எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ராண்டி கில்கோர்கட்டுரைகள்

இரகிசயம் அல்லாத

என்னுடன் பணிபுரியும் நபர் ஒருவர் என்னிடம் தான் இயேசுவுக்கு சொந்தமானவனல்ல எனக் கருதுவதாகக் கூறினான். அவன் தன்னுடைய வசதியான, பெருமைப்படக்கூடிய வாழ்வைக் குறித்து விளக்கியதோடு, அது அவனுக்குத் திருப்தியைத் தரவில்லை எனவும் கூறினான். “இங்கு என்னுடைய பிரச்சனை என்னவெனில், நான் நல்லவனாக வாழவிரும்புகிறேன். அதற்காக கவனமுன் செலுத்துகின்றேன். ஆனால், அது வேலை செய்யவில்லை, நான் எவற்றைச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேனோ அவற்றைச் செய்ய முடியவில்லை. எவற்றை நிறுத்த வேண்டுமென எண்ணுகிறேனோ, அவற்றையே தொடர்ந்து செய்கிறேன்” என்றான்.

“உங்களுடைய இரகசியம் என்ன என்று உள்ளார்ந்த ஆவலோடு கேட்டான். என்னிடம் இரகசியமேயில்லை. தேவன் என்னிடம் எதிர்பார்க்கும் தரத்தில் வாழும்படி என்னிடம் பெலனுமில்லை. எனவேதான் நமக்கு இயேசுவின் உதவி தேவை” என்றேன்.

நான் வேதாகமத்தை வெளியிலெடுத்து “அவன்” சொல்லிய வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுலும் ரோமர் 7:15ல் கூறியுள்ளதைக் காண்பித்தேன். பவுலின் ஏமாற்றத்தைக் காட்டும் இந்த வார்த்தைகள், தங்களை தேவன் விரும்பும் நல்லவர்களாகக் காட்ட முயற்சித்து தோல்வியுற்ற கிறிஸ்தவர்களுக்கும், பெயர் கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமாயுள்ளது. அது உனக்கும் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன். அப்படியானால் கிறிஸ்துவே நமது இரட்சிப்புக்கும் அதன் மூலம் கிடைக்கும் மாற்றங்களுக்கும் மூலக்காரணர் (ரோம. 7:25-8:2) என்ற பவுலின் வெளிப்பாடு உன்னை மெய்சில்ர்க்கச் செய்யும். நம்மில் முடியாததென்று நாம் மலைத்துப்போய் நிற்கின்ற காரியங்களை இயேசு நமக்காக ஏற்கனவே செய்து முடித்து நம்மை விடுவித்து விட்டார்.

நமக்கும, தேவனுக்குமிடையேயுள்ள தடுப்பு, பாவமாகிய தடுப்பு, தடுப்புசவர், நம்முடைய முயற்சியெதுவுமில்லாமலேயே உடைந்து நீக்கப்பட்டுள்ளது. நம்முடைய இரட்சிப்பையும், அதன் பலமான பரிசத்த ஆவியானவவரால், தரப்படுகின்ற வளர்ச்சிக்கேற்ற மாற்றங்களையும் தேவன் நம் அனைவருக்கும் தருகின்றனார். அவர் நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். அவருடைய அழைப்புக்கு இன்றே பதில் கொடு. இதில் எந்த இரகசியமும் இல்லை. அவரே நம் பதிலாவார்.

நிச்சய நம்பிக்கை

ஜப்பான் சீனாவை 1940ஐ ஒட்டிய காலக்கட்டத்தில் தாக்கியபோது, டாக்டர். வில்லியம் வாலஸ் மிஷனரி மருத்துவராக சீனாவின் வசூ பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்டௌட் நினைவு மருத்துவமனையின் பொறுப்பாளராகப்  பணி செய்த அவர், தனக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் படகுகளில் ஏற்றச்சொன்னார். காலாட்படையினரின் தாக்குதல்களைத் தவிர்க்க, அவர் ஆறுகளில் பயணம் செய்து மருத்துவப்பணிகளைத் தொடர்ந்தார்.

