நான் பணிபுரியும் அலுவலக கட்டடத்தின் வெளிப்புறமாக நான் நடந்து சென்ற போது, கான்கிரீட்
தள ஓடுகளில் ஏற்பட்ட சிறிய பிளவில் மிக அழகிய மலர் வளர்ந்திருப்பதைப் பார்த்து ஓடுகளில் அதிசயித்தேன். அது வளருவதற்கு ஏற்ற சூழல் இல்லாதிருந்த போதிலும் அந்தச் செடி தனக்கு ஒரு சிறிய பிடிமானம் கிடைத்ததைக் கொண்டு அந்த வறண்ட குறுகிய திறப்பில் செழித்து வளர்ந்துள்ளது. அந்த செடிக்கு மேல் பகுதியிலுள்ள குளிரூட்டியிலிருந்து (AC) நாள் முழுவதும் தண்ணீர் வழிந்துகொண்டிருந்ததை பின்னர் நான் கவனித்தேன். அந்தச் சுற்றுப்புறத்தில் வளருவதற்கு ஏற்ற சூழலில்லாத போதும், அந்த செடியானது தனக்குத் தேவையான உணவை மேலிருந்து வழிந்த நீரிலிருந்து பெற்றுக்கொண்டது.

கிறிஸ்தவ வாழ்வில் வளர்வது சில வேளைகளில் கடினமாகத் தோன்றலாம். ஆனால் நாம் தேவனோடு நம்மைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டோமேயாகில் தடைகளையெல்லாம் மேற்கொள்ள முடியும். நம்முடைய சூழ்நிலை, ஒருவேளை நமக்கு சாதகமற்ற சோர்வடையச்செய்யும் தடைகளாகத் தோன்றலாம். ஆனால் நாம் நம் தேவனோடுள்ள உறவில் தொடரும் போது அந்த தனிமையானச் செடியைப் போன்று செழித்திருக்கலாம். இதுவே அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவமும்கூட, மோசமான கஷ்டங்களையும் சவால்களையும் அவர் சந்திக்க நேரிட்டபோதும் (2 கொரி. 11:23-27) அவர் தளர்ந்து போகவேயில்லை. கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். “மேலும்” பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி. 3:12)

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு என்று சொல்லுகிறார் (4:13). எனவே நாமும் நமக்கு பெலன் தருகின்ற கிறிஸ்துவை பற்றிக்கொண்டு தொடருவோம்.