எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

கிறிஸ்துமஸும் பாரம்பரியங்களும்

குடைக் கைப்பிடிபோல் வளைந்த மூங்கிலில் சிவப்பும் வெள்ளையும் கலந்த மிட்டாயை சுவைக்கும் பொழுது ஜெர்மானியர்களுக்கு ‘நன்றி சொல்லுங்கள்’ (Danke Schon).  ஏனென்றால், அது ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில்தான் முதலில் செய்யப்பட்டது. பாய்ன்செட்டியா செடியை ரசிக்கும் பொழுது மெக்சிக்கோவுக்கு “கிரேசியாஸ்: (GRACIAS) சொல்லுங்கள். அங்குதான் அது முதலில் வளர்ந்தது. “நோயெல்” என்ற வார்த்தையை பிரான்சு நாட்டிற்கு (merci beaucoup) மெர்சி பியூகேப் என்று சொல்லுங்கள். MISTILETOE இங்கிலாந்து நாட்டிற்கு கூரியதால் “சியர்ஸ்” என்றும் சொல்லூங்கள்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் சேர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் பாரம்பரியங்களைக் கிறிஸ்துமஸ் காலங்களில் கொண்டாடும்பொழுது, நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை நம்முடைய நல்ல, இரக்கமுள்ள அன்பான தேவனுக்கு உண்மை மனதுடனே செலுத்த வேண்டும். அவர்தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குக் காரணகர்த்தா.  ஏனென்றால், அவர்தான் பெத்லகேம் பாலகன் 2000 வருடங்களுக்கு முன் யூதேயாவிலுள்ள முன்னணையில் பிறந்தார். இந்த தெய்வீக ஈவை அறிவித்த தூதர்கள் “இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன். உங்களுக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11) என்றனர்.

மின்னிடும் கிறிஸ்துமஸ் மர விளக்குகளிலல்ல, பிரிக்கப்பட்ட பரிசுகளிலுமல்ல, தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்க வந்த இயேசு பாலனை (மத். 1:21) பார்க்கும் பொழுது மட்டுமே கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சி உண்டாகும். அவருடைய பிறப்பு பாரம்பரியங்களுக்கு அப்பாற்பட்டது. சொல்லிமுடியாத இந்த கிறிஸ்மஸ் பரிசிற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். நன்றி சொல்வதே கிறிஸ்துமஸின் உண்மையான மையக் கருபொருள்.

அறுவடையும் பலி செலுத்துதலும்

அநேக ஆயிர ஆண்டுகளுக்குமுன், தேவன் மோசேயோடு நேரடியாகப் பேசி, தமது ஜனங்களுக்கு புதிதான  ஓர்பண்டிகையையை நியமித்தார் (யாத். 23:16). மோசே குறிப்பிட்டுள்ளபடி நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைக் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையை ஆசரிப்பாயாக என்றார்.

இன்று உலகத்தின் பல நாடுகளில் அறுப்பின் பண்டிகைக்கொத்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கானா நாட்டில் அறுப்பின் பண்டிகையை “யாம் YAM” பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். பிரேசிலில், ஆகாரத்திற்குத் தேவையான விளைச்சல் கிடைத்ததற்காக “Dia de Acao de Gracas” பண்டிகையை ஆசரிக்கிறார்கள். சீனாவில், இலையுதிர் காலத்தின் மத்தியில் “Mid Autumn-(Moon)” திருவிழா உண்டு. அமெரிக்காவிலும், கானடாவிலும் அறுப்பின் பண்டிகை, நன்றி சொல்லும் (Thanksgiving) நாளாகக் கொண்டாடப்படும்.

வெள்ளத்திற்குப்பின், நோவாவிற்கும் அவன் குடும்பத்திற்கும், நமக்கும், வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பூமியில் தாம் வைத்திருப்பதை நினைவுபடுத்தினார். இதுவே அறுப்பின் பண்டிகைகளின் இலக்காகும். பூமியுள்ளள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார் (ஆதி. 8:22). அறுவடைக்கான நன்றி நம்மைத்தாங்குகிற தேவனுக்கு மட்டுமே.

