வகை  |  odb

நீங்கள் தனியாய் இல்லை

“உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!” “உங்களையும் தான்” “நீங்கள் இங்கிருப்பது மகிழ்ச்சி!” இந்த வாழ்த்துக்கள் மென்மையாகவும் வரவேற்கக்கூடியதாகவும் இருந்தது. ஒரு ஊரில் இருந்த ஊழியர்கள் தங்கள் மாலை நேர நிகழ்ச்சிக்கு முன்பு ஆன்லைனில் சந்தித்தார்கள். அவர்களின் தலைவர் அவர்களை வரவேற்றபோது, மற்றவர்கள் வீடியோ காலில் இணைவதை நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது என்பதினால், நான் என்னை வேற்று நபராக எண்ணினேன். திடீரென்று ஒரு வீடியோ தோன்றியது, அதில் என்னுடைய போதகரை பார்த்தேன். வேறொரு வீடியோ இணைந்தது. அதில் என் நீண்ட நாள் திருச்சபை நண்பர் இணைந்தார். அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் நான் தனிமையாய் உணர்வதிலிருந்து விடுபட்டேன். தேவன் எனக்கு ஆதரவை அருளினார் என்று நம்பினேன். 

யெசபேல் மற்றும் ஆகாபினால் எலியாவுக்கு நேரிட்ட பிரச்சனையில், “நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று சொன்ன எலியாவும் தனிமையாயில்லை (1 இராஜ. 19:10). 40 பகல், 40 இரவுகள் வனாந்திரத்தில் பயணம் மேற்கொண்டு, எலியா ஓரெப் கன்மலையில் தன்னை ஒளித்துக்கொள்ளுகிறான். ஆனால் தேவன், “நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (வச. 15-16) என்று கட்டளையிடுகிறார். 

“ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று கர்த்தர் எலியாவுக்கு உறுதியளித்தார் (வச. 18). தேவனுக்கு ஊழியம் செய்யும்போது நாம் தனித்து இருப்பதில்லை என்பதை எலியா கற்றுக்கொண்டான். தேவன் நமக்கு உதவிசெய்யும்போது, நாம் இணைந்து அவரை சேவிப்போம். 

இயேசுவின் உண்மையான சீஷன்

ஒரு ஓவிய சேகரிப்பாளர் வான் காகின் ஓவியங்களை (பிரபலமான மேற்கத்திய ஓவியர்), ஓவிய நிபுணர் ஒருவரிடம் காண்பித்தபோது, அந்த நிபுணர் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு இது உண்மையான ஓவியம் அல்ல என்று நிராகரித்துவிட்டாராம். எனவே அந்த ஓவிய சேகரிப்பாளர் அதை கொண்டுபோய் ஒரு ஓவியக்கிடங்கில் மறைத்து வைத்துவிட்டாராம். அங்கே அது ஐம்பது ஆண்டுகள் இருந்தது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அந்த ஓவியத்தை மீண்டும் எடுத்து நாற்பது ஆண்டுகளாக மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு முறையும் அது பொய்யான ஓவியம் என்றே நிராகரிக்கப்பட்டது. 2012ல் கணினி நிபுணர் ஓருவர் தீர்க்கமாய் ஆய்வு செய்து, அந்த ஓவியம் வரையப்பட்ட கேன்வாஸ் துணியின் ஒவ்வொரு நூலாக ஆய்வுசெய்தபோது, அந்த கேன்வாஸ் வான் காகின் மற்றொரு ஓவியத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறிந்தார். இறந்த அந்த ஓவிய சேகரிப்பாளர் தன் வாழ்நாள் முழுதும் வான்காகின் உண்மையான ஓவியத்தையே வைத்திருந்தார். 

