ஐரோப்பா பயணத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்தது எதுவென்றால், ஆங்காங்கே அமைந்துள்ள சிறப்புமிக்க பேராலயங்களைப் பார்வையிட்டதாகும். அவற்றின் பிரமிக்கச் செய்யும் அழகு “பரலோகத்திலிருப்பதைப் போல உணரச் செய்தது. அவற்றின் கட்டடக்கலை, கலை நுணுக்கம் மற்றும் எவற்றின் அடையாளமாக இந்த வியக்கச் செய்யும் கட்டடங்கள் எழுப்பப்பட்டனவோ அவை வார்த்தையால் விவரிக்க முடியாத, ஆச்சரியமான சிறப்புமிக்க அனுபவத்தைக் கொடுத்தது.

தேவனுடைய தனிச்சிறப்பையும், எல்லாவற்றையும் கடந்த அவருடைய மகிமையையும் குறித்து நாம் நினைவுகூறும்படியாக இந்த கட்டட அமைப்புகள் எழுப்பப்பட்டன என்ற உண்மையை நான் நினைக்கும் போது, நம் சிந்தனைகளிலும் இருதயத்திலும் தேவனுடைய மகத்துவத்தையும், மாட்சிமையையும் மீண்டும் நம் நினைவில் கொண்டு வருகின்றன என வியந்தேன், நாம் செய்ய வேண்டியதென்னவெனில் மனிதனின் சிறப்பான வானளாவிய கட்டட அமைப்புகளையும் தாண்டி, தேவன் உருவாக்கியவற்றின் மாட்சிமையைக் காண்பதேயேயாகும். வீண்மீன்கள் நிறைந்த இரவு வானத்தைப் பார்! அவருடைய வார்த்தையால் உருவாகியிருக்கும் இந்த அண்டத்தையும் பார்த்து, அவருடைய  வல்லமையை நினைத்துக்கொள். புதிதாகப் பிறந்த குழந்தையொன்றைக் கையிலெடுத்து தேவன் கொடுத்த அற்புதமான ஜீவனுக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். பனிபடர்ந்த அலாஸ்கா மலைத் தொடரையும், அல்லது லட்சக்கணக்கான தேவன் படைத்த உயிரினங்கள் அடங்கிய அட்லாண்டிக் சமுத்திரத்தையும், இத்தனை சுற்றுச் சூழலையும் இயக்குகின்ற அவருடைய வல்லமையையும் நினைத்துப் பார்.

மனிதன் வானளாவிய கட்டடங்களை உருவாக்கியதில் தவறில்லை. ஆனால், அவை நம்மை தேவனை நோக்கிப் பார்க்கத் தூண்ட வேண்டும். நம்முடைய உண்மையான புகழ்ச்சி தேவன் ஒருவருக்கே சொந்தம் என்பதால், “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும்; மகத்துவமும் உம்முடையவைகள்” (1 நாளா. 29:11) என்று நாம் சொல்லுவோம்.