பேராசையுள்ள பிடி
சிறுவனும் கொட்டைகளும் என்ற, பழங்கால நீதிக் கதையில், ஒரு சிறு பையன் கொட்டைகள் வைக்கப்பட்டிருந்த ஜாடியினுள் கையைவிட்டு, கை நிறைய கொட்டைகளை அள்ளிக் கொண்டு, கையை வெளியே எடுக்க முயற்சிக்கிறான். கொட்டைகளோடு கையை வெளியே எடுக்க முடியவில்லை. தான் அள்ளிக் கொண்டதில், ஒன்றையும் விட தயாராக இல்லாத அச்சிறுவன் அழ ஆரம்பிக்கின்றான், சில கொட்டைகளை விட்டு விட்டு, கையை வெளியே எடுக்க ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பேராசை என்பது கடினமான எஜமானன்.
இந்தக் கதை தரும் நீதியை, பிரசங்கியின் ஞான ஆசிரியர் நமக்கும் கூறுகின்றார். அவர் சோம்பேறி, பேராசைக்காரன் ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார். “மூடன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு, தன் சதையையே தின்கிறான். வருத்தத்தோடும், மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.”(4:5-6). என்கின்றார். சோம்பேறி, தான் அழிந்து போகும் மட்டும் காரியங்களைத் தள்ளி போட்டுக் கொண்டேயிருப்பான், செல்வத்தைச் சேகரிப்பவனும், ஒரு நாள் , தன்னுடைய “பிரயாசம் யாவும் வீண், வருந்தத் தக்க வேலையை செய்தேனே “என்பான் (வச. 8)
பேராசையோடு பொருளைச் சேகரிக்க கஷ்டப்படுவதை விட்டு விட்டு, இருப்பதில் திருப்தியடைந்தவர்களாய் வாழ வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். நமக்கென்று தேவன் கொடுத்திருப்பது எப்பொழுதும் இருக்கும். இயேசு நமக்குச் சொல்வது,”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ (மாற். 8:36)

அவன் கற்றுக் கொண்டான்
போதகர் வாட்சன் ஜோன்ஸ், தன்னுடைய இளம்வயதில், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டதை நினைத்துப் பார்க்கின்றார். அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய தந்தை அவனுக்கு அருகிலேயே வந்து கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அவன் அருகிலிருந்த முற்றத்தில், சிறுமிகள் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவன் தன் தந்தையிடம்,” அப்பா, நான் இதனைக் கற்றுக் கொண்டேன்” என்றான். ஆனால் அவன் கற்றுக் கொள்ளவில்லை அவனுடைய சைக்கிளை,அவனுடைய தந்தை உறுதியாக பிடித்திருப்பதாலேயே அவனால் ஓட்ட முடிந்தது என்பதை அவன் பின்புதான் தெரிந்து கொண்டான் .அவன் நினைத்திருந்தபடி, அவன் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை.
நம்முடைய பரலோகத் தந்தையும், நாம் நன்கு முதிர்ச்சி பெற வேண்டுமென விரும்புகிறார்” மேலும், நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத் தக்க பூரண புருஷராகும்வரைக்கும் சிலரை நம்மை வழிநடத்தும் படி ஏற்படுத்துகின்றார் (எபே. 4:11-13). ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது, சரீர வளர்ச்சியிலிருந்து வேறுபட்டது .பெற்றோர், தங்களுடைய பிள்ளைகளை, பெற்றோரின் உதவியின்றி, தனித்து செயல்படக்கூடிய திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டுமென வளர்க்கின்றனர். ஆனால் நம்முடைய பரிசுத்த தந்தை, ஒவ்வொரு நாளும் நாம் அவரையே சார்ந்தவர்களாக வளர வேண்டுமென விரும்புகின்றார்.
“ தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் பெருகக்கடவது” என்று பேதுரு தன்னுடைய கடிதத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் கடிதத்தை முடிக்கும் போது, “ நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” என்று வலியுறுத்திக் கூறுகின்றார் (2 பேது. 1:2; 3:18). முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள், இயேசுவைச் சார்ந்திருத்தலை, ஒருபோதும் விட்டு விடுபவர்களல்ல.
