செப்டம்பர், 2020 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2020

அன்பில் வேரூன்றி

“அவ்வளவுத்தான் எடுக்கும்” மேகி சொன்னாள். அவள் பூச்செடியிலிருந்து ஒரு தண்டை வெட்டி, அதன் நுனியை தேனில் நனைத்து ஒரு உரம் நிரப்பப்பட்ட தொட்டியில் சொறுகினாள். இந்தப் பூக்களை பரப்பவும், ஒரு ஆரோக்கியமான செடியிலிருந்து பல செடிகளை எவ்வாறு உருவாக்குவது என்றும் எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் நான் மற்றவர்களோடு பூக்களை பகிர்ந்து கொள்ள முடியும். தேன் இளம் வேர்களை திடப்படுத்தும் என்று அவள் கூறினாள்.

அவள் வேலையை கவனித்துக்கொண்டிருந்த நான் ஆவிக்குரிய வேர்களை நிலைநாட்ட நமக்கு எந்த காரியங்கள் உதவும் என்று யோசித்தேன். நாம் முதிர்ச்சியடைந்த வலுமையான மற்றும் விசுவாசத்தில் செழித்து வளருகிற ஜனமாய் இருக்க எது உதவுகிறது? வாடிவிடுவதிலிருந்தோ அல்லது வளருவதிலிருந்தோ நம்மை தடுப்பது எது? எபேசியருக்கு “அன்பில் வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகி” (எபே. 3:17) என்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பு, நமக்கு பரிசுத்த ஆவியானவரை அளித்து நம்மை பலப்படுத்தும் தேவனிடத்திலிருந்து வருகிறது. கிறிஸ்து நம் இருதயத்தில் வாசம் செய்கிறார். நாம் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துக் கொள்ளும்போது, (வச. 18), நாம் முழுமையாக தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிரப்பப்படுவதால், தேவனின் பிரசன்னத்தினால் ஏற்படும் செழிப்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். (வச. 19).

ஆவிக்குரிய காரியங்களில் வளருவதற்கு தேவை -  தேவனின் அன்பில் வேரூன்றுவதும்,  நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற (வ 20) தேவனுக்கு நாம் பிரியமானவர்கள் என்ற சத்தியத்தை தியானிப்பதுமே. நம் விசுவாசத்திற்கு என்ன ஒரு வியக்கத்தக்க அஸ்திபாரம்!

பார்ப்பதற்கு கண்கள்

‘போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற’ என்ற அர்தத்தைக் கொண்ட அனமார்ஃபிக் கலையின் அற்புதத்தை கண்டுபிடித்தேன். முதலில் சீரற்ற பகுதிகளின் வகைப்படுத்தலாக தோன்றும் அனமார்ஃபிக் சிற்பம், ஒரு சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு பக்கத்தில் தொடர்ச்சியான செங்குத்தான வரிசையை ஒன்றுசேர்ந்து ஒரு புகழ்பெற்ற தலைவரின் முகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பக்கத்தில் கயிற்றின் தொகுப்பு ஒரு யானையின் வெளிப்புற உருவமாக மாறுகிறது. முற்றொரு கலைப்படைப்பான கம்பியில் தொங்கவிடப்பட்ட நூற்றுக்கணக்கான கருப்பு புள்ளிகள், சரியாக பார்க்கும்போது ஒரு பெண்ணின் கண்ணைப் போல் காட்சியளிக்கின்றன. அனமார்ஃபிக் கலையில், அதன் பொருள் வெளிப்படும் வரை அதை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தால் தான் விளங்கும்.

வரலாறு, கவிதை மற்றும் பல ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட வேதாகமம் சில நேரங்களில் புரிந்துக் கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது.  ஆனால் அதன் அர்த்தத்தை அறிந்துக் கொள்ள வேதவசனமே கற்றுத்தருகிறது. அதை ஒரு அனமார்ஃபிக் சிற்பமாக நடத்தி: வெவ்வேறு கோணங்களிலிருந்து கவனித்துப் பார்த்து ஆழமாக தியானிக்கவும்.

கிறிஸ்துவின் உவமைகள் இந்த வகையில் தான் செயல்படுகின்றன.  அவைகளைக் குறித்து அதிகமாக சிந்திக்க அக்கரை உள்ளவர்கள்  அதன் அர்த்தத்தை “பார்ப்பதற்க்கு கண்களைப்” பெற்றுக்கொள்ளுகிறார்கள். (மத். 13:10-16).  கர்த்தர் புத்தியை தந்தருளும்படியாய் தான் சொல்லுகிற காரியங்களை சிந்தித்துக்கொள்ள பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார். (2 தீமோ. 2:7). சங்கீதம் 119ம் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் படிப்பது –  வேதத்தை தியானிப்பது ஞானத்தையும் புத்தியையும் தரும். அதன் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள நம் கண்களைத் திறக்கும். (119:18, 97-99).

ஒரு உவமையை ஒரு வாரத்திற்கு தியானிப்பதும் ஒரு சுவிசேஷ புத்தகத்தை ஒரு அமர்விலேயே வாசிப்பதும் எப்படி இருக்கும் ? ஒரு வசனத்தை எல்லா கோணங்களிலிருந்தும் வாசிக்க நேரத்தை செலவிடுங்கள். ஆழமாய் தியானிக்கவும். வேதத்தை வாசிப்பதன் மூலமாக அல்ல, வேதத்தை தியானிப்பதின் மூலமாகவே நமக்கு வேத அறிவு கிடைக்கும்.

