நம்பிக்கையுள்ள ஜெபம்
குழந்தையில்லாமையோடு ஆண்டுகளாய் போராடிய விஷ்வாஸ் மற்றும் ரீடா தம்பதியினர், ரீடா கருவுற்றபோது ஆச்சரியப்பட்டனர். ரீடாவின் சரீர பெலவீனம் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருந்ததால் ஒவ்வொரு நாள் இரவும் விஷ்வாஸ் தன் மனைவிக்காகவும் பிள்ளைக்காகவும் தொடர்ந்து ஜெபித்து வந்தார். ஒரு நாள் இரவில், தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாக வாக்குப்பண்ணியிருந்ததால் இனி மன்றாடி ஜெபிக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தார். ஆனால் ஒருவாரம் கழித்து, ரீடாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. விஷ்வாஸ் மனமுடைந்துபோனார். தான் மன்றாடி ஜெபிக்காததினால் தான் குழந்தையை இழக்க நேரிட்டதோ என யோசித்தார்.
முதல்முறை வாசிக்கும்போது இந்த உவமையும் அப்படித்தான் எண்ணத் தூண்டும். அதில் தன் சிநேகிதனின் தொந்தரவு பொறுக்காமல் அவனுக்கு உதவிசெய்ய தன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறான் (தேவனை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாய் நம்பப்படுகிறது) (லூக்கா 11:5-8). அதாவது, தேவனை தொந்தரவு செய்தால் தான், நமக்குத் தேவையானதை அவர் கொடுப்பார் என்பதை உவமை ஆலோசிக்கிறது. நாம் கடினமாய் மன்றாடி ஜெபிக்கவில்லையென்றால் தேவன் ஒருவேளை நமக்கு உதவி செய்யாமலிருக்கலாம்.
ஆனால் பிரபல விளக்கவுரை ஆசிரியர்கள் இந்த உவமை தவறாய் புரிந்துகொள்ளப்படுகிறது என்று கருதுகின்றனர். அதின் உண்மையான அர்த்தம் என்னவெனில், நம் சிநேகிதர்கள் தங்கள் சுயநல காரணங்களை வைத்துக்கொண்டே நமக்கு உதவ முன்வந்தால், எந்த சுயநலமுமில்லாத தேவன் நமக்கு எவ்வளவு உதவுவார் என்பதே அதின் அர்த்தம். ஆகையினால் மனிதர்களைக் காட்டிலும் தேவன் பெரியவர் என்பதை அறிந்து (வச. 11-13), நாம் நம்பிக்கையோடே அவரிடத்தில் கேட்போம் (வச. 9-10). இந்த உவமையில் இடம்பெற்றுள்ள சிநேகிதன் கதாபாத்திரம் தேவனைக் குறிக்கவில்லை; மாறாக, தேவன் அவருக்கு நேர் எதிரான சுபாவம் கொண்டவர் என்பதைக் காண்பிக்கிறது.
நான் விஷ்வாவைப் பார்த்து, “உன் குழந்தையை நீ ஏன் இழந்தாய் என்று எனக்குத் தெரியாது; ஆனால் நீ கடினமாய் மன்றாடி ஜெபிக்கவில்லை என்பது மட்டும் காரணமாய் இருக்கமுடியாது. தேவன் அப்படிப்பட்டவரல்ல” என்று சொன்னேன்.

கேள்! கற்றுக்கொள்!
வீதியின் ஒருபுறத்திலிருந்த வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் கொடியைப் பறக்கவிட்டிருந்தார். அந்த பாதையில் கனரக வாகனம் ஒன்றின் ஜன்னல் கதவிலும் வரையப்பட்ட கொடி ஒன்றும் அதின் முன்பகுதியில் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒட்டுக்காதிதங்களும் ஒட்டப்பட்டிருந்தது. அதே வீதியின் இன்னொரு வீட்டின் முற்றத்தில் சமூக அநீதியை எதிர்க்கும் புரட்சி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
இந்த வீடுகளில் இருக்கும் மக்கள் விரோதிகளா? அல்லது நண்பர்களா? என்று நாம் ஆச்சரியப்படலாம். அந்த இரு வீடுகளிலும் இருப்பவர்கள் இயேசுவின் விசுவாசிகளாய் இருக்க முடியுமா? யாக்கோபு 1:19ன் படி வாழுவதற்கு தேவன் நம்மை அழைத்திருக்கிறார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” பெரும்பாலான நேரத்தில் மற்றவர்களின் கருத்துக்கு செவிகொடுக்காமல், நம்முடைய கருத்தையே பிடிவாதமாய் நாம் முன்வைப்பதுண்டு. மேத்யூ ஹென்றி விளக்கவுரையில் இந்த வாக்கியம் சற்று வித்தியாசமாய் இடம்பெற்றுள்ளது: “காரணத்தையும், எல்லா தரப்பு நியாயத்தையும் கேட்கிறதற்கு யாவரும் தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும்... அப்படி பேசும்போது கோபப்படாத வகையிலும் பேசவேண்டும்.”
