வகை  |  odb

நடுநிலைக்கு மாற்றவும்

காரை கழுவுகிற தானியங்கி எந்திரத்தில் எனக்கு முன்னால் ஒருவர் இருந்தார். அவர் வேண்டுமென்றே தனது இடத்தின் பின்புறத்தில் நுழைந்து, அந்த இடத்தை அகற்றினார், எனவே அது அதிக சக்தி கொண்ட தூசு துடைக்கும் தூரிகைகளைப் பறிக்காது. அவர் உதவியாளருக்கு பணம் கொடுத்தார், பின்னர் தானியங்கி பாதையில் இழுத்துச் சென்றார் - அங்கு அவர் தனது டிரக்கை ஓட்டினார். உதவியாளர் அவரைப் பின்தொடர்ந்து, வாகனம் பின்னாக வருகிறது என்று கூச்சலிட்டு எச்சரித்தார். ஆனால் அந்த டிரக்கின் ஜன்னல்கள் மூடி இருந்தன, அவரால் கேட்க முடியவில்லை. அவர் கார் கழுவும் வழியாக நான்கே வினாடிகளில் கடந்தார். அவரது டிரக் கொஞ்சம் கூட ஈரமாகவில்லை.

எலியாவும் ஒரு பணியில் இருந்தார். அவர் பெரிய வழிகளில் தேவனை சேவிப்பதில் மும்முரமாக இருந்தார். அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பாகால் தீர்க்கதரிசிகளை தோற்கடித்தார். அது அவரை சோர்வடையச் செய்தது (1 இராஜாக்கள் 18:16-39ஐ காண்க). அவருக்கு நடுநிலையாக நேரம் தேவைப்பட்டது. தேவன் மோசேக்கு ஏற்கனவே வெளிப்பட்ட ஓரேப் கன்மலைக்கு எலியாவைக் கூட்டி வந்தார். மீண்டும் தேவன் மலையை அசையப்பண்ணினார். ஆனால் புயல் காற்று, பூகம்பம், அக்கினி அகிய எதிலும் தேவன் தென்படவில்லை. அதற்கு பின்பாக அமர்ந்த மெல்லிய சத்தத்தில் தேவன் உலியாவிடம் இடைபடுகிறார். அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு தேவனைச் சந்திக்க எலியா வெளியே வந்தார் (1 இராஜாக்கள் 19:13).

நீங்களும் நானும் ஒரு பணியில் இருக்கிறோம். நமது இரட்சகருக்காக பெரிய காரியங்களைச் செய்ய நம் வாழ்க்கையை இயக்குகிறோம். ஆனால் நாம் ஒருபோதும் நடுநிலைக்கு மாறாவிட்டால், நாம் வாழ்க்கையில் அதிவேகமாய் கடந்து அவருடைய ஆவியின் வெளிப்பாட்டை இழக்க நேரிடும். தேவன் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார், “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10). 

திட்டங்கள் உள்ளதா?

பதினெட்டு வயது நிரம்பி காடன், கல்வி உதவித்தொகையில் தனக்கு ஒரு கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். உயர்நிலைப் பள்ளியில் ஒரு வளாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த அவன், புதிய சூழலில் இதேபோன்ற ஊழியத்தில் பங்கேற்க எதிர்பார்த்தான். அவன் தனது பகுதிநேர வேலையிலிருந்து பணத்தை மிச்சப்படுத்தினான். மேலும் ஒரு புதிய வேலையில் சிறந்த முன்னிலைப் பெற்றான். அவன் சில குறிக்கோள்களை மனதில் வைத்திருந்தான், எல்லாமே அட்டவணைபடி சரியாக நடந்து கொண்டிருந்தது.

பின்னர் 2020 வசந்த காலத்தில் எற்பட்ட ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றியது.

தனது முதல் செமஸ்டர் ஆன்லைனில் இருக்கக்கூடும் என்பதை பள்ளி நிர்வாகம் கேடனுக்கு தெரியப்படுத்தியது. அவனுடைய கல்லூரி வளாக ஊழியம் நிறுத்தப்பட்டது. அவனுடைய வேலை வாய்ப்பும் வறண்டுவிட்டது. அவன் விரக்தியடைந்தபோது, அவனது நண்பர், “ஆமாம், அவர்கள் வாயில் குத்து விழும் வரை அனைவருக்கும் ஒரு திட்டம் உள்ளது” என்ற ஒரு பிரபலமான குத்துச்சண்டை வீரரின் வார்த்தைகளை அவனுக்கு நினைவுபடுத்தினான்.

