வகை  |  odb

அவரது குரலை அறிந்து கொள்ளுங்கள்

விடுமுறை வேதாகம பள்ளியில் ஒரு வருடம், ஆதித் - தின் தேவாலயம் வேதாகம கதைகளை விளக்குவதற்கு உயிருள்ள விலங்குகளை கொண்டு வர முடிவு செய்தது. அவன் உதவ வந்தபோது, ​​ஆதித் ஒரு ஆட்டை உள்ளே கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான். அவன் ஒரு கம்பளி மிருகத்தை உண்மையாகவே ஒரு கயிற்றால் தேவாலய மண்டபத்திற்குள் இழுத்து வர வேண்டியதாயிருந்தது. ஆனால் வாரம் செல்லச் செல்ல, அதற்கு அவனைப் பின்தொடர தயக்கம் குறைந்தது. வார இறுதிக்குள் ஆதித் இனி கயிற்றைப் பிடிக்க வேண்டியதில்லை; அது அவனை நம்பும் என்று அறிந்து அவர் ஆட்டை அழைத்தார் அது அவனை பின்தொடர்ந்தது.

புதிய ஏற்பாட்டில், இயேசு தன்னை ஒரு மேய்ப்பருடன் ஒப்பிடுகிறார், அவருடைய ஜனங்கள், ஆடுகள் அவருடைய குரலை அறிந்திருப்பதால் அவரைப் பின்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகிறார் (யோவான் 10: 4). ஆனால் அதே ஆடுகள் அந்நியர் அல்லது திருடனிடமிருந்து ஓடும் (வச. 5). ஆடுகளைப் போலவே, நாம் (தேவனுடைய பிள்ளைகள்) நம்முடைய மேய்ப்பரின் குரலை அவருடனான உறவின் மூலம் அறிந்துகொள்கிறோம். அப்படி நாம் செய்யும்போது அவருடைய தன்மையை நாம் காண்போம், அவரை நம்ப கற்றுக்கொள்வோம்.

நாம் தேவனை அறிந்து கொள்வதிலும் அன்புகூர்வதிலும் வளருவது, ​​அவருடைய குரலை நாம் பகுத்தறியவும், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” அப்படி வரப்போகும் அந்த திருடனிடமிருந்தும் (வச. 10) - நம்மை ஏமாற்றி அவரிடமிருந்து நம்மைப் பிரிக்க முயற்சிப்பவர்களிடமிருந்தும், திறம்பட தப்பியோடவும் செய்யும் (வச. 5). அந்த கள்ள போதகர்களைப் போலல்லாமல், பாதுகாப்பிற்கு நேராய் நம்மை வழிநடத்த நம் மேய்ப்பரின் குரலை நாம் நம்பலாம்.

ஏதோ மிகப்பெரியது

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள புத்தகக் கடையான அக்டோபர் புத்தகங்கள் கடைக்கு அதன் சரக்குகளைத் தெரு கோடியில் உள்ள முகவரிக்கு நகர்த்த இருநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவினார்கள். உதவியாளர்கள் நடைபாதையில் வரிசையாக நின்று புத்தகங்களை ஒரு “மனித சுமக்கும்தொடர் பட்டையின்” வழியே கைமாற்றி அனுப்பினர். தன்னார்வலர்கள் செயலைக் கண்ட ஊழியர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார், “மக்கள் [உதவுவதைப்] பார்ப்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் பெரிய விஷயத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்.”
 
நாம் நம்மை விட மிகப் பெரியகாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க முடியும். தேவன் தம்முடைய அன்பின் செய்தியை இந்த உலகிற்கு கொண்டு செல்ல நம்மை பயன்படுத்துகிறார். யாரோ ஒருவர் நம்முடன் அந்த செய்தியைப் பகிர்ந்ததால் நாம் வேறொரு நபரிடம் திரும்பி அதை பகிரலாம். பவுல் இதை இவ்வாறு ஒப்பிடுகிறார்,- தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டுவது - ஒரு தோட்டத்தை வளர்ப்பது. நம்மில் சிலர் விதைகளை நடவு செய்கிறோம், நம்மில் சிலர் விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். பவுல் சொன்னது போல், “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 3: 9).

