வகை  |  odb

இரக்கத்தின் புலம்பல்

என்னுடைய தந்தை சுகவீனமானபோது, மாந்திரீகத்தினாலேயே தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அவருக்கு எட்ஸ் வியாதி. அவர் மரித்தபோது, அவருடைய பத்து வயது மகள் மெர்ஸி, தன்னுடைய தாயாரை மிகவும் அண்டிக்கொண்டாள். அவளுடைய தாயாரும் சுகவீனமானார், மூன்று ஆண்டுகள் கழித்து அவளும் மரித்துப் போனாள். அதிலிருந்து மெர்ஸியின் சகோதரிதான் தன்னுடைய ஐந்து உடன்பிறப்புகளையும் வளர்த்தாள். அப்பொழுதுதான் மெர்ஸி தன்னுடைய ஆழ்ந்த வேதனைகளைக் குறித்து எழுத ஆரம்பித்தாள்.

எரேமியா தீர்க்கதரிசியும் தன்னுடைய வேதனைகளைக் குறித்து எழுதிவைத்தார். இந்த வேதனையான புலம்பல் புத்தகத்தில், யூத ஜனங்களுக்கு, பாபிலோனிய போர் வீரர்களால்  இழைக்கப்பட்ட வெறுக்கத்தக்கச் செயல்களைக்குறித்து எழுதுகின்றார். இதில் பாதிக்கப்பட்ட சிறுபிள்ளைகளுக்காக எரேமியாவின் உள்ளம் வேதனையடைகிறது. “என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது” என்று கதறுகின்றார், “என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம்… குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்” (2:11) என்கின்றார். யூதா ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்தார்கள், ஆனால் அவர்களுடைய குழந்தைகள் அதற்கான கிரயத்தைச் செலுத்துகின்றார்கள். “அவர்கள் தங்கள் பிராணனை தங்கள் தாய்களின் மடியிலே விடுகிறார்கள்” என்று எழுதுகின்றார் (வச. 12).

இத்தனை துயரங்களையும் கண்ட எரேமியா தேவனை விட்டு விலகி விடுவார் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அவரோ எஞ்சியிருக்கிற ஜனங்களை நோக்கி, “ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப் போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு” (வச. 19) என்கின்றார்.

மெர்ஸியும் எரேமியாவும் செய்தது போல நம்முடைய இருதயத்தை தேவனிடம் ஊற்றிவிடுவது நல்லது. மனித வாழ்வில் புலம்புவது என்பது ஒரு கடினமான பகுதி. அத்தகைய வேதனையை தேவன் அனுமதித்தாலும், அவரும் நம்மோடு சேர்ந்து வருத்தப்படுகின்றார். அவருடைய சாயலில் நாம் உருவாக்கப்பட்டுள்ளோம், அவரும் நம்மோடு புலம்புகின்றார்!

பாதையை விட்டு விலகாதிருப்பது எப்படி

அமெரிக்கா தேசத்தைச் சேர்ந்த, டேவிட் பிரவுண், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில், கண்தெரியாதோரில், உலகிலேயே மிகச் சிறந்த ஓட்ட வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் தனக்கு கிடைத்த இந்தப் பாராட்டுதலை தேவனுக்கும், தனக்கு ஆரம்ப நாட்களிலேயே ஆலோசனையளித்த தனது தாயாருக்கும் (“எங்கேயாகிலும் உட்கார்ந்தேயிருக்கக் கூடாது”), ஓட்டத்தில் ஆழ்ந்த அநுபவமுடைய தன்னுடைய பயிற்சியாளரான ஜெரோம் ஏவெரிக்கும் செலுத்தினார். பிரவுணின் விரல்களில் கட்டப்பட்ட கயிறுகளின் மூலம் ஏவெரி, அவனை ஓட்டப் பந்தயங்களில் வெற்றிப் பெறுவதற்கு வழிகாட்டினார், அவர் தனது வார்த்தைகளாலும், தொடுதலாலும் ஏவெரியை வழிநடத்தினார்.

“அவருடைய ஆலோசனைகளுக்கு செவிசாய்த்ததாலேயே” என்று பிரவுண் கூறினான். 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பாதை வளைந்து செல்லும் போது, “அகன்ற வளைவை எடுக்க வேண்டும்” என்பார். “ஒவ்வொரு நாளும் பொழுதும், ஓட்டத்தைப் பற்றிய நுணுக்கங்களை ஆராய்வோம்”, மேலும், “நாங்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, தொடுதல் மூலமாகவும் எங்களுக்குள்ளே கருத்துபரிமாற்றம் செய்துகொண்டோம்” என்றான்.

நம்முடைய வாழ்க்கையாகிய ஓட்டத்திலும், நமக்கொரு பரம வழிகாட்டி இருக்கின்றார்.  நம்முடைய உதவியாளராகிய பரிசுத்த ஆவியானவர், அவருடைய வழியில் நாம் நடக்கும் படி, நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றார். “உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்” என்று யோவான் சொல்கின்றார் (1 யோவா. 2:26). “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது” (வச. 27) என்கிறார்.