நீங்கள் எங்கே வசித்தாலும், நிலத்தின் அறுவடையை எப்படிக் கொண்டாடினாலும், இன்றைக்கு நேரமெடுத்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனென்றால், தேவனுடைய சிருஷ்டிக்கும் ஞானமில்லாமல் நமக்கு அறுவடையுமிராது, கொண்டாட்டமுமிராது.

அந்த பிரசித்திபெற்ற மாயப்புன்னகை

எனக்கும் என் மனைவிக்கும் பாரீஸிலுள்ள (லூவருக்குச் செல்ல வாய்ப்பு) கிடைத்தது. என் பதினொரு வயது பேத்தியை போனில் அழைத்து மிகப்பிரபலமான மோனலீசா படத்தைப் பார்த்ததைச் சொன்னேன். உடனே  “அவள் புன்னகைகிக்கிறாளா?” என்று கேட்டாள்.

இந்தப் படத்தைக் குறித்த மிகப்பெரிய கேள்வியே அதுதானே? லியோனார்டோ டாவின்சி சுமார் 600 வருடங்களுக்கு முன்னே இச்சித்திரத்தை வர்ணந்தீட்டியிருந்தாலும். அந்தப்பெண் சிரிக்கிறாளா, இல்லையா என்பது இன்றும் ஒரு தீராத புதிராகவே இருக்கிறது. அந்தச் சித்திரத்தின் அழகில் மயங்கினாலும், மோனலீஸா என்ன செய்கிறாள் என்று யாராலும் சொல்லவே முடியவில்லை.

அந்தச் சித்திரத்தின் புதிரில் “புன்னகை” ஒரு பகுதி. ஆனால், அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது? புன்னகையைக் குறித்து வேதாகமத்தில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? உண்மையில் வேதாகமத்தில் ஐந்திற்கும் குறைவாகவே இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், நாம் அதைச் செய்ய வேண்டுமென்பதுபோலக் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், நகைப்பிற்கு வழிநடத்தும் மனப்பான்மையைக் குறித்துச் சொல்லுகிறது. அதுவே மனமகிழ்ச்சி எனும் வார்த்தை, கிட்டத்தட்ட 250 தடவைகள் வருகிறது. தேவனை நினைக்கும் பொழுது என் இருதயம் களிகூறுகிறது (சங். 28:7), நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள் (சங். 33:1). உம்முடைய சாட்சிகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி (சங். 119:111); கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம் (சங். 126:3).

கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பதன் மூலம் கொடுக்கும் மகிழ்ச்சி, நமது முகத்தில் புன்னகையை வருவிக்குகிறது.

ரூத்தின் கதை

ரூத் அவளது கதையைக் கண்ணீர் வடிக்காமல் கூற இயலாது. 80 வயதிற்கு மேற்பட்ட ரூத், அதிகமாக நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், திருச்சபையில் முக்கியமற்றவளாக இருக்கலாம். அவள் தனிமையாக வாழ்ந்து வந்ததால், அவளுக்கு அநேக மக்களோடு தொடர்பு இல்லாத நிலையில், வெளியே செல்லவோ, ஆலயத்திற்குச் செல்லவோ, அவள் பிறருடைய வாகன உதவியைச் சார்ந்திருந்தாள்.

ஆனால், அவளது இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் பொழுது, தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவள் 30 வயதுகளில் இருந்தபொழுது, அவளது சிநேகிதிகளில் ஒருவர். அவளை ஒரு இரவு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். அப்பொழுது அவள் ஒரு போதகரின் பேச்சை கேட்கப் போவதாகத் தெரியாது. “அப்படித் தெரிந்திருந்தால், நான் போயிருக்கமாட்டேன்” என்று கூறினாள். அவள் ஏற்கனவே மதத்தைப் பற்றி அறிந்திருந்தாள். அது அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவள் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள். அன்று இரவு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டாள்.

இப்பொழுது 50 ஆண்டுகள் கழித்து, இயேசு அவளது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறாள். அன்று மாலை அவள் தேவனுடைய பிள்ளையானாள். இப்பொழுது அவள் வயது சென்றவளானலும், அவளது இரட்சிப்பின் கதை ஒருக்காலும் பழமையாகப் போனதில்லை என்றும் இளமையாகவே உள்ளது.

நமது கதை ரூத்தின் கதையைப் போல இருந்தாலும் சரி, இராவிட்டாலும் சரி அது முக்கியமல்ல ஆனால், இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரது மனம், உயிர்த்தெழுலில் நம்பிக்கை வைக்கும் முதல்படியே மிக முக்கியமானது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.

