ஆன்ட்ரு சீட்டில், ஓர் இளைஞனின் செல்போன் கடற்கரையில் காணாமற்போன போது, அது தொலைந்தே போயிற்றென்று நினைத்தார். ஆனால், ஒருவாராம் கழித்து கிளென் கெர்லி என்ற ஓர் மீனவர் அவரை போனில் அழைத்தார். அந்த மீனவர் 25 பவுண்ட் எடையுள்ள “காட்” (COD) மீனின் வயிற்றிலிருந்து அதைத் தான் எடுத்ததாகவும், காய்ந்தவுடன் அது வேலை செய்ததாகவும் அவரிடம் கூறினார்.

வாழ்க்கை என்பது நம்பமுடியாத நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்டவற்றில் ஒரு சில வேதாகமத்தில் காணப்படுகிறது. ஒரு நாள் வரிவசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து “உங்கள் போதகர் வரி செலுத்துகிறதில்லையா?” என்று கேட்டனர் (மத், 17,24). இதை இயேசு போதிக்கிற நேரமாக மாற்றினார். தான் ராஜா என்பதை பேதுரு அறிந்துகொள்ள விரும்பினார். ராஜாவின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியது அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, “ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து அதின் வாயைத் திறந்து பார் ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்” (வச. 25-36). இது இக்கதையின் நம்பமுடியாத நிகழ்ச்சியின் ஒரு பகுதி.

இங்கே இயேசு என்ன செய்கிறார்? இன்னும் சற்று தெளிவாகக் கூறினால், “இயேசு தேவனுடைய ராஜ்யத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” அநேகர் அவரை யார் என்று புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அவரை நம் வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும்பொழுது , நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம்.

வாழ்க்கையில் நமக்குப் பல தேவைகளுண்டு, அனால், அவை எல்லாலற்றையும் இயேசு நமக்கு அளிக்கிறார். முன்னாள் போதகர் டேவிட் பாம்போ, சென்னதுபோல, “நாம் இயேசுவுக்காக மீன்பிடிக்கும்போது, நம்முடைய எல்லாத் தேவைகளுக்கும் அவரை சார்ந்திருக்கலாம்.”