“ நம்மில் சிலர், நம்முடைய வாழ்க்கையாகிய வண்டியின் கைப்பிடியை உறுதியாகப் பற்றியிருக்கும் இயேசுவின் கரத்தை தட்டி விடுவதற்கு மிகவும் ஆவலாயிருக்கிறோம்” என்று வாட்சன் எச்சரிக்கின்றார். நாம் நிலை தடுமாறி, விழ ஏதுவாகும் போது, நம்மைத் தாங்கி, தூக்கி, அணைத்துக் கொள்ள தயாராக இருக்கும் அவருடைய வலிமையான கரங்களைத் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். நாம் கிறிஸ்துவை சார்ந்து கொள்ளாமல், நம்மால் வளர முடியாது. இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் நம்முடைய வேர்கள் ஆழமாகச் சென்றால் தான், நாம் நன்கு வளர முடியும்.

தேவனுடைய அருமையான பொக்கிஷம்
ஒரு அரண்மனையை கற்பனை செய்து கொள். ஒரு பெரிய அரசன் அறியணையில் வீற்றிருக்கிறார். அவரைச் சுற்றிலும் எல்லா வகை ஊழியக்காரரும், அவரவருடைய சிறந்த ஒழுங்கு முறைப் படி நிற்கின்றனர். அந்த அரசனின் பாதத்தருகே ஒரு பெட்டி வைக்கப் பட்டுள்ளது. அந்த அரசன் அவ்வப்போது பெட்டியில் உள்ளவற்றை தடவிப் பார்க்கின்றார். அப்படி, அந்த பெட்டியினுள் என்ன இருக்கிறது? நகைகள், தங்கம், அரசன் விரும்பும் விலையேறப்பெற்ற கற்கள்? இந்த பெட்டியில், அரசனுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தரும் அருமையான பொக்கிஷங்கள் சேகரிக்கப்பட்டு, வைக்கப் பட்டுள்ளன அது என்னவென்று உன் கற்பனையில் தெரிந்து விட்டதா?
இந்த பொக்கிஷத்தை எபிரெய மொழியிலே “செகுலா” என்பர். இதன் அர்த்தம் “சொந்த சம்பத்து” என்பது. இந்த வார்த்தையை, பழைய ஏற்பாட்டில், யாத்திராகமம் 19:5, உபாகமம் 7:6, சங்கீதம் 135:4 ஆகியவற்றில் காணலாம். இது இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கின்றது. அப்போஸ்தலனாகிய பேதுரு புதிய ஏற்பாட்டில் எழுதும் போது “தேவனுடைய இரக்கத்தைப் பெற்ற ஜனங்கள் ,“ “தேவனுடைய ஜனங்கள்” (வ.10) என்று எழுதுகின்றார். இவர்கள், இஸ்ரவேலர் அல்லாத ஒரு கூட்டத்தார். அதாவது, இயேசுவை விசுவாசிப்பவர்களைப் பற்றி இவர் எழுதுகின்றார். இதில் இஸ்ரவேலரும், புறஜாதியினரும் அடங்குவர் .“நீங்களோ..... தேவனுக்குச் சொந்த ஜனமாயும் இருக்கிறீர்கள்” (வ.9).
பரலோகத்தின் சர்வ வல்ல ராஜா, அவருடைய அருமையான பொக்கிஷங்களில் ஒன்றாக, உன்னை கருதுகின்றார் எனின் அதனை கற்பனை செய்ய முடிகிறதா! அவர், பாவம் மற்றும் சாவின் பிடியிலிருந்து உன்னை மீட்டு எடுத்துள்ளார். அவர் உன்னை தன்னுடைய சொந்த பிள்ளையாகக் கருதுகின்றார். ராஜாவின் குரல் சொல்கின்றது, ”இந்த பிள்ளையை நான் நேசிக்கிறேன், இது என்னுடைய பிள்ளை”

தேவனைப் பற்றிய சம்பாஷணை
2018 ல் பார்னா குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவு, அநேக அமெரிக்கர்கள், தேவனைப் பற்றி பேச விரும்பவில்லை எனத் தெரிவிக்கிறது. ஏழு சதவீதத்தினரே, ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து அடிக்கடி பேசுகின்றனர். இயேசுவின் விசுவாசிகளாக, வாழ்ந்து காட்டும் இந்த அமெரிக்கர்கள், மற்றவர்களை விட அதிக வித்தியாசமானவர்கள் அல்ல. பதின்மூன்று சதவீத அமெரிக்கர்கள் ஒழுங்காக ஆலயத்திற்குச் செல்பவர்கள், இவர்கள், ஆவிக்குரிய கருத்து உரையாடல்களை வாரம் ஒரு முறை வைத்துக் கொள்கின்றனர்.
