பப்புவா நியூ கினியாவில், கந்தாஸ் பழங்குடி மக்கள், தங்கள் மொழியில் அச்சிடப்பட்ட வேதாகம புதிய ஏற்பாட்டின் வருகைக்காக உற்சாகத்துடன் காத்திருந்தனர். இருப்பினும், புத்தகங்களுடன் கிராமத்தை அடைய, மக்கள் சிறிய படகுகளில் கடலில் பயணிக்க வேண்டியிருந்தது.

கடலைக் கடந்துவரும் தைரியத்தை அவர்களுக்கு எது கொடுத்தது? அவர்களின் நீந்தும் திறமையா, ஆம். ஆனால் சமுத்திரத்தை உருவாக்கியது யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். நம் வாழ்வின் சலசலக்கும் அலைகள் மற்றும் ஆழமான நீர்நிலைகளைக் கடக்க ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுவதும் அவர்தான்.

தாவீது எழுதியது போல, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?” (சங்கீதம் 139:7). “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வச.8-10).

வெப்பமண்டல கடற்கரைகள், அடர்த்தியான மழைக்காடுகள் மற்றும் கரடுமுரடான மலைகள் “கடைசியாக அறியப்படாதவை” என்று அழைக்கப்படும் ஒரு தீவு தேசத்தில் வாழும் கந்தாஸ்களுடன் இந்த வார்த்தைகள் ஆழமாக ஒத்திருக்கும். ஆயினும்கூட அங்குள்ள விசுவாசிகள் அறிந்திருப்பதைப் போல, எந்த இடமும் தேவனுக்கு கடினமும் தூரமும் இல்லை. “உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது,” “இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி” என்று சங்கீதம் 139:12 சொல்லுகிறது. 

பலத்த சுழல்காற்றைப் பார்த்து தேவன், “இரையாதே, அமைதலாயிரு” என்று அதட்டினார். அலைகளும் காற்றும் கீழ்ப்படிகின்றன (மாற்கு 4:39). எனவே, இன்று உங்கள் வாழ்க்கையின் ஆழமான அல்லது கொந்தளிப்பான அலைகளுக்கு அஞ்ச வேண்டாம். நம் தேவன் நம்மை பாதுகாப்பாக கரைசேர்ப்பார்.