுக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுவிடும். “கோழிக்கறி கூட்டு” என் சிறு பிராயத்தில் பாட்டி வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டும். “பைன்” பற்றிய ஓர் வார்த்தை “கிறிஸ்மஸிற்கும்” முகச்சவரம் செய்தபின் பயன்படுத்தும் ஒருவித வாசைன திரவியம் என் மகளின் பதின் வயதை ஞாபகத்திற்கு கொண்டு வரும்.

கொரிந்தியர் கிறிஸ்துவுக்கு…

அதிசயிக்கத்தக்க அன்பு

பழைய ஏற்பாட்டில் நடந்த இறுதிக்கட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்ச்சியாகிய இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி மறுபடியுமாக எருசலேமில் வந்து குடியேறிய நிகழ்ச்சியை எஸ்றா, நெகேமியா புத்தகங்களில் வாசிக்கிறோம். தாவீதின் நகரம் மீண்டும் எபிரேயக் குடும்பங்களால் ஜனத்தொகை பெருகியது, தேவாலயம் கட்டப்பட்டது, சுவர்கள் பழுதுபார்க்கப்பட்டு கட்டப்பட்டது.

பின் மல்கியா தீர்க்கதரிசி மூலம் சில காரியங்களைத் தெரிந்து கொள்கிறோம். நெகேமியாவுடன் ஒரேகாலத்தில் வாழ்ந்த மல்கியா பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பகுதிகளை மக்களுக்கு கொண்டுவருகிறார். அதில் முதலாவதாக இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது என்னவென்றால் “நான் உங்களை சிநேகித்தேன்…

தொடுவானத்தில் புயல்

அலாஸ்காவில் உள்ள கோடியாக்கில் எங்கள் மகன் ஜோஷ், சால்மன் மீன்களைப் பிடிக்கும் தொழில் செய்யும் ஓர் மீனவ வணிகர்; சில காலத்திற்கு முன்பு எங்கள் மகன் எனக்கு ஓர் புகைப்படத்தை அனுப்பியிருந்தான். அதில் அவன் படகிற்கு சில நூறு அடிகளுக்கு முன்னால் ஓர் சிறிய படகு ஓர் குறுகிய கணவாயின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தொடுவானத்தில் கேடுகளை விளைவிக்கக் கூடிய புயல் மேகங்கள் சூழ்ந்து கொண்டது. ஆனால், தேவனுடைய தெய்வீகத் தன்மையையும், கரிசனையையும் வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக கணவாயின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக அந்த…

புரிந்து கொள்ளுவதற்காகவே

லண்டனில் உள்ள “நேஷனல் காலரி” மாஸ்கோவில் உள்ள “ஸ்டேட் ட்ரெட்யாக்கோவ் போன்ற அருங்காட்சி சாலைகளைச் சென்று பார்ப்பது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும். அற்புதமான சில கலைப்படைப்புகள் என்னைக் குழப்பத்திற்குள்ளாக்கும். ஓவியம் தீட்டும் திரைத் சீலையில் தம் மனம்போன்ற வண்ணங்களை அள்ளித்தெளித்தது போன்ற ஒவியங்களை நான் பார்க்கும்பொழுது நான் என்ன பார்க்கிறேன் என்று எனக்கு தெரிவதேயில்லை. ஆனால் அதை வரைந்துள்ள கலைஞர், தன் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருப்பார்.

சில சமயங்களில் வேதமும், நமக்கு அவ்வாறு தான் தோன்றும் அவற்றைப் புரிந்து கொள்ள நம்மால்…

குழப்பத்திற்கும் மேலானவர்

பழைய ஏற்பாட்டில் 2 சாமுவேலின் புத்தகத்தின் முக்கிய கருத்து என்னவெனில் “வாழ்க்கை என்பது ஓர் குழப்பம்.” இக் கருத்து தொலைக்காட்சியில் வரும் குறுந்தொடர் மினி சீரியலின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இஸ்ரவேலின் அரசனாக தன் ஆட்சியை அங்கு நிறுவுவதற்கு தாவீது முயற்சித்த பொழுது அநேக இராணுவ சவால்களையும், அரசியல் சதித்திட்டங்களையும், நண்பர்கள், குடும்பத்தினரால் காட்டிக் கொடுக்கப்படும் காரியங்களையும் சந்தித்தான். தாவீதும் பத்சேபாளிடம் கொண்ட தவறான உறவினால் நிச்சயமாக அவன் குற்றமற்றவன் என்று கூறமுடியாது (2 சாமு 11-12).

ஆனால் 2 சாமுவேல் இறுதி அதிகாரங்களில்…