ஆவிக்குரிய சம்பாஷணைகள் குறைந்து வருகிறது என்ற செய்தி, நமக்கு புதியதல்ல. தேவனைக் குறித்து பேசுவது ஆபத்தாயுள்ளது. குறுகிய கண்ணோட்டமுள்ள அரசியல் கட்சிகளாலும், கருத்து வேறுபாடுகள், உறவில் பிளவுகளை ஏற்படுத்துவதாலும், ஆவிக்குரிய உரையாடல்கள், நம் வாழ்வில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை உணர்த்துவதாலும், இவ்வகை உரையாடல்கள் ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகின்றன.
உபாகமம் புத்தகத்தில், தேவனைப் பற்றிய உரையாடலை, தங்கள் அனுதின வாழ்வில் இணைந்த ஒன்றாக கருத வேண்டும் என அவருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிள்ளைகள், அவருடைய வார்த்தைகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், அடிக்கடி பார்க்கக் கூடிய இடங்களிலே எழுதி வைக்க வேண்டும். அவருடைய கட்டளைகளைக் குறித்து பிள்ளைகளிடம் வாழ்நாளெல்லாம் பேச வேண்டும். “நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், படுத்துக்கொள்ளும் போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்து பேசுவீர்களாக” (11:20).
தேவன் நம்மை உரையாடலுக்கு அழைக்கிறார். முயற்சி செய்து பார். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு, உன்னுடைய சிறிய வீண் பேச்சுக்களை, ஆழ்ந்த கருத்துள்ள, உரையாடல்களாக்கிப் பார். நாம் தேவனுடைய வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை செயல் படுத்தும் போது, தேவன் நம்முடைய சமுதாயத்தை ஆசிர்வதிப்பார்.

தேவனுடைய அங்கீகாரம்
பிரசித்திப் பெற்ற இசையமைப்பாளரான கெஸப்பி வெர்டி (1813-1901) இளைஞனாக இருந்த போது, எப்படியாகிலும் அங்கீகாரம் பெற்றுவிட வேண்டும் என்ற தணியாத தாகம், அவரை வெற்றிக்கு கொண்டு சென்றது. வாரன் வியர்ஸ்பீ அவரைக்குறித்து எழுதும் போது,”வெர்டி முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்திய போது, அந்த இசையமைப்பாளர் திரை மறைவில் நின்று கொண்டு, பார்வையாளர்களில் ஒருவரின் முகத்தையே கண்காணித்துக் கொண்டிருந்தார். அவர் தான் மிகப் பெரிய இசையமைப்பாளரான ரோசினி. வெர்டியைப் பொருத்தமட்டில், அரங்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் அல்லது ஊளையிடுகிறார்கள் என்பது பிரச்சனையல்ல, அவர் விரும்பியதெல்லாம், மிகப் பெரிய இசையமைப்பாளரின் முகத்தில், அங்கீகரிக்கும் ஒரு புன்னகையையே” என்றார்.
யாருடைய அங்கீகாரத்தை நாம் தேடுகிறோம் ? பெற்றோருடையதையா ? எஜமானுடையதையா? நாம் அன்பு செலுத்துபவரிடமிருந்தா? பவுலிடம் இதற்கு ஒரு பதில் இருந்தது. “சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத் தக்கதாய்,தேவன் எங்களை உத்தமரென்று எண்ணியபடியே, நாங்கள், மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்” (1 தெச. 2:4) என்றார்.
தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறல் என்பது என்ன? இதற்கு அடிப்படை தேவை இரண்டுள்ளது. மற்றவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற ஆவலிலிருந்து விடுபடல், நம்மை நேசித்து, நமக்காகத் தம்மையே கொடுத்த கிறிஸ்துவைப் போல நம்மை மாற்றும் படி, பரிசுத்த ஆவியானவரிடம் நம்மை ஒப்புக்கொடுத்தல். தேவனுடைய நோக்கத்தை நம்மில்,நம் மூலமாக முழுமையாக நிறைவேற்ற நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, மிக முக்கியமானவரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வோம், ஒரு நாள், அவருடைய முகத்தில் நம்மை அங்கீகரிக்கும் புன்னகையைக் காண்போம்.