கம்பியில்லாமல் ரேடியோ தொடர்பு ஏற்படுத்த, ரெஜினால்ட் ஃபெசன்டன் பல வருடங்களாக முயன்று கொண்டிருந்தார். பிற விஞ்ஞானிகள், அவருடைய எண்ணங்கள் வித்தியாசமாகவும் வழக்கமான முறைகளுக்கு மாறுபட்டதாகவும் இருந்ததால் வெற்றி பெற மாட்டார் என்று சந்தேகித்தனர். ஆனால் 1906, டிசம்பர்  24ம் தேதியில், ரேடியோவில் இசையை ஒலிபரப்பிய உலகின் முதல் மனிதன் நான் என்று அறிவித்தார்.

எங்கு, வாழைப்பழங்கள் அறுவடையாகிறது, எங்கு விற்கவேண்டும் என்று தன் கப்பல்களுக்குத் தெரிவிக்க, யுனைட்டட் பழக் கம்பெனி, பன்னிரண்டு கப்பல்களில் ரேடியோ பொருத்தியிருந்தது. ஃபசன்டன் இந்தக் கம்பெனியோடு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். கிறிஸ்துமஸூக்கு முந்தின நாளில் ரேடியோ அறிவிப்பை கவனமாய்க் கேட்கச் சொல்லி இருந்தார். இரவு 9 மணிக்கு அவர் சத்தத்தைக் கப்பலிலுள்ளவர்கள் அனைவரும் கேட்டனர்.

பின் அவர் ஓர் நீண்ட இசைப் பாடலுக்குப் பின் தன் வயலினை எடுத்து “ஓ ஹோலி நைட்”
(O HOLY NIGHT) என்ற பாடலை இசைத்துக் கொண்டே பாடினார். கடைசியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, லூக்கா 2ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்து, பெத்லகேமில் பிறந்ததை தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்த பகுதியை வாசித்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெத்லகேம் மேய்ப்பர்களும் 1906ல் யுனைட்டெட் கம்பெனி கப்பல்களிலிருந்தவர்களும், அந்த இருண்ட இரவில் எதிர்பாராத நம்பிக்கையூட்டும் ஓர் செய்தியைக் கேட்டனர். இன்றும் அதே நம்பிக்கையூட்டும் செய்தியை தேவன் நமக்கும் சொல்லுகிறார். நமக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்… ஆண்டவராகிய கிறிஸ்து! (லூக். 2:11) நாமும் வானதூதர்களோடும், நமக்கு முன் சென்ற விசுவாசிகளோடும் சேர்ந்து, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி,” தேவனைத் துதிப்போம் (வச. 14).