“உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!” “உங்களையும் தான்” “நீங்கள் இங்கிருப்பது மகிழ்ச்சி!” இந்த வாழ்த்துக்கள் மென்மையாகவும் வரவேற்கக்கூடியதாகவும் இருந்தது. ஒரு ஊரில் இருந்த ஊழியர்கள் தங்கள் மாலை நேர நிகழ்ச்சிக்கு முன்பு ஆன்லைனில் சந்தித்தார்கள். அவர்களின் தலைவர் அவர்களை வரவேற்றபோது, மற்றவர்கள் வீடியோ காலில் இணைவதை நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது என்பதினால், நான் என்னை வேற்று நபராக எண்ணினேன். திடீரென்று ஒரு வீடியோ தோன்றியது, அதில் என்னுடைய போதகரை பார்த்தேன். வேறொரு வீடியோ இணைந்தது. அதில் என் நீண்ட நாள் திருச்சபை நண்பர் இணைந்தார். அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் நான் தனிமையாய் உணர்வதிலிருந்து விடுபட்டேன். தேவன் எனக்கு ஆதரவை அருளினார் என்று நம்பினேன். 

யெசபேல் மற்றும் ஆகாபினால் எலியாவுக்கு நேரிட்ட பிரச்சனையில், “நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று சொன்ன எலியாவும் தனிமையாயில்லை (1 இராஜ. 19:10). 40 பகல், 40 இரவுகள் வனாந்திரத்தில் பயணம் மேற்கொண்டு, எலியா ஓரெப் கன்மலையில் தன்னை ஒளித்துக்கொள்ளுகிறான். ஆனால் தேவன், “நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (வச. 15-16) என்று கட்டளையிடுகிறார். 

“ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று கர்த்தர் எலியாவுக்கு உறுதியளித்தார் (வச. 18). தேவனுக்கு ஊழியம் செய்யும்போது நாம் தனித்து இருப்பதில்லை என்பதை எலியா கற்றுக்கொண்டான். தேவன் நமக்கு உதவிசெய்யும்போது, நாம் இணைந்து அவரை சேவிப்போம்.