ஆபத்தான நேரங்களில், அவர் உயிரோடு இருந்தால், அவர் இரட்சகருக்காக செய்ய வேண்டிய வேலைகள் உண்டு என்பதை வாலஸுக்குப் பிடித்த வசனங்களில் ஒன்றான பிலிப்பியர் 1:21 அவருக்கு நினைவுபடுத்தியது.  அவர் இறக்க நேர்ந்தால், கிறிஸ்துவுடனான நித்திய வாழ்வின் வாக்குத்தத்தம் அவருக்கு இருந்தது. 1951ஆம் ஆண்டு, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு, அவர் இறந்தபோது, இந்த வசனம் ஒரு விசேஷ அர்த்தத்தை வெளிப்படுத்தியது.

இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, நாமும் விரும்பக்கூடிய ஆழ்ந்த பக்தியை பவுலின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. சோதனைகளையும், தேவனுக்காக ஆபத்துக்களையும்கூட எதிர்கொள்ள அவை நமக்கு உதவுகின்றன. பரிசுத்த ஆவியாலும், நமக்கு அருமையானவர்களின் ஜெபங்களாலும் நாம் பெற்றுக்கொண்ட பக்தி அது (வச. 19). அது ஒரு வாக்குறுதியும்கூட. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், அவருடைய சேவைக்காக நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கும்போது, நமக்கு நினைவுறுத்தப்படும் விஷயம் என்னவென்றால் - இங்கு நம்முடைய வேலையும், வாழ்க்கையும் முற்றுப்பெறும்போது, இயேசுவுடனான நித்திய வாழ்க்கை நமக்குக் காத்திருக்கிறது என்ற சந்தோஷம் நமக்கு உண்டு.

கிறிஸ்துவுடன் நடப்பதற்கு ஒப்புக்கொடுத்த இருதயங்களோடும், அவருடனான நித்திய வாழ்விற்கான உறுதிமொழியின் மீதுள்ள கண்களோடும், நமது கடினமான தருணங்களிலும், நமது நாட்களும், நமது செயல்களும் ஆண்டவரின் அன்பால் மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக.

வீட்டிற்கு வழியைத் தேடுதல்

சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் கடினமாக இருக்கும் போது, நாம் பிரமித்து, இந்தக் கஷ்டத்திற்கு முடிவே இல்லையா என்று நினைக்கிறோம். என்னுடைய குடும்ப வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், என் மனைவி ஒரு நாள் காலை தியானத்திற்குப் பின் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டாள். 'நாம் இருட்டான வேளையில் கற்றுக் கொள்ளும் பாடத்தை வெளிச்சத்திலும் மறக்கக் கூடாது என்று கர்த்தர்விரும்புகிறார்" என்று கூறினாள்.
 
பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஆசியாவில் கொடுமையான துன்பங்களை அனுபவித்ததை விளக்கிய பின், இதேபோன்ற சிந்தனையை பவுல் 2 கொரிந்தியர் 1ல் எழுதுகிறார். எப்படிப்பட்ட இருட்டான தருணங்களையும் ஆண்டவர் சரிசெய்ய முடியும் என்பதை கொரிந்து பட்டணத்தார் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்புகிறார். நாங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்யத்தக்கதாக, எங்களுக்கு அவர் ஆறுதல் செய்கிறார் (வச. 4) என்று கூறுகிறார். பவுலும் அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளின் போது கர்த்தரிடத்தில்கற்றுக் கொண்டவற்றை கொரிந்து பட்டணத்தார் அதேபோன்ற கஷ்டங்களை சந்திக்கும் போது, ஆறுதல்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் உபயோகப்படுத்தினர். கேட்க விருப்பமுடையவர்
களாய் இருந்தால், தேவன் நமக்கும் கற்றுத் தருகிறார். நம்முடைய சோதனைகளில் நாம் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு உதவ கற்றுத் தருவதன்மூலம் நம் சோதனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பார்.
 
நீங்கள் இப்போது இருட்டில் இருக்கிறீர்களா? பவுலின் வார்த்தைகளினாலும், அனுபவத்தினாலும் ஊக்கம் அடையுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களுடைய நடைகளை வழிநடத்துகிறார் என்றும், அவருடைய உண்மைகளை  உங்களுடைய இருதயத்தில் பதிக்கிறார் என்றும் நம்புங்கள். இதனால் இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்களுடன் உங்களால் இதைப் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் முன்பு அங்கே இருந்ததால், வீட்டிற்கு வழி உங்களுக்குத் தெரியும்.
 

