Archives: ஜனவரி 2020

கிருபையை செயலில் காட்டல்

“விபத்துகள் மரணத்தைக் கொண்டுவரும் போது, அல்லது காயங்களை ஏற்படுத்தும் போது, கிருபையைக் காட்டவும் அல்லது பழிவாங்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது, ஆனால் நான் கிருபையைக் காட்ட விரும்புகின்றேன்” என்றார், சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர். போதகர் எரிக் ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் மனைவி, ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டாள். மிகவும் களைப்படைந்தவராய் வீடு திரும்பிய ஒரு தீயணைப்பு வீரர், வாகனத்தை ஓட்டிய போது உறங்கி விட்டதால், இந்த விபத்து ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் சட்டப்படி, அவருக்கு மிக அதிகமான சிறைத்தண்டனையை வழங்கலாமா என போதகரைக் கேட்டனர். அந்த போதகரோ, தான் அதிகமாகப் பிரசங்கித்துவரும் மன்னிப்பை, அவருக்கு வழங்க தீர்மானித்தார். அதிலிருந்து, ஆச்சரியப்படும்படியாக, அந்த இருவரும் நண்பர்களாயினர்.

போதகர் எரிக், தன்னுடைய பாவங்கள் யாவற்றையும் மன்னித்த தேவனிடமிருந்து, தான் பெற்ற கிருபையை, பிறருக்கு வழங்கி, வாழ்ந்து காட்டினார். அவருடைய செயலின் மூலம், தீர்க்கதரிசி மீகாவின் வார்த்தைகளைப் பிரதிபலித்தார். மீகா, நம்முடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவனைப் போற்றுகிறார். (மீகா 7:18) தேவன் தன்னுடைய ஜனங்களின் பாவங்களை எவ்வளவு தூரம் மன்னிக்கிறார் என்பதை, மீகா தீர்க்கதரிசி, பார்க்கக் கூடிய அடையாளங்களால் காட்டுகின்றார். தேவன் “நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்” (வ.19) என்கின்றார். அந்த தீ அணைப்பாளர், அன்றைய தினம், விடுதலையை ஈவாகப் பெற்றார், அது அவரைத் தேவனிடம் கொண்டு வந்தது.

 நாம் எவ்வகையான துன்பங்களைச் சகித்தாலும், தேவன் அன்போடு, தம்முடைய  கரங்களை விரித்தபடி, தம்முடைய பாதுகாப்பிற்குள் அரவணைக்கும் படி, நம்மை வரவேற்கிறார். “அவர் கிருபை செய்ய விரும்புகிறார்” (வ.18). போதகர் எரிக் செய்ததைப்  போல, அவருடைய கிருபையையும், அன்பையும் நாம் பெறும் போது, நம்மைக் காயப்படுத்தினவர்களையும் மன்னிக்க பெலன் தருகின்றார்.

எதை நோக்கிச் செல்கின்றாய்?

வடக்குத் தாய்லாந்திலுள்ள ஓர் இளைஞர் கால்பந்து அணியினர், ஒரு குகையை ஆராயத் திட்டமிட்டனர். குகைக்குள் ஒரு மணி நேரம் செலவிட்ட பின், திரும்பினர். அவர்கள் நுழைவாயிலை அடைந்த போது, அங்கு வெள்ள நீர் நிரம்பியிருந்ததைக் கண்டனர். வெள்ள நீர் உயர, உயர அவர்களும் குகைக்குள்ளே  இன்னும் வெகு தூரம் சென்றனர். நாட்கள் கடந்தன, கடைசியாக, அவர்கள் குகைக்குள்ளே இரண்டு மைல்களுக்கப்பால் (நான்கு கிலோமீட்டர்) சிக்கிக் கொண்டனர். இரண்டு வாரங்களுக்குப் பின், அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். எப்படி அவர்கள் இந்த நம்பிக்கையற்ற இடத்தில் மாட்டிக்கொண்டனர் என்று அநேகர் ஆச்சரியப்பட்டனர். பதில்: ஒவ்வொரு அடியாக பின் தள்ளப்பட்டனர்.