நீதிமொழிகள் 16, நாம் நம் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவிக்கும்போது, அவர் நம்முடைய திட்டங்களை உறுதிப்படுத்துவார், அவருடைய சித்தத்தின்படி காரியங்களைச் செய்வார் (வச. 3-4) என்று கூறுகிறது. இருப்பினும் உண்மையான அர்ப்பணிப்பு சற்று கடினமாக இருக்கும். இது நம்முடைய காரியத்தை நாம் சுயாதீனமாய் நம்முடைய போக்கில் செய்யாமல், தேவனின் வழிநடத்துதலுக்கான திறந்த இதயத்தை வரவேற்கிறது (வச. 9, 19:21).

நிறைவேறாத கனவுகள் ஏமாற்றத்தைத் தரக்கூடும். ஆனால் நம் எதிர்காலத்தைக் குறித்த நம்முடைய குறுகிய பார்வை, எல்லாம் அறிந்த தேவனுடைய திட்டத்தை எப்போதுமே ஈடுகட்ட முடியாது. நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போது, முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காணாதபோதும் அவர் நம் நடைகளை இன்னும் அன்பாக வழிநடத்துகிறார் என்பதில் உறுதியாக இருக்க முடியும் (16:9).

காணாத பார்வை

யூரி ககரின் விண்வெளியில் பயணித்த முதல் மனிதரான பிறகு, அவர் ரஷ்ய கிராமப்புறங்களில் பாராசூட் பயணம் செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண் ஆரஞ்சு உடையணிந்த இந்த விண்வெளி வீரரைக் கண்டார். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்து இரண்டு பாராசூட்டுகளை இழுத்துச் சென்றுக்கொண்டிருந்தார். “நீங்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கிறீர்களா?” அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். “உண்மையில், நான் அப்படிதான் வந்தேன்,” என்று அவர் கூறினார்.

சோவியத் தலைவர்கள் இந்த வரலாற்று நிகழ்வை மார்க்க எதிர்ப்பு பிரச்சாரமாக மாற்றினர். “ககரின் விண்வெளிக்குச் சென்றார், ஆனால் அவர் அங்கு எந்த தேவனையும் காணவில்லை” என்று அவர்களின் பிரதமர் அறிவித்தார். (ககரின் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை.) சி.எஸ். லூயிஸ், “பூமியில் தேவனைக் காணாதவர்கள், அவரை விண்வெளியில் காண வாய்ப்பில்லை” என்கிறார். 

இந்த வாழ்க்கையில் தேவனைப் புறக்கணிப்பது பற்றி இயேசு எச்சரித்திருக்கிறார். அவர் இறந்த இரண்டு மனிதர்களின் உவமையை சொன்னார். தேவனுக்கு நேரம் கொடுக்கமுடியாமல் இருந்த ஒரு ஐசுவரியமுள்ள மனுஷன், விசுவாசத்தில் ஐசுவரியவானும் தரித்திரனுமான லாசரு (லூக்கா 16: 19-31). பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, ஐசுவரியவான் பூமியில் இருக்கும் தன் சகோதரர்களுக்காக ஆபிரகாமிடம் மன்றாடினான். “லாசருவை அனுப்புங்கள்” என்று ஆபிரகாமிடம் கெஞ்சினான். “மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்” (வச.27,30). ஆபிரகாம் பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிந்து: “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும் நம்பமாட்டார்கள்” (வச. 31).

ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் எழுதினார்: “பார்ப்பது என்றால் நம்புவது என்று அர்த்தமல்ல. நாம் எதை நம்புகிறோம் என்பதின் அடிப்படையில் தான் ஒன்றைப் பார்க்கிறோம்.”

