Archives: மார்ச் 2018

நன்றியுள்ள இருதயத்தை உருவாக்கல்

எங்களது திருமண நாளன்று நானும் மார்டியும் மகிழ்ச்சியோடு வாழ்விலும், தாழ்விலும், சுகவீனத்திலும், சுகத்திலும், செல்வத்திலும், வறுமையிலும் உண்மையாயிருப்போம்” என வாக்குக் கொடுத்தோம். ஒரு மகிழ்ச்சியான திருமண நாளில் இருண்ட கெட்ட நேரத்தையும், சுகவீனத்தையும், வறுமையையும் வாக்குறுதியில் சேர்த்திருப்பது சற்று விகர்ப்பமாகத் தோன்றலாம். ஆனால் அது, வாழ்க்கையென்பது கெட்ட நேரங்களையும் அடிக்கடி கொண்டு வரும் என்பதை முக்கியப்படுத்திக் காட்டுகின்றது.

எனவே, வாழ்வில் தவிர்க்க முடியாத கஷ்ட நேரங்களை நாம் சந்திக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பதை பவுல், ‘‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (1 தெச. 5:18) என வலியுறுத்துகின்றார். அதிகமான கஷ்டங்களை நாம் சந்திக்கின்ற போது, நன்றியுள்ள ஓர் ஆவியைக் கொண்டிருக்குமாறு தேவன் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நன்றியுணர்வு என்பது நம் தேவன் நல்லவர் என்பதில் பிறக்கிறது. அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 118:1) தேவன் நம்மோடிருந்து நம் துன்பங்களின் மத்தியில் நம்மை பெலப்படுத்துகின்றார் (எபி. 13:5-6). மேலும் அவர் நம்முடைய குணத்தை மாற்றி அவரைப் போலாக்க, நம்முடைய பெலவீனங்களை, அன்போடு பயன்படுத்துகின்றார் (ரோம. 5:3-4).

நம்முடைய வாழ்வு கடினமான வேளைகளைச் சந்திக்கும்போது நாம் நன்றியோடிருக்கத் தேர்ந்து கொண்டு, தேவன் நல்லவர், அவர் நம்முடைய போராட்டங்களைக் கடந்து செல்ல பெலனளிக்கிறார் என்று நம்பி நம் கவனத்தை அவர் மீது வைப்போம். சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் பாடுவோம், ‘‘கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபையென்றுமுள்ளது” (சங். 118:29).

வீட்டிற்கு கடிதங்கள்

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் புதிதாக சேர்ந்தோர், தங்கள் வீடுகளை விட்டு வெகு தொலைவில் பயிற்சி பெற்ற போது, தாங்கள் எதிர் நோக்கிய சவால்களை எப்படி வெற்றியாகச் சமாளித்தனர் என்பதை நகைச்சுவையோடு கடிதமாக எழுதச் செய்தனர். ஓர் இளைஞன் தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் அங்கு தடுப்பு ஊசி போட்ட செயலை அற்புதமாக மிகைப்படுத்தி விளக்கியிருந்தான். இரண்டு மருத்துவ அதிகாரிகள் எங்களை ஈட்டி இணைக்கப்பட்ட கயிறுகளோடு வந்து, எங்களை விரட்டிப் பிடித்து, இழுத்துச் சென்றனர். எங்களை தரையோடு சேர்த்து அசையமுடியாதபடி செய்தனர், இரு புயங்களிலும் ஈட்டியைக் குத்தினர் என்றெழுதியிருந்தான்.

மற்றொரு இராணுவ வீரர் அந்த நகைச்சுவை தன்னை இவ்வளவு தூரம் தான் கொண்டுவர இயலும் என்று கண்டுகொண்டார். அப்பொழுது அவருக்கு ஒரு வேதாகமம் கொடுக்கப்பட்டது. “நான் அதனை மிகவும் நேசித்து ஒவ்வோர் இரவும் வாசித்தேன்” என்று எழுதுகின்றார். ‘‘நான் ஒரு வேதாகமத்திலிருந்து இவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் என்பதை அதுவரை உணராதிருந்தேன்” என்று எழுதியிருந்தார்.

வெகு நாட்களுக்கு முன்பு யூதர்கள், அநேக வருடங்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்த பின் தங்கள் நாட்டிற்குத் திரும்புகின்றனர். அப்பொழுது அவர்களோடு பிரச்சனைகளும் வந்தன. அவர்கள் எருசலேமின் சுற்றுச் சுவரை கட்டியெழுப்பப் போராடிய போது, எதிரிகளிடமிருந்து எதிர்ப்பையும், பஞ்சத்தையும், அவர்களுடைய பாவத்தின் விளைவையும் எதிர் கொண்டனர். அவர்களுடைய துன்பங்களின் மத்தியில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு நேராகத் திரும்பினர். அவர்கள் கற்றுக் கொண்டதைக் குறித்து ஆச்சரியப்பட்டனர். ஆசாரியர்கள் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தபோது, ஜனங்கள் கண்ணீர் விட ஆரம்பித்தனர் (நெ. 8:9). அத்தோடு அவர்கள் ஆறுதலையும் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது அதிபதியான நெகேமியா, ஜனங்களிடம் விசாரப்பட வேண்டாம்; “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (வச. 10) என்றார்.

நாம் தேவனிடமிருந்து வார்த்தைகளைப் பெறும்படி காத்திருந்து, கஷ்டப்பட தேவையில்லை. வேதாகமத்தில் அவருடைய குணாதிசயங்களையும், அவருடைய மன்னிப்பையும் அவருடைய ஆறுதலையும் குறித்துப் படிக்கின்றோம். நாம் வேதத்தை வாசிக்கும் போது தேவனுடைய ஆவியானவர் அந்தப் பக்கங்களில் நம்மோடு பேசுவதைப் பார்த்து வியந்து போவோம்.

