குடைக் கைப்பிடிபோல் வளைந்த மூங்கிலில் சிவப்பும் வெள்ளையும் கலந்த மிட்டாயை சுவைக்கும் பொழுது ஜெர்மானியர்களுக்கு ‘நன்றி சொல்லுங்கள்’ (Danke Schon).  ஏனென்றால், அது ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில்தான் முதலில் செய்யப்பட்டது. பாய்ன்செட்டியா செடியை ரசிக்கும் பொழுது மெக்சிக்கோவுக்கு “கிரேசியாஸ்: (GRACIAS) சொல்லுங்கள். அங்குதான் அது முதலில் வளர்ந்தது. “நோயெல்” என்ற வார்த்தையை பிரான்சு நாட்டிற்கு (merci beaucoup) மெர்சி பியூகேப் என்று சொல்லுங்கள். MISTILETOE இங்கிலாந்து நாட்டிற்கு கூரியதால் “சியர்ஸ்” என்றும் சொல்லூங்கள்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் சேர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் பாரம்பரியங்களைக் கிறிஸ்துமஸ் காலங்களில் கொண்டாடும்பொழுது, நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை நம்முடைய நல்ல, இரக்கமுள்ள அன்பான தேவனுக்கு உண்மை மனதுடனே செலுத்த வேண்டும். அவர்தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குக் காரணகர்த்தா.  ஏனென்றால், அவர்தான் பெத்லகேம் பாலகன் 2000 வருடங்களுக்கு முன் யூதேயாவிலுள்ள முன்னணையில் பிறந்தார். இந்த தெய்வீக ஈவை அறிவித்த தூதர்கள் “இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன். உங்களுக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11) என்றனர்.

மின்னிடும் கிறிஸ்துமஸ் மர விளக்குகளிலல்ல, பிரிக்கப்பட்ட பரிசுகளிலுமல்ல, தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்க வந்த இயேசு பாலனை (மத். 1:21) பார்க்கும் பொழுது மட்டுமே கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சி உண்டாகும். அவருடைய பிறப்பு பாரம்பரியங்களுக்கு அப்பாற்பட்டது. சொல்லிமுடியாத இந்த கிறிஸ்மஸ் பரிசிற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். நன்றி சொல்வதே கிறிஸ்துமஸின் உண்மையான மையக் கருபொருள்.