தேவன் பேசுகிறார்
சமீபத்தில் என் மருமகன், என் பேத்தி மேகியிடம் நாம் தேவனோடு பேசலாமென்றும், அவர் அவருடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார் என்றும் விளக்கிக் கொண்டிருந்தார். எனது மருமகன் ஈவிங், சில சமயங்களில் தேவன் வேதவசனங்கள் மூலம் நம்முடன் பேசுவார் என்று சொன்னபொழுது, அவள் எந்தவித தயக்கமுமின்றி: “அவர் என்னிடம் ஒருக்காலும் எதுவும் சொன்னதில்லை. கடவுள் என்னோடு பேசினதை நான் ஒருக்காலும் கேட்டதுமில்லை” என்று மறுமொழி கூறினாள்.
“உன் வீட்டை விற்றுவிட்டு தூரமான தேசத்திற்குச் சென்று அங்குள்ள அனாதைகளை கவனி” என்று நாம் செவியால் கேட்கக்கூடியபடி…
விழுதலுக்கான ஆபத்து
என்னுடைய சிநேகிதி எலைன் உடலுக்கு ஊறு உண்டாக்கும் வகையில் கீழே விழுந்து, அதிலிருந்து தேறிக்கொண்டு வரும் வேளையில், மருத்துவமனையிலிருந்த ஒரு பணியாள் அவளது மணிக்கட்டில் பளிச் என்ற மஞ்சள் நிறமுடைய பட்டையைக் கட்டினாள். அப்பட்டையில் விழக்கூடிய ஆபத்து என்று எழுதப்பட்டிருந்தது. இந்த நபரை கவனமாக கண்காணியுங்கள். அவளால் சரியாக நடக்க இயலாது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல அவளுக்கு உதவிசெய்யுங்கள் என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தையின் அர்த்தமாகும்.
“கீழே விழுவதற்கான ஆபத்து” உள்ளது என்று 1 கொரிந்தியர் 10ம் அதிகாரம் விசுவாசிகளை எச்சரிக்கிறது.…
பகிர்ந்து கொள்வோம்
டிஸ்னி லேண்டில் புகழ்பெற்ற ஒரு காட்சியைக் காண்பதற்காக நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபொழுது, வரிசையில் நின்ற அநேக மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நிற்பதைக் குறித்து குறைசொல்லி கொள்ளாமல் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததைக் கவனித்தேன். அப்படி வரிசையில் நின்றபொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகக்கூடிய காரணம் என்னவாக இருக்குமென்பதைக் குறித்து ஆழமாக சிந்தித்தேன். அங்கு நின்றவர்களில் ஒரு சிலர்தான் தனிநபர்களாக வந்திருந்தார்கள். சிநேகிதர்கள், குடும்பங்கள், குழுக்கள், தம்பதியராக வந்திருந்தவர்கள், வரிசையில் நிற்பதைப்பற்றி பேசுவதைவிட வேறுபல அனுபவங்களைக் குறித்து ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கையும் தனிமையாக…
தேசத்தில் இராட்சதர்கள்
இஸ்ரவேல் மக்கள் இரண்டு ஆண்டுகள் சீனாய் மலையின் அருகில் பாளையமிறங்கி தங்கியிருந்தபின், தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்திற்குள் நுழைய இருந்தார்கள். அப்பொழுது 12 வேவுகாரர்களை அனுப்பி அந்தத் தேசத்தின் தன்மையையும், அங்கு வாழும் ஜனங்களின் தன்மையையும் பற்றி அறிந்து வரும்படி தேவன் அவர்களிடம் கூறினார். அந்த வேவுகாரர்கள் அங்கு வாழ்ந்த கானானியரின் பெலத்தையும், அவர்களுடைய பட்டணங்களின் அளவையும் பார்த்து, “அவர்களை எதிர்க்க நம்மால் கூடாது” என்று 10 பேர் கூறினார்கள், அவர்களில் 2 பேர் “அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்” என்று…
ஒப்பிட்டுப் பார்ப்பதில் முழுக்கவனம் செலுத்துவது
ஹார்வேர்டு தொழிற்பயிற்சி பள்ளியில் பேராசிரியராக இருந்த தாமஸ் T. டிலாங், அவருடைய மாணவர்கள், உடன் பணிசெய்பவர்கள் மத்தியில் கவலை அளிக்கக்கூடிய ஒரு மனப்பாங்கு நிலவுவதைக் கண்டார். அதாவது அவர்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை இருந்தது. “தொழில் வல்லுநர்கள், புகழ்பெற்ற வணிக அமைப்பின் மேலாண்மை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மேலும் மற்ற கைதேர்ந்த தொழில் நிபுணர்கள் ஆகியோர் அவர்களுடைய சொந்த சாதனைகளை மற்றவர்களின் சாதனைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள்... இது தனிப்பட்ட நபருக்கும், அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல. நீங்கள்…
நீங்கள் செய்யும் அந்தக் காரியம்
வாகனங்களின் அணிவகுப்பு புறப்படக் காத்திருந்த பொழுது, ஓர் இளம் கடற்படை வீரன் அவனது அதிகாரியின் வாகனத்தின் ஜன்னலை வேகமாகத் தட்டினான். எரிச்சலடைந்த அந்த அதிகாரி அவனது வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி ‘என்ன’? என்று கேட்டான்.