தன்னலமற்ற சேவை

ஒரு சிறிய கூட்ட மக்கள் திரண்டு நின்று அங்கு புல்தரையில் சரிந்துகிடந்த ஒரு பெரிய மரத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முதிய பெண்மணி தன் ஊன்றுகோலில் சாய்ந்து நின்றபடி, முந்திய இரவில் வீசிய புயல் காற்று, நெடுநாட்களாக வளர்ந்திருந்த எங்களுடைய எல்ம் மரத்தைச் சாய்த்து விட்டதை விளக்கினார். மேலும் அவள் நடுங்கிய குரலோடும், உணர்ச்சி வசத்தோடும் “அது எங்களுடைய அழகிய கல்சுவரை உடைத்து விட்டது. நாங்கள் திருமணமாகி வந்தபோது என் கணவர் இந்த சுவரைக் கட்டுவித்தார். இந்தக் சுவரை அவர் மிகவும் நேசித்தார். நானும் அதனை நேசித்தேன். இப்பொழுது அவரைப் போன்று இதுவும் போய்விட்டது” என்றாள்.

அடுத்த நாள் காலை மரம் வெட்டும் குழுவினர் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியைச் செய்வதை அவள்பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுடைய முகத்தில் ஒரு சிரிப்பு மலர்ந்தது. அந்த மரக்கிளைகளினூடே ஒரு பையன் அவளுடைய புல்தரையை சரி செய்து கொண்டிருந்தான். மேலும் இரு நபர்கள் அவள் நேசித்த அந்த கல் சுவரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.

நம்மைச் சுற்றியிருப்போரின் சோர்ந்த இருதயத்தைத் தூக்கி விடுதல் போன்றச் செயலை தேவன் அங்கீகரிக்கும் செயலாகத் தீர்க்கன் ஏசாயா விளக்குகின்றார். அந்த முதிய பெண்மணிக்கு அவள் விரும்பிய கல்சுவரை சரிசெய்து கொடுத்ததைப் போன்று, வெறுமனே ஆவிக்குரிய ஆராதனைசெய்வதைக் காட்டிலும் தன்னலமற்ற சேவைகளைப் பிறருக்குச் செய்வதை தேவன் அதிகம் விரும்புகின்றார் என இப்பகுதி நமக்குப் போதிக்கின்றது. தன்னலமற்ற சேவை செய்யும் அவருடைய பிள்ளைகள் மீது தேவன் இருவகையான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். முதலாவது நம்முடைய மனப்பூர்வமான சேவையை நலிந்தோரும், தேவையுள்ளோரும் பெறுமாறு பயன்படுத்துகின்றார் (ஏசா. 58:7-10). இரண்டாவது தேவன் இத்தகைய சேவையில் முனைந்திருப்போரை கனப்படுத்துகின்றார். நம்முடைய சேவை மனப்பான்மையை மேலும் உருவாக்கி, அவருடைய .ராஜ்ஜியத்தில் வல்லமையான கருவியாக பயன்படுத்துவார் (வச. 11-12). இன்றைய நாளில் என்ன செயலைச் செய்யப்போகின்றாய்?

ஓவ்வொரு நொடிப் பொழுதும்

நான் அடாவைச் சந்தித்தபோது, அவள் தன்னுடைய மரித்துப்போன முழு குடும்பத்தையும், தன்னுடைய நண்பர்களையும் விட்டுவிட்டு ஒரு மருத்துவமனையில் தங்கியிருந்தாள். “முதுமை என்பதுதான் மிகவும் கடினமான பகுதி, நம்மைத் தனியே விட்டுவிட்டு ஒவ்வொருவராக வெளியேறுவதைப் பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறினார். ஒரு நாள் நான் அடாவிடம் எது அவளுக்கு அதிக உற்சாகம் தருவதாக இருக்கின்றது?, எப்படி அவள் நேரத்தைச் செலவிடுகின்றாள் எனக் கேட்டேன். அவள் வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய பகுதியிலிருந்து (பிலி. 1:21) எனக்கு பதில் கொடுத்தாள். “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்றாள். மேலும், “ நான் இங்கிருக்கும் போதும் எனக்கு வேலைகளிருக்கிறது, நான் நன்றாயிருக்கும் போது, இங்கிருக்கின்ற மக்களோடு இயேசுவைப் பற்றி பேசுவேன், என்னால் முடியாத நாட்களில் நான் அவர்களுக்காக ஜெபிப்பேன்” என்றாள்.