அதைத்தான் ரூத் செய்தாள். நீங்களும் அதைச் செய்யலாம். இயேசு மீட்கிறார். மாற்றுகிறார். நமக்கு புதிய ஜீவனைத் தருகிறார்.

5020வது எண்ணுடைய அறை

ஜே பப்டன் மருத்துவமனையிலிருந்த அவனது அறையை ஒரு கலங்கரை விளக்காக மாற்றிவிட்டான்.

கணவனாக, தகப்பனாக, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக, விளையாட்டு பயிற்சியாளராக இருந்த 52 வயதுடைய ஜே பப்டன் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தான். ஆனால், 5020 என்ற எண்ணுடைய அவனது அறை, அவனது சினேகிதர்களுக்கு, குடும்ப அங்கத்தினர்களுக்கு, மருத்துவமனையில் பணி செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஒளிவிளக்காக இருந்தது. ஜேவினுடைய ஆழமான விசுவாசம் அனைவரோடும் சந்தோஷமாக பழகும் தன்மை இவற்றினால் அவனது அறையில் பணிபுரிவதற்கு தாதிமார்கள் அதிகம் விரும்பினார்கள். சில தாதிமார் பணியிலில்லாத ஓய்வு நேரத்தில் கூட அவனைப் பார்க்க வந்தார்கள்.

ஒரு காலத்தில் விளையாட்டு வீரருக்கான அவனது திடகாத்திரமான உடல் வியாதியினால் மெலிந்து கொண்டிருந்த பொழுதும் அவனை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் ஊக்கத்தோடு கூடிய புன் சிரிப்போடு அவர்களை வாழ்த்துவான். “ஒவ்வொரு முறையும் நான் ஜேயை பார்க்கச் சென்ற பொழுது, அவன் மகிழ்ச்சியுடனும், நேர்மறை எண்ணங்களுடனும், நம்பிக்கையுடனும் இருந்தான். புற்று நோயால் ஏற்படுகிற மரணத்தை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தான்” என்று அவனுடைய சினேகிதர்களில் ஒருவன் கூறினான்.

ஜேயின் அடக்க ஆராதனையில் பேசிய ஒருவர், ஜே இருந்த அறை எண் 5020ற்கு ஒரு சிறப்பான அர்த்தம் உண்டு என்று குறிப்பிட்டார். அவர் பேசின பொழுது ஆதியாகமம் 50:20ல் யோசேப்பை அவனது சகோதரர்கள் அடிமையாக விற்ற பொழுது, தேவன் அதை மாற்றி அமைத்து “வெகு ஜனங்களை உயிரோடு காக்கும்படி” தீமையை நன்மையாக மாற்றிவிட்டார். ஜேவின் வாழ்க்கையில் புற்றுநோய் பாதித்தது ஆனால், தேவனுடைய கரம் அவனது வாழ்க்கையில் செயல்படுவதை உணர்ந்த ஜே தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே நடத்துவார் என்று கூறுமளவிற்கு விசுவாச வாழ்க்கையை நடத்தினான். ஆதனால்தான் புற்று நோயினால் ஏற்பட்ட வியாதியின் கோரத்தை இயேசுவைப்பற்றி பிறருக்கு அறிவிக்கும் திறந்த வாசலாகமாற்றினான்.

மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த பொழுதும் கூட நமது இரட்சகர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவராக இருந்தான். நமது நம்பிக்கைக்கு பாத்திரமான தேவன் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை, அவன் விட்டுச் சென்ற நம்பிக்கைக்கு தலை சிறந்த உதாரணமாகும்.

உள்ளும் புறமும்

சில  ஆண்டுகளுக்குமுன் ஒரு புத்தக வெளியீட்டாளர் பெருந்தவறொன்றைச் செய்தார். சந்தையில் பல ஆண்டுகளாக விற்பனையாகிவந்த ஒரு புத்தகத்தை அதின் ஆசிரியர் புதுப்பித்து மறுபதிப்பு செய்ய விரும்பினார். அவர் அந்தப்புத்தகத்தை திருத்தியெழுதி வெளியிட்டாரிடம் கொடுத்தார். அவர் அழகான மேலுறையைத் தயரித்தார். மறுபதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு பெருந்தவறு நடந்துவிட்டது. புதிய உறைக்குள் பழைய புத்தகத்தையே வைத்துவிட்டார். வந்தது மறுபதிப்பல்ல.

