வகை  |  odb

மெய்யான நம்பிக்கை

இந்திராகாந்தியின் படுகொலைக்கு பின்பு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் பிரதம மந்திரி ஆனார். இளமையான, படித்த பிரதம மந்திரி மீது மக்கள் நம்பிக்கை வைத்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என நம்பினர். ஆனால் இலங்கையில் அமைதி நிலவும் பொருட்டு இந்தியாவின் அமைதியின்மை தொடர்ந்தது. அதின் விளைவாய் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். எல்லாம் இனி சரியாகிவிடும் என்னும் நேர்மறையான பார்வைகொண்ட மக்கள் நம்பிக்கை இழந்தனர். ஒன்றை நேர்மறையாய் பார்க்கும் பார்வை மட்டும் போதுமானது அல்ல, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.

1967இல் இறையியலாளர் ஜர்கென் மோல்ட்மான் அவர்கள் “நம்பிக்கை இறையியல்” என்னும் நூலில் தெளிவான தரிசனத்தைக் காட்டுகிறார். இந்த பாதை வெறும் நேர்மறையான பாதை மட்டுமில்லை, நம்பிக்கையின் பாதை என்கிறார். இரண்டும் ஒன்றல்ல. நேர்மறையான சிந்தை என்பது சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும், ஆனால் மெய்யான நம்பிக்கை என்பது எல்லா சூழ்நிலைகளிலும் தேவனின் உண்மைத்துவத்தில் வேரூன்றியுள்ளது என்கிறார்.

இந்த மெய்யான நம்பிக்கையின் ஆதாரம் எது? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் (1 பேதுரு 1:3-4). நம் தேவன் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் மரணத்தை ஜெயித்தார். இந்த பெரிய வெற்றி, நேர்மறையான சிந்தையையும் கடந்து உறுதியான நம்பிக்கையை எல்லா சூழ்நிலைகளிலும் ஏற்படுத்துகிறது.

கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது

சமூக ஊடகமான ட்விட்டர் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட ஒரு தளத்தை உருவாக்கியது. சமீபத்தில் இது சிக்கலாகிவிட்டது. அது ஒத்துவராத அணுகுமுறைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றிய கண்டனங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகிவிட்டது. நாம் அதில் லாக்ஆன் செய்தால், ஒரு நபராவது “டிரெண்டிங்”ல் உலவுவார். அவர் பெயரை சொடுக்கினால்; அதனால் ஏற்பட்ட சர்ச்சையைப் பற்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

நாம் மக்கள் உடுத்தும் ஆடைகளைக் குறித்த நம்முடைய கருத்துக்களை வெளிப்படையாய் விமர்சிக்க கற்றுக்கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ விசுவாசிகளாய் அழைக்கப்பட்டவர்களுக்கு விமர்சன சிந்தனையும், அக்கறையற்ற அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. கருத்து வேறுபாடுகளைக் கையாள நாம் விசுவாசிகளாய் “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழவேண்டும் (கொலோசெயர் 3:12). “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (வ.13) என்றும் வலியுறுத்துகிறார். 

நம்மோடு ஒத்துப்போகும் சுபாவம் கொண்டவர்களிடம் மட்டும் இணங்கிப்போவது போதுமானது அல்ல. நாமும் கிறிஸ்துவின் அன்பினால் மீட்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, கிறிஸ்து வழிகாட்டியது போல, நாமும் கிருபையையும் அன்பையும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். 

அடிப்படைக்குச் செல்வோம்

தீர்மானங்கள் எடுப்பதே அதை உடைப்பதற்காக என்று தோன்றுகிறது. அது சாத்தியம் என்று புத்தாண்டின்போது சிலர் இதை கேலியாக சொல்வதுண்டு. அவ்வாறு சமூக ஊடகத்தில் உலா வந்த சிலவைகள்: போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது சக வாகன ஓட்டிகளைப் பார்த்து கை அசையுங்கள். மாரத்தான் ஓடுவதற்கு கையெழுத்திட்டு, ஓடாமல் இருங்கள். தள்ளிப் போடுவதை நாளைக்கு நிறுத்திக்கொள்ளலாம். சிரி செயலியின் துணையில்லாமல் தொலைந்து போகலாம். உடற்பயிற்சி பதிவுகளை பதிவிடுபவர்களை நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிடவும்.  