பவுல் சிறைச்சாலையிலிருக்கும் போதுதான் பிலிப்பியருக்கு எழுதுகின்றார். நடைமுறையிலுள்ளவற்றை அவர் ஏற்றுக்கொள்ளும் போது தான், அது அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் துன்பங்களைச் சகிக்கும் போது, அவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கிறது. நம்மைப் பரலோகம் வரவேற்பதாகத் தோன்றினாலும், இந்த உலகில் நாம் செலவிட்ட நேரம் தேவனுக்கு முக்கியமானது.

பவுலைப் போன்று அடாவும் தன்னுடைய ஒவ்வொரு மூச்சையும், தேவனுக்குச் சேவை செய்யவும், அவரை மகிமைப்படுத்தவும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக உணர்கின்றார். எனவே அடா தன் நாட்களை பிறரை நேசிப்பதிலும், தன்னுடைய இரட்சகரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் செலவிடுகின்றாள்.

நம்முடைய இருண்ட நாட்களிலும், கிறிஸ்தவர்கள் நித்தியத்தில் தேவனோடு மகிழ்ச்சியில் வாழ்வோம் என்ற வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொள்ளலாம். இங்கு வாழும் போதும் நாம் அவரோடுள்ள உறவினை அநுபவிக்கின்றோம். அவர் நம்முடைய ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மணித்துளியையும் முக்கியமானதாக்கித் தருவார்.

எதிர்பாராத ஞானம்

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பெண்மணி தன்னுடைய இளம் வயது மகன் ஒரு வன்முறை செயலைப் பற்றிய செய்தி தொகுப்பினைப் பார்ப்பதாகவும், தான் உடனடியாக அந்த ஒளித்தடத்தை மாற்றி விட்டதாகவும் என்னோடு பகிர்ந்து கொண்டாள். மேலும், நீ இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை என அவனிடம் கூறினாள். நாங்கள் இதனைக் குறித்து விவாதித்தோம். அவனுடைய மனதை ‘‘ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ...” (பிலிப். 4:8) அவற்றால் நிரப்ப வேண்டும் என்று கூறினாள். இரவு உணவிற்குப் பின் அவளும் அவளுடைய கணவரும் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களின் ஐந்து வயது பெண் டெலிவிஷனை நிறுத்திவிட்டாள். ‘‘நீங்கள் இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை” என்று அம்மாவைப் போன்ற குரலில் கூறினாள். மேலும், இப்பொழுது அந்த வேத வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்” என்றாள்.

மூத்தோர்களாகிய நாம் சிறுவர்களையும்விட மேலாகச் செய்திகளைக் கிரகிக்கவும் அவற்றை மனதில் இருத்தவும் முடியும். எனினும், அந்த தம்பதியினரின் பெண் பிள்ளை வேடிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் தன்னுடைய தாயின் அறிவுரைகளை செயலில் வெளிப்படுத்தினாள். நன்கு முதிர்ச்சி பெற்ற பெரியவர்கள்கூட வாழ்வின் இருண்ட பகுதிகளையே பார்த்துக் கொண்டிருந்தால் பாதிக்கப்படுவர். இத்தகைய காரியங்களைக் குறித்து சிந்தித்த பவுல், பிலிப்பியர் 4:8 ல் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். இது, இந்த உலகின் இருண்ட பகுதிகளையே பார்ப்பதால் நம்மில் படிந்து விடும் மன அழுத்தங்களை நீக்குவதற்கான வலிமை வாய்ந்த மருந்தாகும்.

நம்முடைய மனதை நிறைத்துள்ளவற்றைக் குறித்து கவனமாக முடிவுகள் எடுப்பதற்கு மிகச் சிறந்த வழி, தேவனைக் கனம் பண்ணி நம் இருதயத்தையும் அவருக்கேற்றபடி காத்துக் கொள்வதேயாகும்.

எதிர்பாராத கிருபை

எனது உயர் நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டில் ஒரு சனிக்கிழமை அதிகாலை நேரம், அருகிலுள்ள பௌலிங் கிளப்பில் எனது வேலைக்குச் செல்ல ஆவலாக இருந்தேன். முந்தின நாள் மாலையில் அங்கு வெகு நேரம் இருந்து தளமிடப்பட்ட தரையில் சகதியைத் துடைத்து துப்புரவு செய்துகொண்டிருந்தேன். ஏனெனில், அதற்கான பணியாள் உடல் நலக்குறைவால் வரவில்லை, இதனை நான் முதலாளியிடம் சொல்ல முயற்சிக்கவில்லை. அது முதலாளிக்கு வியப்பூட்டுவதாக இருக்கட்டும்,  இதில் என்ன தவறு நடந்துவிடப் போகிறது? என எண்ணினேன்.