புதிய வெளிப்புறம். ஆனால், பழைய உட்புறம் இந்த மறுபதிப்பு புதியதல்ல!

இதே மாதிரியான காரியம் சில மனிதர்களிடத்திலும் காணப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். சில வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றமுண்டு. ஆனால். இருதயத்தில் ஒரு மாற்றமுமில்லை. புதிய வெளிப்புறம், பழைய உட்புறம் தேவன் மட்டுமே உள்ளான மாற்றத்தைத்தர முடியுமென்பதை அவர்கள் அறியவில்லை.

இயேசு தேவனிடத்திலிருந்து வந்ததால்தான் (வச. 2) வித்தியாசமான போதனைகளைத் தருகிறார் என்பதை நிக்கொதேமு அறிந்துகொண்டதை, யோவான் 3ல் காண்கிறோம். இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னதிலிருந்து மறுபிறப்பையே கேட்கிறார் என்று அறிந்து கொண்டான் (வச. 4). புதிதாக வேண்டுமென்றால் அவன் (வச. 7) மறுபடியும் பிறந்தேயாக வேண்டும் என்றுணர்ந்தான்.

இந்த மாற்றம் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமெ ஏற்படுகிறது. அப்பொழுதுதான் “ பழையவைகள் எல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்பது நடக்கும். உங்களுக்கு ஒரு மாற்றம் தேவையா? உங்கள் விசுவாசத்தை இயேசுவின்மேல் வையுங்கள். அவர்தான் உங்கள் இருதயத்தை மாற்றி எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர்.

மற்றவரது நலன்கள்!

எனது நண்பனாகிய ஜெய்மி ஒரு பெரிய சர்வதேச நிறுவனத்தில் பணி புரிகிறான். அந்நிறுவனத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு மனிதன் அவனது மேஜைக்கு வந்து, பேச ஆரம்பித்தான். ஜெய்மிக்கு அங்கு என்ன வேலையென வினவினான். தனது வேலையைப் பற்றிக் கூறிய ஜெய்மி அவனது பெயரைக் கேட்டான். “என் பெயர் ரிக்” எனப் பதிலளித்தான் அவன்.

“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” ஜெய்மி கேட்டான்.

“ம்ம்! நான் இந்நிறுவனத்தின் உரிமையாளர்”

இந்த சாதாரணமான, தாழ்மையான உரையாடல்தான் உலகிலேயே மிகவும் பெரிய பணக்காரர்களில் ஒருவரோடு தனது அறிமுகம் என்று ஜெய்மி திடீரென்று புரிந்து கொண்டான்.

தன்னைத் தானே உயர்த்துவதும் பெருமைப்பட்டுக் கொள்ளுவதும் பெருகிப்போன இந்த நாட்களில் இந்தச் சிறிய சம்பவம் பவுல் பிலிப்பியர் நிருபத்தில் எழுதியதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒன்றையும் வாதினாலாவது வீண பெருமையினாலாவது செய்ய வேண்டாம்” (2:3). தங்களது நலனையல்ல பிறரது நன்மையைத் தேடுகிறவர்கள் பவுல் குறிப்பிடும் குணாதிசயத்தைப் பெற்றவர்கள்.

பிறரை நம்மைவிட மேன்மையானவர்களாக எண்ணும்போது (வச. 3) கிறிஸ்துவின் எளிமையை நாம் வெளிப்படுத்துகிறோம். ஊழியம் கொள்ளுபடி வராமல் ஊழியஞ்செய்யும்படி வந்த இயேசுவை நாம் பிரதிபலிக்கிறோம். (மாற். 10:45). அடிமையின் சுபாவத்தை நாம் ஏற்றுக்கொள்ளுகையில் (பிலி. 2:7) இயேசுவின் சிந்தையை நாம் பெறுகிறோம் (வச. 5).

இன்று நாம் பிறறோடு தொடர்புகொள்ளும்போது, நமக்கானவைகளை மட்டும் பராமல் பிறருக்கானவைகளையும் நோக்கக் கடவோம் (வச. 4).

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).