புதிய துவக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சிறைபிடிக்கப்பட்ட யூத மக்களுக்கு ஒரு புதிய துவக்கம் அவசியமாயிருந்தது. அவர்களின் 70 ஆண்டுகள் சிறையிருப்பு பயணத்தில், இருபதாம் ஆண்டு கடந்தபோது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம், “நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி" (எசேக்கியல் 39:26) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பாக மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணம் என்னும் அடிப்படைக்கு அவர்கள் மீண்டும் திரும்பவேண்டும். புத்தாண்டில் பண்டிகையை அனுசரிப்பதும் அதில் ஒன்று (45:18). தேவனுடைய குணாதிசயங்களையும் எதிர்பார்ப்புகளையும் நினைவுபடுத்துவதே பண்டிகைகளை அனுசரிப்பதின் பிரதான நோக்கம். தேவன் அதிபதிகளிடம், “நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்" (வச. 9) என்றும் உத்தமமாய் நடங்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

இந்த பாடம் நமக்கும் பொருந்தும். நமது விசுவாசம் கிரியைகள் இல்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும் (யாக்கோபு 2:17). இந்த புத்தாண்டில் நம்முடைய தேவைகளை தேவன் நமக்கு சந்திப்பதுபோல, அவருடைய அடிப்படைக் கற்பனைகளாகிய, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக" மற்றும் “உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22:37-39) என்னும் கற்பனைகளைக் கைக்கொள்ள தீர்மானிப்போம். 

உறுதியான விசுவாசம்

ஏரிக்கரையின் வடக்கே உள்ள மணற்குன்றால் வீடுகள் புதை மணலால் புதைந்து விடும் அபாயம் இருக்கிறது. குடியிருப்பவர்கள் வீடுகளைப் பாதுகாக்க மண் மேடுகளை அகற்ற முயற்சி செய்தும் பலன் இல்லை. அவர்கள் வீடுகள் மணலில் புதைந்து போவதைக் கண்ணெதிரே காண நேர்ந்தது. சமீபத்தில் துப்புரவு பணியை மேற்பார்வையிட்ட உள்ளூர் ஷெரிப், இதைத் தடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். மணற்குன்றுகள் உறுதியான அடித்தளத்திற்கு ஏற்புடைதல்ல என்பதினால், வீட்டின் சொந்தக்காரர்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பலனில்லை. 

இயேசு, மணல் மீது கட்டும் வீடு வீணான முயற்சி என்றார். இயேசு சீஷர்களிடம் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்து, அன்பின் கீழ்ப்படிதல் ஞானத்தை வெளிப்படுத்தும் என்று உறுதியாய் கூறினார் (மத்தேயு 7:15-23). “இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்" (வச. 24). தேவனின் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26).

நம் சூழ்நிலைகள் புதைமணல் போல வேதனைக்குள்ளும் கவலைக்குள்ளும் நம்மை அழுத்தும்போது, நம் நம்பிக்கையை கிறிஸ்து என்னும் கன்மலையின் மீது நாம் வைக்க முற்படலாம். அவர் தமது மாறாத சுபாவங்களால், அசைக்கமுடியாத அஸ்திபாரத்தை நமக்கு தந்து, நம் உறுதியான விசுவாசம் வளர உதவு செய்கிறார்.

முடிவில்லா அன்பு

எப்போதெல்லாம் தாத்தா என்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லுகிறாரோ, அப்போதெல்லாம் தன்னுடைய கைக்கடிகாரத்தை கழற்றி வைத்து விடுவார்” என்று பிரியங்கா நினைவுகூர்ந்தாள். “ஏன்? என்று ஒரு நாள் அவரைக் கேட்டேன்.” 

“அதற்கு அவர் புன்னகையுடன், ஏனென்றால் உன்னோடு நான் செலவு செய்யும் தருணங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீ அறிய வேண்டும்; காலம் செல்வது தெரியாமல் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்" என்று அவர் பதிலளித்தார். 

இந்த ஞாபகங்களை, பிரியங்கா அவளுடைய தாத்தாவின் இறுதிச் சடங்கின்போது பகிர்ந்தார். இது அவளுடைய மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. மற்றவர்கள் நமக்காக நேரம் செலவிடும்போது, அதை நாம் எவ்வளவு மதிப்பாய் உணர்கிறோம் என்பதை நான் பிரதிபலித்தபோது, அது தேவனின் அன்பின் அக்கறையை வெளிப்படுத்தும் வேத வசனங்களை நினைவுபடுத்துகிறது.

தேவன் எப்போதும் நம்மோடு நேரம் செலவிடுகிறார். “நீர் உமது கையை திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தி ஆக்குகிறீர். கர்த்தர் தம் வழிகளில் எல்லாம் நீதி உள்ளவரும், தமது கிரியைகளில் எல்லாம் கிருபை உள்ளவருமாய் இருக்கிறார். கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்” (வச. 16-18) என்று சங்கீதம் 145ல் தாவீது வேண்டுதல் செய்கிறார்.

நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும், தேவனுடைய நன்மையும் அக்கறையும் நம்மைத் தாங்கி, நமக்கு சுவாசிக்க காற்றும் உண்ண உணவும் அளிக்கிறது. அவர் அன்பில் நிறைந்தவராய், நுட்பமான விஷயங்களையும் தன்னுடைய கிருபையினால் படைத்தார். 

தேவனுடைய அன்பு ஆழமானது; அவர் அளிக்கும் நன்மையும் கிருபையும் முடிவில்லாதது. அவர் நித்திய வாழ்விற்கு போகும் வாசலைக் காட்டுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் களிகூருவோம். “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்; நேரம் போவதே தெரியாமல், நித்திய காலமாய் நான் உன்னோடு இருக்க விரும்புகிறேன்.”