நீங்கள் போலியாக எண்ணுகிறீர்களா? ஜனங்கள் உங்களை ஆய்வுசெய்யும்போது, உங்களின் கொஞ்சமான ஜெபவாழ்க்கையையும், கொடுக்கும் மனப்பான்மையையும், சாதாரண ஊழியத்தையும் அறியக்கூடும் என்று அஞ்சுகிறீர்களா? ஜெபிக்கிற கண்களிலிருந்து மறைந்து, உங்கள் அறையில் ஒளிந்துகொள்ள தூண்டப்படுகிறீர்களா? 

உங்கள் வாழ்க்கையை மேற்பூச்சான நிறங்களில் அல்லாமல் சற்று ஆழமாய் பாருங்கள். உங்களுடைய பாவ வழிகளிலிருந்து திரும்பி, இயேசுவை விசுவாசித்தால், நீங்களும் அவரும் ஒரே கேன்வாஸ் துணியைப்போல் இருப்பீர்கள். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று இதை இயேசு சித்தரிக்கிறார் (யோவான் 15:5). நீங்களும் இயேசுவும் இணைந்து ஒரு முழுமையை அடைகிறீர்கள். 

இயேசுவில் இளைப்பாறுவது அவருடைய மெய்யான சீஷனாய் உங்களை மாற்றுகிறது. உங்கள் ஓவியத்தை மேம்படுத்துவதற்கு அது ஒன்றே வழி. “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (வச. 5). 

தேவனை துதித்து பாடு

சீஷத்துவ கருத்தரங்கின் வார முழுமையும் கோடையின் உஷ்ணம் எங்களை தகனித்தது. ஆனால் கடைசி நாளில் மென்மையான குளிர் காற்று வீசியது. சீதோஷண நிலையில் ஒரு மாற்றத்தை தேவன் கொண்டுவந்து ஆச்சரியத்தை நடப்பித்ததற்காக நூற்றுக்கணக்கானோர் அன்றைய ஆராதனையில் இணைந்து தேவனை மகிழ்ச்சியோடு ஆராதித்தனர். தங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும், சரீரத்தையும், சிந்தையையும் முழுவதுமாய் அர்ப்பணித்து, அநேகர் விடுதலையோடு தேவனை ஆராதித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பதாய் நடந்த அந்த சம்பவத்தை நினைவுகூரும்போது, தேவனை ஆராதிப்பதில் ஏற்படும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன். 

தேவனை முழுமனதுடன் ஆராதிப்பதைக் குறித்து தாவீது ராஜா அறிந்திருந்தார். கர்த்தருடைய பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது இவர் ஆடிப்பாடி, ஆர்ப்பரித்து கொண்டாடினார் (1 நாளாகமம் 15:29). அவருடைய மனைவி மீகாள் அதைப் பார்த்து “அவரைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்” (வச. 29). ஆனால் அவளுடைய அந்த அவமதிப்பை பொருட்படுத்தாமல் தாவீது ஒன்றான மெய்தேவனை ஆராதித்தார். ஆடுவது மற்றவர்களின் பார்வைக்கு கனவீனமாய் தெரிந்தாலும், அவரைத் தேர்ந்தெடுத்து ராஜாவாக்கிய தேவனுக்கு முழுமனதோடு நன்றி சொன்னார் (2 சாமுவேல் 6:21-22ஐ காண்க). 

“அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (1 நாளாகமம் 16:7-9). நம்முடைய துதியையும் பாடலையும் அவருக்கு செலுத்தி, முழுமையாய் அவரை ஆராதிப்போம். 

இயேசுவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள்

“மகனே, உனக்கு கொடுப்பதற்கு என்னிடத்தில் அதிகம் இல்லை. ஆனால் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுத்துவிடாதே.” கல்லூரிக்கு போகும்போது ஜெரோமின் தகப்பனார் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஒரு விளையாட்டு வீரனாக மேடையில் நிற்கும்போது தனது தந்தையின் இந்த வார்த்தைகளை ஜெரோம் நினைவுகூர்ந்தான். இந்த வார்த்தைகள் ஜெரோமின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு ஆதாரமாய், மேடையில் தன் பேச்சை முடிக்கும்போது, தன்னுடைய மகனைப் பார்த்து, “மகனே, நம்முடைய நல்லபெயரைக் காட்டிலும் உனக்கு கொடுப்பதற்கு முக்கியமானது வேறொன்றுமில்லை” என்று சொன்னான். 

கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு நற்பெயர் என்பது மிகவும் முக்கியமானது. கொலோசெயர் 3:12-17ல் நாம் யாருடைய ஸ்தானாதிபதிகள் என்று பவுல் நினைவுபடுத்துகிறார் (வச. 17). குணாதிசயம் என்பது நாம் அணியும் ஆடை போன்றது. ஆனால் இந்த வேதவாக்கியம் அந்த ஆடையின் மேல் இயேசுவின் நாமத்தை எழுதுகிறது: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (வச. 12-14). இவைகள் நம்முடைய ஞாயிற்றுக்கிழமை வஸ்திரமல்ல. இந்த வஸ்திரத்தை எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் அணிந்து தேவனை பிரதிபலிக்கவேண்டும். இந்த சுபாவங்கள் எல்லாவற்றையும் நம்முடைய வாழ்க்கையில் நாம் பிரதிபலித்தால், அவருடைய நாமம் நமக்கு தரிப்பிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கமுடியும். 

ஜெபத்தோடும் கவனத்தோடும் அவரை நாம் பிரதிபலித்தால் நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார்.

துக்கத்தின் சொற்களஞ்சியம்

மோகனும் ரேகாவும் தங்களுடைய ஒரே குழந்தையை இழந்த பின்பு, தங்களை என்னவென்று அழைத்துக்கொள்வதென்று தெரியாமல் கஷ்டப்பட்டனர். குழந்தையை இழந்த பெற்றோர்களை அழைப்பதற்கென்று ஆங்கில வார்த்தை கிடையாது. கணவனை இழந்த மனைவியை விதவை என்று கூறலாம். மனைவியை இழந்த கணவரை அழைப்பதற்கும் ஆங்கிலத்தில் வார்த்தை உண்டு. பெற்றோரை இழந்த குழந்தையையும் அநாதை என்று அழைப்பர். பிள்ளையை இழந்த இந்த பெற்றோர்கள் ஆழ்ந்த மன வேதனையில் இருந்தனர். 

கருச்சிதைவு,. குழந்தையின் திடீர் மரணம், தற்கொலை. வியாதி. விபத்து. மரணம் இந்த உலகத்திலிருந்து குழந்தைகளை இப்படி பல்வேறு விதத்தில் எடுத்துக்கொண்டு, பெற்றோர்களின் அங்கீகாரத்தைப் பறிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஒரேபேறான குமாரன் சிலுவையில் “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) என்று சொல்லும்போது இந்த ஆழ்ந்த வேதனையை புரிந்துகொண்டார். இயேசுவின் மாம்ச பிறப்பிற்கு முன்பாகவே தேவன் பிதாவாயிருந்தார்; இயேசு தன் கடைசி மூச்சை விடும் வரைக்கும் பிதாவாகவே இருந்தார். இயேசுவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்படும்போதும் தேவன் பிதாவாகவே இருந்தார். உயிர்த்தெழுந்த குமாரனுக்கு பிதாவாக தேவன் இன்னும் நிலைத்திருக்கிறார். இது பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு மீண்டும் தங்களுடைய பிள்ளைகள் உயிர் வாழும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

இந்த உலகத்திற்காகத் தன்னுடைய குமாரனைக் கொடுத்த பரலோகப் பிதாவை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்? அவர் உனக்கும் எனக்கும் தகப்பனே. இன்னும் தகப்பனாகவே இருக்கிறார். நம்முடைய வியாகுலத்தை வெளிப்படுத்தும் துயர சொற்களஞ்சியத்தில் வார்த்தைகள் இல்லாத போதும், தேவன் நம் தகப்பனாயிருக்கிறார் ; நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் (1 யோவான் 3:1).