பிதாவையும், அவருடைய குமாரனாகிய மேசியாவையும் மறுதலிக்கிற “அந்திக்கிறிஸ்து” வை (வச. 22), அவருடைய காலத்திலிருந்த விசுவாசிகள் சந்தித்ததாலேயே, யோவான் இந்த ஞானம் நிறைந்த வார்த்தைகளை அவர்களுக்கு எழுதுகின்றார். இவ்வாறு கிறிஸ்துவை மறுதலிப்பவர்களை நாம் இப்பொழுதும் சந்திக்கின்றோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாக இருந்து, நாம் இயேசுவைப் பின்பற்றுவதற்கு உதவிபுரிகிறார். அவருடைய சத்தியத்தின் பாதையை விட்டு விலகாதபடி, நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம்.

தேவனளவு பெரிய அன்பு

டொமினிக்கன் குடியரசுக்கு உட்பட்ட சான்டோ டொமிங்கோ என்ற இடத்திலுள்ள ஒரு பின்தங்கிய வசிப்பிடத்தை நான் பார்வையிட்டேன். அங்குள்ள வீடுகள் எல்லாம் வளைவுகளோடு அமையப்பெற்ற இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்தன, அதில் மின் இணைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருந்தன. நான், அங்குள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவர்களோடு நேரடியாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பைப் பெற்றேன். அவர்களின் வேலையில்லா திண்டாட்டம், மது பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களை விடுவித்தல் ஆகியவற்றில், ஆலயங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் குறித்து கலந்துரையாடினேன்.

ஒரு குறுகிய சந்தில் அமைந்திருந்த, அபாயகரமான ஏணி வழியாக ஏறி, ஒரு தாயாரையும் அவளுடைய மகனையும் பேட்டி எடுத்தேன். ஒரு சில நிமிடங்களில் ஒருவர் வேகமாக வந்து, “நாம் இப்பொழுதே இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்”, கொடிய கைக் கோடாரிகளைப் பயன்படுத்தும் ஒரு கூட்டத்தின் தலைவர், நம்மைத் தாக்குவதற்கு கூட்டத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறார், என்றார்.

நாங்கள் அடுத்த மக்கள் கூட்டத்தைச் சந்திக்கச் சென்றோம். அங்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. அதற்கான காரணத்தைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன். அங்கு நான் ஒவ்வொரு வீடாகச் சந்தித்தபோது, ஒரு கூட்டத்தின் தலைவன் வெளியே எங்களுக்குப் பாதுகாவலாக நின்றான். அவருடைய மகளின் படிப்பு மற்றும் சாப்பாட்டுச் செலவுகளை அங்குள்ள சபையினர் பார்த்துக்கொள்கின்றனர், விசுவாசிகள் அவளுக்கு ஆதரவாக நின்றதால், அவன் எங்களுக்குக் காவலாக நின்றான்.

மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு ஒப்பிடமுடியாத ஒரு வகை அன்பினைக் குறித்து விளக்குகின்றார். இவ்வகை அன்பு தகுதியானவர்களை மட்டும் அணைத்துக்கொள்ளும் அன்பல்ல, தகுதியற்றவர்களிடம் காட்டப்படும் அன்பு (மத். 5:43-45), உறவினர்களையும் நண்பர்களையும் தாண்டி, பதிலுக்கு நம்மீது அன்பு செலுத்த முடியாத நபர்களிடம் காட்டப்படும் அன்பு (வச. 46-47). இதுவே மிகப்பெரிய தேவஅன்பு (வச. 48), அனைவரையும் ஆசிர்வதிக்கும் அன்பு.  

சான்டோ டோமிங்கோவிலுள்ள விசுவாசிகள் இந்த அன்பை செயலில் காட்டிய போது, அருகிலுள்ளவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. கடினப்பட்ட இருதயங்கள், தங்களை ஏற்றுக்கொண்டவர்களின் மீது கரிசனைகாட்ட ஆரம்பித்தன. இந்த மிகப் பெரிய தேவஅன்பு பட்டணங்களுக்குள் வரும் போதும் இத்தகைய மாற்றத்தைக் காணலாம்.

பரிசுத்த அக்கினி

பல ஆண்டுகளாக வறட்சியையும், காட்டுத் தீயையும் சந்தித்த, தெற்கு கலிபோர்னியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஜனங்கள், இதனை தேவனுடைய செயல் என்று நம்புகின்றார்கள். இந்த வருந்தத்தக்க எண்ணத்தோடு, ஒரு நபரைக் குறித்துச் செய்தியாளர்கள் பரிசுத்த அக்கினி என குறிப்பிடுவதும் சேர்ந்துகொண்டது. அந்த இடம் பரிசுத்த ஜிம் பள்ளத்தாக்குப் பகுதியாகும் என்பதை அநேகர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் யார் இந்த பரிசுத்த ஜிம்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த ஜிம், ஒரு தேனீ வளர்ப்பாளர், மதநம்பிக்கையற்றவர், யாவரிடமும் சண்டையிடும் குணமுடையவர். அப்பகுதியினர், அவருக்கு பரிசுத்த ஜிம் என கிண்டலாக, பட்டப்பெயர் சூட்டினர்.