ஒவ்வொரு வேலையும் முக்கியம். ஆனால் அனைத்தும் தேவஆவியின் வல்லமையால் செய்யப்படுகின்றன. தேவன் அவர்களை நேசிக்கிறார் மற்றும் அவர்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி தம்முடைய குமாரனை அவர்களுடைய இடத்தில் மரிக்கும்படி அனுப்பினார் என்பதை அவர்கள் கேட்கும்போது தம்முடைய ஆவியால், ஆவிக்குரிய ரீதியில் அவர்கள் செழிக்க தேவன் உதவுகிறார் (யோவான் 3:16).

தேவன் உங்களையும் என்னையும் போன்ற 'தன்னார்வலர்கள்' மூலமாக பூமியில் தனது அனேகமான பணிகளை செய்கிறார். நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பங்களிப்பையும் விட மிகப்பெரிய ஒரு சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் இருந்தாலும், அவருடைய அன்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அதை வளர்க்க உதவலாம்.

ஓய்வெடுப்பதற்கான காரணம்

நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்! இதய நோய் அபாயம் உள்ள நடுத்தர வயது ஆண் நிர்வாகிகள் ஒவ்வொருவரை பற்றிய ஆய்வுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பின்லாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் பங்கேற்பாளர்களைப் பின்தொடர்ந்தனர். விஞ்ஞானிகள் தங்கள் மூல கண்டுபிடிப்புகளில் தாங்கள் தேடாத ஒன்றைக் கண்டறிந்தனர்: விடுமுறைக்கு நேரம் ஒதுக்கியவர்களில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.

வேலை என்பது வாழ்க்கையின் மிகவும் அவசியமான பகுதியாகும் - ஆதியாகமம் 3-ல் அவருடனான நம் உறவு முறிந்து போவதற்கு முன்பே தேவன் நமக்கு நியமித்த ஒரு பகுதி. தேவனின் மகிமைக்காக வேலை செய்யாதவர்கள் அனுபவிக்கும் வேலையின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றி சாலமோன் எழுதுகிறார். அதனை  "ஆர்வத்துடன் பாடுபடுவது" மற்றும் "அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது" என்று அடையாளப்படுத்துகிறார் (பிரசங்கி 2: 22-23). அவர்கள் சுறுசுறுப்பாக செயல்படாவிட்டாலும் கூட அவர்களின் “மனதுக்கு இளைப்பாறுதலில்லை” என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இன்னும் செய்து முடிக்க வேண்டியவைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் (வச. 23).
 
நாமும் சில சமயங்களில், நாம் “காற்றைத் துரத்துகிறோம்” என்பதைப்போல உணரலாம் (வச. 17). மேலும் நாம் நம் வேலையை “முடிக்க” முடியாமல் விரக்தியடைகிறோம். ஆனால் தேவன் நம் உழைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்போது - ​​நம்முடைய நோக்கம் - நாம் கடினமாக உழைத்து, ஓய்வெடுக்கவும் நேரம் எடுத்துக்கொள்ளலாம். அவர் நமக்கு அனைத்தையும் தருவதால், அவர் நம் தேவைகளை சந்திப்பவராக இருப்பதை நாம் நம்பலாம். “அவர் இல்லாமல் யாரால் உண்ணமுடியும் அல்லது இன்பம் காண முடியும்?” என்பதை சாலமோன் ஒப்புக்கொள்கிறார் (வச. 25). ஒருவேளை அந்த சத்தியத்தை நமக்கு நினைவூட்டுவதன் மூலம் நாம் அவருக்காக உத்தமமாய் பணியாற்றலாம் (கொலோசெயர் 3:23). மேலும் ஓய்வு நேரங்களுக்கு நம்மை நாம் அனுமதிக்கலாம்.