தாவீது, தனக்கு உண்மையாயிருந்த போர்வீரனான உரியாவைக் கொன்ற போது, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய நாத்தான், அவனை எதிர்கொள்கின்றான். “கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகக்” (1 சாமு. 13:14) கண்ட ஒரு மனுஷன் எப்படி கொலைகாரனானான்? ஒவ்வொரு அடியாக, நடந்தது. தாவீது, ஒரே நாளில், ஒன்றுமில்லாமையிலிருந்து கொலைகாரனாகிவிடவில்லை. அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்பட்டான். கொஞ்சக்காலமாக, அவனுடைய ஒவ்வொரு தவறான தீர்மானமும், அவனை ஒரு தவறிலிருந்து, மற்றொரு தவறுக்குள் தள்ளியது. அது இரண்டாம் முறை பார்த்ததில் ஆரம்பித்தது. பின்னர் அது காமப்பார்வையாக மாறியது. அவன் தன்னுடைய அரச அதிகாரத்தை பயன் படுத்தி, பத்சேபாளை அழைக்கின்றான், அவள் கர்ப்பம் தரித்ததை மறைப்பதற்காக, யுத்தத்தில் முன்னணியிலிருக்கும் அவளுடைய கணவனை அழைத்தனுப்புகின்றான். தன்னுடைய படைகளெல்லாம் யுத்தத்திலிருக்கும் போது, தான் மட்டும் தன்னுடைய மனைவியைச் சந்திக்க விரும்பவில்லை, தாவீது அவனைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்.

நாம் கொலை குற்றத்திற்கு ஆளாவதும், குகைக்குள் அகப்பட்டுக்கொள்வதும் நம்முடைய சொந்த திட்டமில்லை. நாம் இயேசுவை நோக்கி செல்கின்றோமா அல்லது பிரச்சனையை நோக்கி செல்கின்றோமா என்பதே காரணம். பெரிய பிரச்சனைகள் ஒரே நாள் இரவில் உருவாவதில்லை. அவை நமக்குள் படிப் படியாக, ஒவ்வொரு அடியாக நுழைகின்றது.

நேரமுகாமைத்துவத்தின் இரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்

அது மாலைமங்கும் நேரம், நான் இன்னும் எனது கணணியில் எமது இணையத்தளத்திற்கு உடனடியாக தேவைப்படுகின்ற ஒரு கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருந்தேன். எனது மகன் தனது விளையாட்டுகாரை மிகசத்தமாக தரையில் உருட்டிக்கொண்டிருந்தான், அது எனக்கு அவனுடன் சேர்ந்து இன்று மாலை விளையாட எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதனை நினைவூ ட்டியது. அதுமட்டுமல்ல, எனது கணவரும் தங்கையும் வீடுதிரும்பும் முன்னர் இரவு உணவை திட்டமிட்டுத்தயார் செய்யவும்வேண்டும்.

செய்யவேண்டியதைக் குறித்த எனது நீண்டுக்கொண்டே செல்கின்ற பட்டியலின் அடுத்த காரியத்தைப் பார்ப்பதற்குப்பதிலாக எனது நண்பர்கள் அண்மையில் வாசித்த புத்தகத்தை குறித்தான அறிவிப்பை…

சுத்தமான பாத்திரங்கள்

“பகை, தானிருக்கின்ற பாத்திரத்தை அரித்து விடும்” என்றார் முன்னாள், சட்ட மன்ற மேலவை உறுப்பினரான ஆலன் சிம்ஸ்சன். ஜியார்ஜ் புஷ்ஷின் அடக்கத்தின் போது, அவர், தன்னுடைய நண்பனின் அன்பினை நினைவு கூர்ந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாற்பத்தி ஒன்றாம் ஜனாதிபதியான புஷ், தன்னுடைய தலைமைத்துவ பணியிலும், தனிப்பட்ட உறவுகளிலும் எந்த பகைமையையும் மனதில் வைத்துக் கொள்ளவேயில்லை, மாறாக நகைச்சுவையையும், அன்பையும் அணைத்துக் கொண்டார், என்றார்.

இந்த சட்ட மன்ற உறுப்பினரின் கருத்தை நானும் ஒத்துக் கொள்கின்றேன். உனக்கும் அப்படித்தானே? நான் பகையை எனக்குள் அடக்கிவைத்த போது, அது எவ்வளவு பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியது!

நாம் கோபத்தை அடக்கி வைத்தாலோ, அல்லது அதனைத் திடீரென வெளிப்படுத்தினாலோ, நமது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இருதயம் வேகமாகத் துடிக்கிறது, நம்முடைய ஆவி தொய்ந்து போகிறது, நம்முடைய பாத்திரம் அரிக்கப்படுகின்றது.

“பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்” என சாலமோன் ராஜா, நீதிமொழிகள் 10:12 ல் கூறுகின்றார். பகையினால் வரும் மோதல்கள், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த போட்டியாளர்களிடையே, இரத்தம் சிந்தும் அளவிற்கு சண்டைகளைக் கொண்டு வருகின்றது. இந்தப் பகை, பழிவாங்கும் எண்ணத்தைத் தூண்டிவிட்டு, ஒருவரையொருவர் இகழ்ந்து பேச வைக்கின்றதேயல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்காது.

மாறாக, தேவனுடைய அன்பு, எல்லாத் தவறுகளையும் மூடுகிறது, ஒரு திரையினால் மறைக்கிறது, மன்னிக்கிறது. அதற்காக நம் தவறுகளை கவனிக்கக் கூடாது என்பதாகவோ  அல்லது தவறு செய்பவருக்குத் துணை செய்வதாகவோ அல்ல. ஒருவர் தான் செய்த தவறை உணர் ந்து, உண்மையாய் மனம் வருந்தும் போது, நாம் அந்த தவறை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர், அதற்காக மனம் வருந்தவில்லையெனின், நம்முடைய உணர்வுகளை தேவனிடம் கொடுத்து விடுவோம். நம்மை அதிகமாக அன்பு செய்கிறவரை அறிந்திருக்கின்ற நாம், ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருப்போம், அன்பு திரளான பாவங்களை மூடும். (1 பேதுரு 4:8)

தேவன் தலையிடும் போது

“இந்தக் குழந்தை அருமையானது” (This Child is Beloved) என்ற தலைப்பில் வரும் கவிதையில், ஒரு அமெரிக்க போதகர், அவரை அவருடைய பெற்றோர், கருவிலேயே அழித்து விட எண்ணியும் அவர் பிறந்து விட்ட கதையை எழுதுகின்றார். அநேக எதிர்பாராத நிகழ்வுகள், அவரைக் கருவில் அழித்துவிடாதபடி தடுத்தது. கடைசியாக பெற்றோர், அக்குழந்தையை வரவேற்கத் திட்டமிட்டனர். தேவன் அவருடைய உயிரைப் பாதுகாக்க எண்ணினார் என்பதையறிந்த அவர், வருமானம் ஈட்டக் கூடிய தன்னுடைய எதிர்காலத்தை தள்ளிவிட்டு, முழு நேர ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இன்றைக்கு அவர், லண்டனிலுள்ள ஓர் ஆலயத்தில் உண்மையுள்ள போதகராகப் பணியாற்றுகின்றார்.

இஸ்ரவேலர்களின் சரித்திரத்தைப் பார்க்கும் போது, இந்த போதகரைப் போன்று, இவர்களின் கைவிடப்பட்ட நிலையின்போதும், தேவன் தலையிட்டுச் செயல் படுவதைக் காண்கின்றோம். அவர்கள், வனாந்திரத்தில் பிரயாணம் பண்ணி, மோவாப் எல்லையினருகில் வந்த போது, மோவாப்பின் ராஜா பாலாக் பார்க்கின்றான். அவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் பிற நாடுகளைக் கைப்பற்றியதையும் கண்ட போது, மிகவும் பயந்து, பிலேயாம் என்ற குறிசொல்கிறவனைத் தங்களுக்கு அமர்த்தி, இந்த எதிர்பராத கூட்டத்தினைச் சபிக்குமாறு கூறுகின்றான் (எண். 22:2-6).

ஆனால், வியத்தகு காரியம் அங்கு நடைபெற்றது. பிலேயாம், அவர்களைச் சபிக்கும் படி வாயைத் திறந்த போதெல்லாம், அவர்களை ஆசீர்வதித்தான், “ இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைப் பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது,” என்றான். மேலும், “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதுமில்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்;………தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்” (எண்.23:20-22). அவர்களுக்கு  எதிராக ஒரு யுத்தம் எழும்பிக் கொண்டிருப்பதைக்கூட அறியாத இஸ்ரவேலரை, தேவன் பாதுகாக்கின்றார்! 

நாம் பார்க்கின்றோமோ இல்லையோ,  இன்றைக்கும், தேவன் அவருடைய பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்மை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றழைக்கும் நம்முடைய ஆச்சரியமான தேவனை, நாம் நன்றியோடு ஆராதிப்போம்.