“நீங்கள் செய்ய வேண்டிய அந்தக் காரியத்தை செய்ய வேண்டும்” என்று அந்த கடற்படை வீரன் கூறினான். “என்ன காரியம்”? என்று அந்த அதிகாரி கேட்டான். “நீங்கள் எப்பொழுதும் செய்வீர்களல்லவா அந்தக் காரியம்” என்று அந்த கடற்படைவீரன் கூறினான்.
அந்த அதிகாரிக்கு அப்பொழுதுதான் மனதில் தோன்றியது, அதாவது அவன்…
மன உறுதியுடன் செயல்படுபவர்கள்
2015ம் ஆண்டு கோடைகாலத்தில் ஹண்டர் என்ற 15 வயது சிறுவன் பிரேடன் என்ற 8 வயது சகோதரனை சுமந்துகொண்டு, மூளைப்பாதிப்பு ஏற்பட்ட மக்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 58 மைல்கள் நடந்து சென்றான். பிரேடன் 60 பவுண்டு எடை உள்ளவனாக இருந்ததால், ஹண்டர் இடை இடையே அடிக்கடி நின்று ஓய்வு எடுத்தான். அப்படி ஓய்வு எடுத்த இடங்களிலிருந்த மக்கள், அவனது சதைப்பிடிப்பை நீக்குவதற்கு உதவிசெய்தார்கள். பிரேடனின் எடையைக் குறைக்க ஹண்டர் சிறப்பான வார்ப்பட்டையை அணிந்திருந்தான். சரீரப்பிரகாரமாக ஏற்படும் உடல்வலியை குறைக்க அந்த சிறப்பு வார்ப்பட்டை…
இருளில் பிரகாசித்தல்
அரசியல் கைதியாக இருந்த வக்லாவ் ஹேவல் 1989ல் செக்கஸ்லோவேக்கியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். 2011ம் ஆண்டு பராகுவேயில் நடந்த அவரது அடக்க ஆராதனையில் பராகுவேயில் பிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் செயலர் மாடலின் ஆல்பிரைட், ஹேவல், “அந்தகாரத்தில் இருந்தவர்களுக்கு வெளிச்சத்தைப் பிரகாசிக்கப்பண்ணினார்” என்று விவரித்தார்.
செக்கஸ்லோவேக்கியாவில் (பின்னால் செக் குடியரசு) இருந்த அரசியல் சூழ்நிலையில் ஹேவல் எப்படியாக வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்தாரோ, அதுபோல கர்த்தராகிய இயேசு, இந்த உலகம் முழுவதற்கும் ஒளியைக் கொண்டுவந்தார். ஆதியிலே தேவன் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார்…
நாம் விட்டுச்செல்லும் சொத்து
ஒரு சிறிய நகரத்தில் ஒரு உணவு விடுதியில் நான் தங்கி இருந்தபொழுது, சாலைக்கு மறுபக்கம் இருந்த ஓர் ஆலயத்தில் ஆராதனை நடந்ததைக் கவனித்தேன். சிறியோர், பெரியோர் என அதிக மக்கள் ஆலயத்தின் பக்கவாட்டிலுள்ள இடத்தில் நிற்கத்தக்கதாக ஆலயம் மக்களால் நிரம்பி வழிந்தது. வந்துகொண்டிருந்த ஒரு சவ வாகனத்தை நான் பார்த்தபொழுது, அது ஓர் அடக்க ஆராதனை என்பதை அறிந்தேன். ஆலயத்திலிருந்த கூட்ட நெரிசலை நான் பார்த்தபொழுது, அது அந்த ஊரிலிருந்த ஒரு முக்கியமான நபரின் அடக்க ஆராதனையாக இருக்கலாமென்று நினைத்தேன். ஒருவேளை அவர் ஒரு…