ஆனால், அது அநேக விளைவுகளைத் தந்தது.

நான் வாசலில் கால் மிதித்தபோது சில அங்குலங்கள் உயரத்திற்கு தண்ணீர் நிற்பதையும் அதன் மேல் பௌலிங் கட்டைகள், காகித உருளைகள், மதிப்பெண் குறியீட்டு தாள் பெட்டிகள் மிதந்து வருவதையும் கண்டேன். அப்பொழுது தான் நான் என்ன செய்துவிட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். தரையைச் சுத்தப்படுத்திய போது பெரிய தண்ணிர் வால்வு ஒன்றினை இரவு முழுவதும் திறந்து விட்டிருந்திருக்கிறேன். நம்ப முடியவில்லை! எனது முதலாளி என்னைக் கட்டி அணைத்து புன்முறுவலோடு வரவேற்று “இது உன் முயற்சிக்காக” என்றார்.

சவுல் கிறிஸ்தவர்களைத் தண்டிப்பதிலும் துன்பப்படுத்துவதிலும் மும்மூரமாயிருந்தான் (அப். 9:1-2). ஆனால், தமஸ்குவுக்கு செல்லும் வழியில் இயேசுவை முகமுகமாய் சந்தித்தபோது (வச. 3-4), விரைவில் அப்போஸ்தலனாக மாற இருக்கும் பவுலின் பாவமான செய்கைகளை நேரடியாக இயேசு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பார்வை இழந்த சவுல்/பவுலுக்கு அனனியா என்ற ஒரு கிறிஸ்தவன் தேவைப்பட்டது. தைரியம் மற்றும் கிருபை நிறைந்த அனனியாவின் செயலினால் பார்வையை மீண்டும் பெற்றார் (வச. 17).

பவுலும் நானும் எதிர்பாராத கிருபையைப் பெற்றோம்.

அநேகர் குழம்பிய நிலையிலுள்ளதை நன்கு அறிவார்கள். அவர்களுக்கு நீண்ட விரிவுரைகளைக் காட்டிலும் இரட்சிப்பிற்கான நம்பிக்கை தேவை. கடின முகமும், குத்தும் வார்த்தைகளும் அவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தடுத்து விடும். அனனியா அல்லது என்னுடைய முதலாளி போன்ற இயேசுவைப் பின்பற்றுபவர்களின் கிருபை நிறைந்த முகம் நாம் எதிர்பாராது சந்திக்கும் நபர்களின் வாழ்வின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்

ஆறுதலின் கரம்

“நோயாளி எதிர்த்து முரண்டு பிடிக்கிறார்” என்று நர்ஸின் குறிப்பு கூறியது.

ஒரு சிக்கலான திறந்த இருதய அறுவைசிகிச்சைக்குப்பின் தான் கண் விழித்தபோது, ஒரு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தது  அவளுக்குத் தெரியாது. நான் குழம்பிபோயிருந்தேன்.. என் தொண்டைவழியாக ஒரு குழாய் உள்ளே செலுத்தப்பட்டிருந்தது; என் முழு உடம்பும் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. நான் சுவாசிக்க ஆக்ஸிஜன் செல்லும் குழாயை நான் பிடுங்கிப்போடாதபடி என் கைகளை வாரினால் கட்டியிருந்தார்கள். அது பயங்கரமும் வேதனையானதுமான ஒரு அனுபவம். அந்த நேரத்தில் என் படுக்கையின் வலதுபக்கத்திலிருந்து நர்ஸின் உதவியாள், கீழே தொங்கிக்கொண்டிருந்த என் கையைப்பிடித்துத் தாங்கினாள். எதிர்பாராத அந்த தொடுதலை வெகு மென்மையானதாக உணர்ந்தேன். நான் சற்று மன நிம்மதி அடைந்தேன். அதனால் என் உடம்பு நடுங்குவது நின்றுவிட்டது.