“கற்றுக்கொள்வதற்கு கேட்பது மிகவும் அவசியம்” என்று ஒருவர் சொல்லுகிறார். தேவனுடைய அன்பின் ஆவியினால் நிரப்பப்படுவதினாலும், மற்றவர்களைக் கனப்படுத்த பழகும்போதுமே யாக்கோபு நிருபத்தில் சொல்லப்பட்டுள்ள யதார்த்தமான வார்த்தைகள் சாத்தியமாகும். நம்முடைய இருதயத்திலும் சிந்தையிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் உதவியைச் செய்ய அவர் வாஞ்சையாயிருக்கிறார். நாம் கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆயத்தமா?

தேவனுக்காய் ஏங்குதல்
ரோஹன் மற்றும் ரீனா தம்பதியினர் வீட்டைக் காலி செய்து ஐந்து மைல் தூரத்திலிருந்த வேறொரு வீட்டிற்கு குடிபோனார்கள். அவர்களின் அந்த இடமாற்றத்தை விரும்பாத “பகீரா” என்னும் அவர்களின் பூனை திடீரென்று காணாமல் போனது. ஒருநாள் சமூக வலைதளம் ஒன்றில் தங்கள் பழைய வீட்டைக் காணநேர்ந்தது. அதில் பகீரா இருந்ததைக் கண்டனர்.
இந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் போய் அவர்களின் பூனையை மீட்டுக்கொண்டு வந்தனர். பகீரா மீண்டும் ஓடியது. எங்கு போனது என்று தெரியுமா? இந்த முறை அவர்களின் பழைய வீட்டை வாங்கின அந்த குடும்பமே பகீராவை தங்கள் பொறுப்பில் வைத்து பாதுகாத்துக் கொள்வதாக ஒத்துக்கொண்டனர். இது திரும்பிப்போவதை அவர்களால் தடுக்கமுடியவில்லை. பகீரா எப்போதும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு திரும்பிவிடுகிறது.
நெகேமியா, சூசாவின் ராஜ அரண்மனையில் வேலை செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனுடைய இருதயம் அங்கே இல்லை. அவன் தன்னுடைய “பிதாக்களின் கல்லறை” இருக்கும் நகரம் பாழாவதைக் குறித்த செய்தியைக் கேள்விப்படுகிறான் (நெகேமியா 2:3). ஆகையினால் நெகேமியா ஜெபிக்கும்போது, “நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்” (1:8-9) என்று ஜெபிக்கிறான்.
என் வீடு எங்கேயோ என் இருதயமும் அங்கே இருக்கும். நெகேமியா விஷயத்தில் வீட்டிற்காய் ஏங்குவது என்பது புவியியல் அமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு ஏக்கம். ஆம்! தான் அதிகம் நேசிக்கிற தன் தேவனோடுள்ள உறவு. “என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலம்” என்பது எருசலேம் நகரம்.

நம்மை சீரமைக்கும் இயேசு
காரை வடிவமைக்கும் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்த அசோக், தவறு ஏதும் செய்யாதபோதிலும் அவனுடைய வேலையை இழக்க நேரிட்டது. மற்ற துறையில் செய்யப்பட்ட தவறினால், இவர்கள் வடிவமைத்த கார்களில் பிரச்சனை ஏற்பட்டது. பல விபத்துகளைச் சந்தித்த அவர்களுடைய வாகனங்களைக் குறித்து வெளியான செய்திகளினால், அவர்களுடைய கார்களை வாங்குவதை மக்கள் தவிர்த்தனர். அதினால், கம்பெனி நிர்வாகம் அசோக்கை வேலையை விட்டு நிறுத்தியது. அது அவனுக்கு ஏற்பட்ட நியாயமில்லாத சேதாரம். அது எப்போதுமே நியாயமற்றது.