தேவையான இடத்தில் தண்ணீர்

உலகின் மிக ஆழமான ஏரியான பைக்கால் ஏரி, மிகவும் பரந்து விரிந்த அற்புதமான ஏரி. 49 மைல் (79 கி.மீ.) குறுக்கே ஒரு மைல் ஆழத்தையும் கிட்டத்தட்ட 400 மைல் (636 கி.மீ) அளவையும் கொண்டு, இது உலகின் அனைத்து நண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த நீர் பெரும்பாலும் அணுக முடியாதது. பைக்கால் ஏரி சைபீரியாவில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் மிக தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாகும். நமது கிரகத்தின் பெரும்பகுதிக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒரு தேவை என்றபோதில், மக்கள் யாரும் போக முடியாத இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் இருப்பது முரண்பாடான ஒரு காரியம். 

பைக்கால் ஏரி தொலைதூரத்தில் இருந்தாலும், முடிவில்லாத வாழ்வாதாரமான தண்ணீர் இங்கு கிடைக்கிறது. அதின் தேவை அதிகம் உள்ளவர்களுக்கே அது கிடைக்கிறது. சமாரியாவில் ஒரு கிணற்றினருகே இயேசு இருந்தபோது, ஒரு பெண்ணுடன் உரையாடினார். அவளுடைய ஆழ்ந்த ஆன்மீக தாகத்தின் ஓரங்களை ஆராய்ந்தார். அவளுடைய உள்ளத்தின் ஏக்கத்திற்கு தீர்வு? இயேசு மட்டுமே.

கிணற்றிலிருந்து எடுக்க வந்த தண்ணீருக்கு மாறாக, இயேசு அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்கினார்: “இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்” (யோவான் 4: 13-14).

பல விஷயங்கள் திருப்தியை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் ஒருபோதும் நம் இருதயத்தின் தாகத்தை முழுமையாகத் தணிக்காது. இயேசுவால் மட்டுமே நம்முடைய ஆன்மீக தாகத்தை உண்மையிலேயே பூர்த்தி செய்யமுடியும். அனைவரது தேவைகளையும், எல்லா இடங்களிலும் அவர் சந்திக்கிறார். 

பாதுகாப்பாய் கரைசேர்த்தல்

பப்புவா நியூ கினியாவில், கந்தாஸ் பழங்குடி மக்கள், தங்கள் மொழியில் அச்சிடப்பட்ட வேதாகம புதிய ஏற்பாட்டின் வருகைக்காக உற்சாகத்துடன் காத்திருந்தனர். இருப்பினும், புத்தகங்களுடன் கிராமத்தை அடைய, மக்கள் சிறிய படகுகளில் கடலில் பயணிக்க வேண்டியிருந்தது.

கடலைக் கடந்துவரும் தைரியத்தை அவர்களுக்கு எது கொடுத்தது? அவர்களின் நீந்தும் திறமையா, ஆம். ஆனால் சமுத்திரத்தை உருவாக்கியது யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். நம் வாழ்வின் சலசலக்கும் அலைகள் மற்றும் ஆழமான நீர்நிலைகளைக் கடக்க ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுவதும் அவர்தான்.

தாவீது எழுதியது போல, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?” (சங்கீதம் 139:7). “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வச.8-10).

வெப்பமண்டல கடற்கரைகள், அடர்த்தியான மழைக்காடுகள் மற்றும் கரடுமுரடான மலைகள் “கடைசியாக அறியப்படாதவை” என்று அழைக்கப்படும் ஒரு தீவு தேசத்தில் வாழும் கந்தாஸ்களுடன் இந்த வார்த்தைகள் ஆழமாக ஒத்திருக்கும். ஆயினும்கூட அங்குள்ள விசுவாசிகள் அறிந்திருப்பதைப் போல, எந்த இடமும் தேவனுக்கு கடினமும் தூரமும் இல்லை. “உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது,” “இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி” என்று சங்கீதம் 139:12 சொல்லுகிறது. 

பலத்த சுழல்காற்றைப் பார்த்து தேவன், “இரையாதே, அமைதலாயிரு” என்று அதட்டினார். அலைகளும் காற்றும் கீழ்ப்படிகின்றன (மாற்கு 4:39). எனவே, இன்று உங்கள் வாழ்க்கையின் ஆழமான அல்லது கொந்தளிப்பான அலைகளுக்கு அஞ்ச வேண்டாம். நம் தேவன் நம்மை பாதுகாப்பாக கரைசேர்ப்பார்.