தேனை விட மதுரமானது

அக்டோபர் 1893இல் சிகாகோ தினத்தில் நகரத்தின் திரையரங்குகள் மூடப்பட்டன. ஏனெனில் அனைவரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று உரிமையாளர்கள் கண்டறிந்தனர். ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்றனர். ஆனால் சிகாகோவின் மறுமுனையில் டுவைட் மூடி (1837–1899)  ஒரு இசை மண்டபத்தை பிரசங்கத்தாலும், போதனையாலும் நிரப்ப விரும்பினார். கண்காட்சியின் அதே நாளில் மூடியால் ஒரு கூட்டத்தை ஈர்க்க முடியுமா என்று அவரது நண்பர் ஆர். ஏ. டோரே (1856-1928) சந்தேகப்பட்டார். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் செய்து காட்டினார். கூட்டம் ஏன் வந்ததென்றால் “இந்த பழைய உலகம் அறிய விரும்பும் ஒரு புத்தகம்-வேதம்” என்பதை மூடி அறிந்திருந்தார் என்று, பின்னர் டோரே கூறிமுடித்தார். மூடியைப் போலவே மற்றவர்களும் வேதாகமத்தை நேசிக்க வேண்டுமென்றும், அதை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் தவறாமல் வாசிக்க வேண்டுமென்றும் டோரி விரும்பினார்.

சிகாகோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேவன் தம்முடைய ஆவியின் மூலம் தன் ஜனங்களைத் தன்னிடம் கொண்டுவந்தார். இன்றும் அவர் தொடர்ந்து பேசுகிறார். சங்கீதக்காரன் தேவன் மீதும் அவருடைய வேதவசனங்களின் மீதும் கொண்டிருந்த அன்பை நாமும் பிரதிபலிக்கமுடியும். “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்கீதம் 119:103). சங்கீதக்காரனைப் பொறுத்தவரை தேவனுடைய கிருபை மற்றும் சத்தியம் அவரது பாதைக்கு ஒரு வெளிச்சமாகவும் அவரது கால்களுக்கு ஒரு தீபமாகவும் செயல்பட்டன (வச. 105).

நீங்கள் எவ்வாறு மீட்பரிலும் அவருடைய செய்தியிலும் கொண்டுள்ள அன்பில் இன்னும் அதிகமாய் வளர முடியும்? நாம் வேதத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்போது, தேவன் நாம் அவரிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அதிகரிக்கச் செய்து நமக்கு வழிகாட்டுவார், நாம் நடந்து செல்லும் பாதைகளில் அவருடைய ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணுவார்.

தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்

“தேவன் அழுகிறார்” பில் ஹேலியின் பத்து வயது மகள் இயேசுவில் பலதரப்பட்ட விசுவாசிகள் குழுவுடன் மழையில் நின்றபோது முணுமுணுத்த வார்த்தைகள் அவை. அவர்கள் தேவனைத் தேடவும், அமெரிக்காவிலுள்ள இன வேறுபாட்டின் மரபுகளை புரிந்துக்கொள்ளவும் வந்திருந்தனர். முன்னாள் அடிமைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் நின்றபோது ​​அவர்கள் ஜெபத்தில் கைகோர்த்தார்கள். பின்னர் திடீரென்று காற்று வீசத் தொடங்கியது மழை பெய்யத் தொடங்கியது. தலைவர் இனரீதியான ஒற்றுமைக்காக அழைப்புவிடுத்தபோது மழை இன்னும் அதிகமாக பெய்யத் தொடங்கியது. ஒற்றுமையையும், மன்னிப்பையும் கொண்டுவருவதற்காக தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என கூடிவந்தவர்கள் நம்பினர்.

கல்வாரியிலும் அப்படியே நடந்தது - தேவன் செயல்பட்டு கொண்டிருந்தார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு தனது கடைசி சுவாசத்தை சுவாசித்தபோது, “பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது, கல்லறைகளும் திறந்தது”  (மத்தேயு 27: 51-52). இயேசு யார் என்பதை சிலர் நிராகரித்தாலும் அவரைக் காவல்செய்ய நியமிக்கப்பட்ட ஒரு நூற்றுக்கதிபதி வேறு முடிவெடுத்திருந்தார். “நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.” (வச. 54)

இயேசுவின் மரணத்தில் தேவன் தன்னை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் பாவ மன்னிப்பை வழங்கும் வேலையில் இருந்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல் கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி…” (2 கொரிந்தியர் 5:19). ஒருவருக்கொருவர் மன்னிப்பை வழங்குவதை விட தேவனால் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை நிரூபிக்க சிறந்த வழி வேறென்னென இருக்க முடியும்?