தேவனே, நாங்கள் பார்க்கும்படி எங்களுக்கு கண்களைத் தாரும்.

ஒருபோதும் போதாது

சந்திரனை வட்டமிட்ட முதல் விண்வெளி பயணத்தை ஃபிராங்க் போர்மேன் நடத்திச் சென்றார். அவருக்கு அது திருப்திகரமாய் இல்லை. போய் வருவதற்கு இரண்டு நாட்கள் எடுத்தது. ஃபிராங்குக்கு பயண நோய் வந்ததினால் இதை கைவிட்டுவிட்டார். முப்பது நிமிடங்கள் எடை இல்லாமல் இருந்தது நன்றாகவே இருந்தது என்று அவர் கூறினார். பிறகு அதற்கு பழக்கப்பட்டுவிட்டார். அருகில் சென்ற போது நிலவு மங்கியிருப்பதையும் குழி குழியாய் இருப்பதையும் கண்டார். அவரது குழுவினர் சாம்பல் நிற தரிசு நிலத்தை படமெடுத்த பின்னர் சலித்துவிட்டனர்.

இதற்கு துன்பு வேறு யாரும் போகாத இடத்திற்கு ஃபிராங்க் சென்றார். அது போதாததாயிருந்தது. இந்த உலகத்திற்கு வெளியே நடந்த அனுபவத்தால் அவர் விரைவில் சோர்வடைந்ததால் இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூமிக்குரிய எந்த அனுபவமும் நமக்கு இறுதியான மகிழ்ச்சியைத் தர முடியாது என்று பிரசங்கியை எழுதியவர் கவனித்தார். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை. கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை” (1:8). நாம் பரவசத்தின் தருணங்களை உணரலாம் ஆனால் அந்த உற்சாகம் தொய்ந்துப்போய் அடுத்த உணர்ச்சியூட்டும் காரியத்தை நாடுகிறோம்.

சந்திரனுக்குப் பின்னால் இருளிலிருந்து பூமி எழுவதைக் கண்ட காட்சி,  ஃபிராங்கிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாயிருந்தது. நீல மற்றும் வெள்ளை சுழல் பளிங்கு போல நம் உலகம் சூரிய ஒளியில் பிரகாசித்தது. அதே போல உண்மையான மகிழ்ச்சி நம்மேல் பிரகாசிக்கும் குமாரன் - நம்முடைய ஜீவன், நம் வாழ்வின் மூலாதாரணம், அன்பு, மற்றும் அழகிற்கு இறுதி ஆதாரமயிருக்கிற இயேசுவிடமிருந்து வருகிறது. நம்முடைய ஆழ்ந்த திருப்தி இந்த உலகத்தின் வெளியிலிருந்து வருகிறது. நம்முடைய பிரச்சனை? நாம் இங்கிருந்து சந்திரனுக்கு செல்லலாம், ஆனாலும் நாம் வெகு தூரம் செல்லவில்லை.

அலைந்து திரிவது

கால்நடை பண்ணைக்கு அருகில் வசித்து வந்த மைக்கேல் என்ற நகைச்சுவை நடிகர், மேய்ச்சலின் போது, மாடுகள் தன்னைப் போலவே எப்படி அலைந்து திரிகிறது என்பதை கவனித்தார். மாடு பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி நகர்ந்துக் கொண்டே இருக்கும். பண்ணையின் ஓரத்தில் ஒரு நிழல் மரத்தின் கீழ் பசுமையான புற்களை கண்டுபிடிக்கும். உடைந்துப்போன வேலிக்கு அப்பால் சுவையான பசுமையான ஒரு கொத்து இருந்தது. பின்னர் மாடு வேலிக்கு அப்பால் சென்று பிறகு சாலையிலிருந்தே வெளியேறக்கூடும். பின்னர் அது மெதுவாக தன் வழியிலிருந்து காணாமல் போய்விடும்.

இந்த சுற்றித் திரிகிற பிரச்சனை மாடுகளுக்கு மட்டும் இல்லை, ஆடுகளும் சுற்றித் திரிகின்றன, ஆனால் மனிதர்களும் வழியை விட்டு விலகுகிப் போகிற போக்குள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

இதனால் தான் வேதாகமத்தில் தேவன் நம்மை ஆடுகளோடு ஒப்பிடுகிறார். பொறுப்பற்ற சமரசங்கள் மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை எளிதாக எடுத்து நாம் அலைந்து திரிந்தும், வழியைவிட்டு விலகியும் விடுகிறோம். ஆனால், சத்தியத்தை விட்டு எவ்வளவோ விலகி சென்று விட்டோம் என்பதை நாம் கவனிக்கிறதில்லை.

பரிசேயர்களுக்கு, இயேசு காணாமல் போன ஆட்டின் கதையை கூறினார். தன்னிடமிருந்த தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை தேடிச் சென்ற மேய்ப்பனுக்கு அந்த ஒரு ஆடு மிகவும் மதிப்புள்ளதாய் இருந்தது. காணாமல் போன அதை அவன் கண்டுப்பிடித்த போது அவன் சந்தோஷப்பட்டான் (லூக். 15:6).

மனந்திரும்பி அவரிடம் வருபவர்களினிமித்தம் தேவனும் அப்படியே சந்தோஷப்படுவார். காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் (வ 6) என்று இயேசு கூறுகிறார். நம்மை பாவத்திலிருந்து மீட்கவும் பாரலோகம் சேர்க்கவும் தேவன் நமக்காக ஒரு இரட்சகரை அனுப்பினார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).