“நோயாளி எதிர்த்து முரண்டு பிடிக்கிறார்” என்று நர்ஸின் குறிப்பு கூறியது.

ஒரு சிக்கலான திறந்த இருதய அறுவைசிகிச்சைக்குப்பின் தான் கண் விழித்தபோது, ஒரு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தது  அவளுக்குத் தெரியாது. நான் குழம்பிபோயிருந்தேன்.. என் தொண்டைவழியாக ஒரு குழாய் உள்ளே செலுத்தப்பட்டிருந்தது; என் முழு உடம்பும் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. நான் சுவாசிக்க ஆக்ஸிஜன் செல்லும் குழாயை நான் பிடுங்கிப்போடாதபடி என் கைகளை வாரினால் கட்டியிருந்தார்கள். அது பயங்கரமும் வேதனையானதுமான ஒரு அனுபவம். அந்த நேரத்தில் என் படுக்கையின் வலதுபக்கத்திலிருந்து நர்ஸின் உதவியாள், கீழே தொங்கிக்கொண்டிருந்த என் கையைப்பிடித்துத் தாங்கினாள். எதிர்பாராத அந்த தொடுதலை வெகு மென்மையானதாக உணர்ந்தேன். நான் சற்று மன நிம்மதி அடைந்தேன். அதனால் என் உடம்பு நடுங்குவது நின்றுவிட்டது.

பிற நோயாளிகளைத் தொடும்போது அவர்கள் அமைதலடைந்த அனுபவத்தால், அந்த நர்ஸின் உதவியாள் இவனையும் ஆறுதலின் கரம் அமைதிப்படுத்துமென அறிந்திருந்தாள். தேவன் தம் பிள்ளைகள் பாடுபடும்பொழுது, அவர்களை எப்படி ஆறுதல் படுத்துகிறார் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும்.

நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு ஆறுதல்படுத்துவது என்பது ஓர் வலிமைமிக்க மறக்க இயலாத ஒரு முக்கியமான வல்லமையுள்ள ஆயுதம். பவுல் 2 கொரிந்தியர் 1:3-4ல், கர்த்தருடைய ஆயுதப்பெட்டியிலுள்ள முக்கிய ஆயுதம் இந்த ஆறுதல் என்கிறார். அதுமட்டுமல்ல, தேவன் நம்மை ஆறுதல்படுத்திய விதத்தை நினைத்து, இதே சூந்நிலையிலிருக்கும் மற்றவர்களை ஆறுதல்படுத்தி தேவனுடைய ஆறுதலைப் பரப்பச் சொல்லுகிறார். நம்மை ஆறுதல்படுத்தியது, நம்மைப் போன்ற மற்றவர்களை ஆறுதல்படுத்தவே (வச. 7). இது தேவனின் மகத்தான அன்பின் ஒரு அடையாளம். எளிய செயல்களின் மூலம் நாம் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.