பிற நோயாளிகளைத் தொடும்போது அவர்கள் அமைதலடைந்த அனுபவத்தால், அந்த நர்ஸின் உதவியாள் இவனையும் ஆறுதலின் கரம் அமைதிப்படுத்துமென அறிந்திருந்தாள். தேவன் தம் பிள்ளைகள் பாடுபடும்பொழுது, அவர்களை எப்படி ஆறுதல் படுத்துகிறார் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும்.

நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு ஆறுதல்படுத்துவது என்பது ஓர் வலிமைமிக்க மறக்க இயலாத ஒரு முக்கியமான வல்லமையுள்ள ஆயுதம். பவுல் 2 கொரிந்தியர் 1:3-4ல், கர்த்தருடைய ஆயுதப்பெட்டியிலுள்ள முக்கிய ஆயுதம் இந்த ஆறுதல் என்கிறார். அதுமட்டுமல்ல, தேவன் நம்மை ஆறுதல்படுத்திய விதத்தை நினைத்து, இதே சூந்நிலையிலிருக்கும் மற்றவர்களை ஆறுதல்படுத்தி தேவனுடைய ஆறுதலைப் பரப்பச் சொல்லுகிறார். நம்மை ஆறுதல்படுத்தியது, நம்மைப் போன்ற மற்றவர்களை ஆறுதல்படுத்தவே (வச. 7). இது தேவனின் மகத்தான அன்பின் ஒரு அடையாளம். எளிய செயல்களின் மூலம் நாம் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் ஜெபிக்க முடியாத நாள்

நவம்பர் 2015ல் எனக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவையென அறிந்தேன். நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், அசைக்கப்பட்டேன். நான் மரணத்தைக்குறித்து சிந்திக்கலானேன். நான் சரிசெய்யவேண்டிய உறவுகளுண்டா? என் குடும்பத்திற்காக நான் ஏற்பாடு பண்ண வேண்டிய பணவிஷயங்கள் உண்டா? அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், நான் வேவை செய்வதற்கு பலமாதங்களாகலாம். சிகிச்சைக்கு முன்னரே முடிக்கக்கூடிய வேலைகளுண்டா? காத்திருக்க முடியாத சில வேலைகளுண்டு. அவற்றை தான் யாரிடம் ஒப்படைப்பது? அது ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டிய தருணம்.

ஆனால், இரண்டையும் என்னால் செய்ய முடியவில்லை!

என் சரீரம் பலவீனமாயிற்று; என் மனது சோர்ந்து போனது. மிகவும் எளிய வேலைகள் கூட என் பலத்திற்கு மிஞ்சினவைகளாய்த் தோன்றியது. மிகவும் ஆச்சரியமானதென்னவென்றால், நான் ஜெபிக்க முயன்றவுடனே என் எண்ணங்கள் என் நோய்க்கு நேராகவும், அதனால் ஏற்பட்ட இன்னல்களுக்கு நேராகவும் திரும்பும். ஏன் இருதயம் என்னைத் துங்கச் செய்துவிடும். அது அதிக மனமடிவை ஏற்படுத்தியது. என்னால் வேலையும் செய்ய முடியவில்லை, மனைவி பிள்ளைகளோடு கூடக் கொஞ்ச நாட்கள் இருக்க தேவனிடம் கேட்கவும் முடியவில்லை!

ஜெபிக்க முடியாமலிருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அறிந்த தேவன் நான் ஜெபிக்க முடியாமலிருந்ததையும் அறிந்து அதை மேற்கொள்ள இரண்டு ஆயத்தங்களைச் செய்தார். நாம் ஜெபிக்க முடியாதபோது பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபிப்பது (ரோ. 8:26) நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது (யாக். 5:16, கலா. 6:2).

பரிசுத்த ஆவியானவர் பிதாவிடம் என் பெலவீனத்தைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்காக ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேட்பது எத்தனை பெரிய ஈவு! அவர்கள் என்னிடம் என்னத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டதற்கு நான் கொடுத்த பதிலையும் தேவன் கேட்டார் என்பது எத்தனை ஆச்சரியம்.

நமக்கொரு நிச்சயமில்லாத நேரத்தில் நான் ஜெபம் பண்ணமுடியாவிட்டாலும் என் இருதயத்தின் ஏக்கங்களைத் தேவன் கேட்கிறார் என்பது எத்தகைய பரிசு!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).

 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது. 

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.