யோவான் ஸ்நானகன் “பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும்” என்று ஒரு ஞானஸ்நானத்தைக் குறித்து, தன்னுடைய சொந்த அநுபவத்திலிருந்து விளக்குகின்றார் (லூக். 3:16). நாம் சற்று பின்னோக்கிப் போவோமேயானால், மேசியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போல இருப்பார் (மல். 3:1-3; 4:1) என்று மல்கியா தீர்க்கதரிசி குறிப்பிடுகின்ற மேசியாவையும் அக்கினியையும் அவர் கருதியிருக்கலாம். தேவனுடைய ஆவியானவர், பலத்த காற்றையும் அக்கினியையும் போல அவருடைய சீடர்களின் மேல் இறங்கிய போதுதான், மல்கியா மற்றும் யோவான் கூறிய இரண்டும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம் (அப். 2:1-4).

யோவான் கூறிய அக்கினி, அவர்கள் எதிர்பார்த்ததொன்றல்ல. தேவன் உண்மையாக செயல்படும் போது, வேறு வகையான மேசியாவையும் பரிசுத்த அக்கினியையும் அறிவிக்கும் தைரியத்தைப் பெற்றார்கள். இயேசுவின் ஆவியானவர் வெளிப்படும்போது, நம்முடைய வீணான மனித முயற்சிகளெல்லாம் சுட்டெரிக்கப்பட்டு, ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றால் நிரப்பப் படுவோம் (கலா.5:22-23). இவற்றின் மூலமாகவே தேவன் நம்மில் செயல்பட விரும்புகின்றார்.

அழகினை ரசிக்க ஒரு நேரம்

ஜனவரி மாதத்தில் ஒரு நாள் காலை எழுந்தபோது, அந்த நடு பனிக்காலத்தில், அநேக வாரங்களாக பார்த்துக்கொண்டிருக்கிற, அதே சோகக் காட்சியான, பனிபடர்ந்த நிலப்பரப்பையும், அதனூடே பழுப்படைந்த புற்கள் நீட்டிக் கொண்டிருப்பதையும், சாம்பல் நிற வானத்தையும், குச்சிகளாகக் காட்சிதரும் மரங்களையும் தான் காணமுடியும் என்று நினைத்தவனாக வெளியேப் பார்த்தேன். ஒரே இரவில், வித்தியாசமான ஒன்று நடந்துள்ளது. ஒரு பனிப் புயலால் வெளி முழுவதும், பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. அந்த மந்தமான காட்சிகள், அழகிய காட்சியாக மாறியிருந்தது, அந்தப் பனிக்கட்டிகள், சூரிய வெளிச்சத்தில் மின்னியதோடு, என்னையும் பிரகாசிக்கச் செய்தது.

சில வேளைகளில், நமக்குள்ளே நம்பிக்கை வேண்டும் என்பதையே மறந்து விட்டுப் பிரச்சனைகளைப் பார்க்கிறோம். ஒவ்வொரு நாள் காலையும், வேதனையும், பயமும், ஏமாற்றமும் தான் நம்மைச் சந்திக்க காத்திருக்கின்றன என நாம் எதிர் பார்க்கிறோம். ஆனால் இதுவரை நடந்திராத ஒன்று நடக்கக் கூடுமென நாம் நினைப்பதேயில்லை. மீண்டும் இழந்தவற்றைப் பெற்றுக்கொள்ளல், வளர்ச்சியடைதல் அல்லது தேவனுடைய வல்லமையினால் வெற்றி பெறல் ஆகியவற்றை நாம் எதிர் பார்ப்பதேயில்லை. நம்முடைய கஷ்ட வேளைகளை கடந்து செல்வதற்கு தேவன் நமக்கு உதவுகின்றார் என வேதாகமம் கூறுகின்றது. உடைந்த உள்ளங்களை அவர் சரிசெய்கின்றார், அடிமைத்தனத்திலிருப்போரை விடுவிக்கிறார், துயரத்திலிருப்போரைத் தேற்றுகிறார், “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கிறார்” (ஏசா. 61:3).

நாம் பிரச்சனையில் இருக்கும் போது, நம்முடைய தேவன், நம்மை மகிழ்ச்சியாக்க விரும்ப மாட்டாரா? நம்முடைய சோதனைகளின் மத்தியில் அவரே நமது நம்பிக்கையாய் இருக்கிறாரல்லவா? நாம் முழுமையான விடுதலையைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கின்றார், நம்மை ஊக்கப்படுத்துகின்றார், அடிக்கடி தம்மை, நமக்கு வெளிப்படுத்துகின்றார். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், “என்னுடைய ஆழ்ந்த காயங்களின் வழியாக உம்முடைய மகிமையைக் கண்டேன், அது என்னையும் பிரகாசிப்பித்தது” என்ற தூய அகஸ்டினின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வோம்.