லூசி வோர்ஸ்லி ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். பெரும்பாலான மக்களிடையே பிரசித்திபெற்ற மனிதர்களைப் போல, அவருக்கு சில நேரங்களில் மோசமான மின்னஞ்சல்கள் வரும் – அவருடைய விஷயத்தில், அவருடைய பேச்சின் தடையால் அவளுடைய r-உச்சரிப்பு w-உச்சரிப்பாக ஒலித்தது. ஒருவர் இவ்வாறு எழுதினார்: “லூசி, நான் மழுங்கி இருப்பேன்: உங்கள் சோம்பேறித்தனமான பேச்சை சரி செய்ய கடினமாக முயற்சியுங்கள் அல்லது உங்கள் பேச்சுக் குறிப்புகளிலிருந்து r-ஐ நீக்குங்கள். ஏனெனில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை அது என்னை கோபமூட்டுகிறது. அன்புடன், டேரன். ”

சிலருக்கு, இது போன்ற ஒரு உணர்ச்சியற்ற கருத்து அதற்கு சமமான முரட்டுத்தனமான பதிலைத் தருவதற்கு தூண்டக்கூடும். ஆனால் லூசி இவ்விதமாக பதிலளித்தார்: “ஓ டேரன், நீங்கள் என் முகத்திற்கு நேராக சொல்ல துணியாத ஒன்றைச் சொல்ல இணையத்தின் அநாமதேயத்தைப் பயன்படுத்தினீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் தயவற்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! லூசி. ”

லூசியின் அந்த மெதுவான பிரதியுத்திரம் வேலை செய்தது. டேரன் மன்னிப்பு கேட்டு, அத்தகைய மின்னஞ்சலை மீண்டும் யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று உறுதியளித்தார்..

“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும், ஆனால் கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (15:1). கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (வச.. 18). சக ஊழியரிடமிருந்து ஒரு விமர்சனக் கருத்து, குடும்ப உறுப்பினரிடமிருந்து ஒரு மோசமான கருத்து அல்லது தெரியாத நபரிடமிருந்து ஒரு மோசமான பதில் ஆகியவற்றைப் பெறும்போது, நம்முடைய தேர்வு இவ்வாறு இருக்கிறது: தீப்பிழம்புகளைத் தூண்டும் கோபமான வார்த்தைகளைப் பேச அல்லது அதை அணைக்கும் மென்மையான சொற்களைப் பேச. 

கோபத்தை  மாற்றும் வார்த்தைகளைப் பேச தேவன் நமக்கு உதவுவாராக – மற்றும் கடினமான நபர்களை மாற்றவும் உதவுவாராக.