வரலாற்றின் முதல் சேதாரம், முதன்முதலில் மனிதன் பாவம் செய்தவுடனேயே நிகழ்ந்தது. தங்கள் நிர்வாணத்தைக் குறித்து ஆதாமும் ஏவாளும் வெட்கப்பட்டதினால், தேவன் அவர்களுக்கு “தோல் உடைகளை” உண்டாக்கிக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:21). இதை கற்பனை செய்வது சற்றுக் கடினம். ஆனால் அதற்காக, தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள் அடிக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அத்துடன் அது நிற்கவில்லை. தேவன் இஸ்ரவேலைப் பார்த்து, “தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்” (எசேக்கியேல் 46:13) என்று கட்டளையிட்டார். “தினந்தோறும்” அதை செய்யவேண்டுமாம். மனுஷர்களுடைய பாவங்களினால் எத்தனை ஆயிரம் விலங்குகள் இதுவரை பலியிடப்பட்டுள்ளது?
தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து வந்து அதை மாற்றும்வரை நம்முடைய பாவங்களை கழுவுவதற்கு விலங்குகள் பலியிடப்படவேண்டியிருந்தது (யோவான் 1:29). இதனை “சீரமைக்கப்பட்ட சேதாரம்” எனலாம். ஆதாமின் பாவம் நம்மை கொன்றதுபோல, கடைசி ஆதாமாகிய இயேசுவின் கீழ்ப்படிதல் அவரை விசுவாசிப்பவர்களின் வாழ்க்கையை சீரமைக்கிறது (ரோமர் 5:17-19). “சீரமைக்கும் சேதாரமும்” நியாயமானது அல்ல – அது இயேசுவின் ஜீவனை இழக்கச்செய்தது –ஆனால் அது இலவசமானது. இயேசுவை விசுவாசித்து, அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டால், அவருடைய நீதி நம் வாழக்கையில் செயல்படும்.

துக்கத்தில் நம்பிக்கை
டாக்ஸி ஓட்டுநர் எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடைய கதையை எங்களுக்குச் சொன்னார். வறுமையின் நிமித்தமாக தன் வீட்டைவிட்டு வெளியேறி, 17 வயதில் இந்த பட்டணத்திற்கு வந்ததாக கூறினார். பதினொறு வருடங்கள் கழிந்துவிட்டது. தற்போது தனக்கு குடும்பம் இருப்பதாகவும் தங்களுடைய கிராமத்தில் கிடைக்காத நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஆயினும் தன் பெற்றோரை விட்டும் உடன்பிறப்புகளை விட்டும் பிரிந்திருப்பதை நினைத்து வேதனைப்பட்டார். எங்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய கடினமான வாழ்க்கை பயணமானது, அவருடைய குடும்பத்தோடு ஒன்று சேரும்வரை நிறைவடையாது.
நம்மை நேசிப்பவர்களிடமிருந்து பிரிந்திருப்பது கடினமானது. ஆனால் நாம் நேசிப்பவர்களை மரணத்தில் பிரிவது அதைவிட கடினமானது. அந்த இழப்பை, அவர்களை மீண்டும் சந்திக்கும்வரை ஈடுகட்டமுடியாது. இதுபோன்ற இழப்பை அனுபவித்துக் கொண்டிருந்த தெசலோனிக்கேய திருச்சபையின் புது விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” (1 தெசலோனிக்கேயர் 4:13) என்று எழுதுகிறார். விசுவாசிகளாய் கிறிஸ்துவோடு சேர்ந்து மீண்டும் நாம் இணைக்கப்படப் போகிறோம் என்று நாம் எதிர்பார்க்கலாம் (வச. 17).
சில வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு ஏற்படுத்திய ஆழமான பிரிதலை நாம் பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் மீண்டும் இணையப் போகிறோம் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். துக்கங்கள் மற்றும் இழப்புகளின் மத்தியிலும் தேவன் கொடுத்த இந்த நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைகிறோம் (வச. 18).