ஒரு ஓவிய சேகரிப்பாளர் வான் காகின் ஓவியங்களை (பிரபலமான மேற்கத்திய ஓவியர்), ஓவிய நிபுணர் ஒருவரிடம் காண்பித்தபோது, அந்த நிபுணர் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு இது உண்மையான ஓவியம் அல்ல என்று நிராகரித்துவிட்டாராம். எனவே அந்த ஓவிய சேகரிப்பாளர் அதை கொண்டுபோய் ஒரு ஓவியக்கிடங்கில் மறைத்து வைத்துவிட்டாராம். அங்கே அது ஐம்பது ஆண்டுகள் இருந்தது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அந்த ஓவியத்தை மீண்டும் எடுத்து நாற்பது ஆண்டுகளாக மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு முறையும் அது பொய்யான ஓவியம் என்றே நிராகரிக்கப்பட்டது. 2012ல் கணினி நிபுணர் ஓருவர் தீர்க்கமாய் ஆய்வு செய்து, அந்த ஓவியம் வரையப்பட்ட கேன்வாஸ் துணியின் ஒவ்வொரு நூலாக ஆய்வுசெய்தபோது, அந்த கேன்வாஸ் வான் காகின் மற்றொரு ஓவியத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறிந்தார். இறந்த அந்த ஓவிய சேகரிப்பாளர் தன் வாழ்நாள் முழுதும் வான்காகின் உண்மையான ஓவியத்தையே வைத்திருந்தார். 

நீங்கள் போலியாக எண்ணுகிறீர்களா? ஜனங்கள் உங்களை ஆய்வுசெய்யும்போது, உங்களின் கொஞ்சமான ஜெபவாழ்க்கையையும், கொடுக்கும் மனப்பான்மையையும், சாதாரண ஊழியத்தையும் அறியக்கூடும் என்று அஞ்சுகிறீர்களா? ஜெபிக்கிற கண்களிலிருந்து மறைந்து, உங்கள் அறையில் ஒளிந்துகொள்ள தூண்டப்படுகிறீர்களா? 

உங்கள் வாழ்க்கையை மேற்பூச்சான நிறங்களில் அல்லாமல் சற்று ஆழமாய் பாருங்கள். உங்களுடைய பாவ வழிகளிலிருந்து திரும்பி, இயேசுவை விசுவாசித்தால், நீங்களும் அவரும் ஒரே கேன்வாஸ் துணியைப்போல் இருப்பீர்கள். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று இதை இயேசு சித்தரிக்கிறார் (யோவான் 15:5). நீங்களும் இயேசுவும் இணைந்து ஒரு முழுமையை அடைகிறீர்கள். 

இயேசுவில் இளைப்பாறுவது அவருடைய மெய்யான சீஷனாய் உங்களை மாற்றுகிறது. உங்கள் ஓவியத்தை மேம்படுத்துவதற்கு அது ஒன்றே வழி. “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (வச. 5).