மென்னோசை வார்த்தைகள்

ஒரு மனிதன் தன்னுடைய விமானத்தின் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது, அமைதியற்ற நிலையில் கால்களை ஆட்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய கண்கள் விமானத்தின் ஜன்னலைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தன. பின்னர் அவன் தன் கண்களை மூடி, தன்னை அமைதிப்படுத்தும்படி பெருமூச்செடுத்தான். ஆனால், இவையொன்றும் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை. விமானம் மேலேறி பறந்தபோது, அவன் மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, தன் கரத்தை அவன் புயத்தின் மீது வைத்து, அவனுடைய மன அழுத்தத்திலிருந்து அவனைத் திருப்பும்படியாக, மெதுவாக அவனோடு உரையாட ஆரம்பித்தாள். ‘‘உன்னுடைய பெயரென்ன?” ‘‘நீ எங்கேயிருந்து வருகிறாய்?” “நமக்கு எல்லாம் சரியாகிவிடுவோம்”, “நீ நன்றாக இருக்கின்றாய்” என்பன அவளுடைய மென்மையான வார்த்தைகள். அவனுடைய நடத்தையால் அவள் எரிச்சலடைந்திருக்கலாம் அல்லது அவனை அவள் உதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அவனைத் தொட்டு அவனோடு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டாள். இது ஒரு சிறிய காரியம்தான். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் இறங்கிய போது, எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி” என்று கூறினான்.

இத்தகைய இளகிய மனதுடைய செயல்களைப் பார்ப்பது அரிது. அநேகருக்கு இரக்கம் என்பது தானாக வருவதில்லை. நம்முடைய முதல் கவனம் எப்பொழுதும் நம்மைப் பற்றியேயிருக்கும். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ‘‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயுமிருங்கள்” என்கிறார். (எபே. 4:32) இக்குணம் ஒவ்வொருவரையும் சார்ந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது தாம் பெற்றுக் கொண்ட புது வாழ்வில் ஆவியானவர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார். ஆவியானவர் நம்முடைய எண்ணங்களையும் நடத்தையையும் புதிப்பிக்கும் போது நாம் இரக்க குணத்தைப் பெற்றுக் கொள்கிறோம் (வச. 23).

இரக்கத்தின் தேவன் நம் இருதயங்களில் கிரியை செய்து, நம்முடைய மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளால் பிறர் வாழ்வைத் தொடும்படி நம்மில் செயல்படுகிறார்.

அதிசயங்களின் மீது கவனம்

சிலர் இவ்வுலகை, அதில் நடக்கும் தவறுகளை மட்டும் பார்க்கும்படியான பார்வையுடையவர்கள். டிவிட் ஜோன்ஸ் என்பவர் உலக புவியியல் படம் எடுப்பவர். உலகில் உள்ள நல்லவற்றைப் படம் பிடித்துக் காட்டி மகிழக் கூடியவர், அதனையே தன் தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் காத்திருந்து கவனித்து ஓர் ஒளிக் கற்றையை அல்லது ஏற்கனவே இருக்கின்றவற்றில் திடீரெனத் தோன்றும் ஓர் அதிசயத்தையோ படம் எடுக்கின்றார். அவர் தன் புகைப்பட கருவியை சாதாரண மக்களின் முகத்தில் வெளிப்படும் அழகையும் இயற்கையின் அழகையும் கண்டு கொள்ள பயன்படுத்துகின்றார்.

யாரேனும் இவ்வுலகில் நடக்கும் அநியாயங்களைக் கவனிக்க வேண்டியவரென்றால் அது யோபுவே. தனக்கு மகிழ்ச்சி தந்தவற்றையெல்லாம் இழந்த பின், அவனுடைய நண்பர்கள் கூட அவனைக் குற்றப்படுத்தினர். அவன் தன் பாவங்களை மறைப்பதாலேயே கஷ்டப்படுவதாக அவர்களெல்லாருடைய குரலும் ஒன்று சேர்ந்து அவனைக் காயப்படுத்தினது. யோபு பரலோகத்தை நோக்கிக் கதறிய போதும், தேவனும் அமைதியாயிருந்தார்.

கடைசியாக பெருங்காற்றின் சுழற்சியின் நடுவே, இருண்ட புயலின் மத்தியில் தேவன் யோபுவிடம், அவனுடைய ஞானத்திற்கும் வல்லமைக்கும் அப்பாற்பட்ட இயற்கையின் அதிசயங்களைப் பார்க்கும்படி சொல்கின்றார் (யோபு 38:2-4).

இப்பொழுது தேவன் நம்மிடம் கேட்கிறார். இயற்கையாக நடைபெறும் ஒரு நாய் அல்லது பூனையின் வழியையோ, அல்லது அசைந்தாடும் இலை, புல்லின் ஓர் இலையின் அசைவையோ அறிய முடியுமா? ஓர் ஒளிக்கற்றை அல்லது ஒரு நிகழ்வின் திருப்பம் ஆகியவற்றை அறிய முடியுமா? நம்முடைய துன்பத்தின் மத்தியிலும் நம்மோடிருக்கும் நம்மைப் படைத்தவரின் மனதையும் இருதயத்தையும் அறிய முடியுமா?

குணப்படுத்தும்படி வெளிப்படுத்துதல்

நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய தந்தை, இதுவரை விவசாயம் பண்ணப்படாத வயல்களை உழுது கொண்டிருந்ததைக் கவனித்தேன். முதல் முறை உழும்போது அக்கருவியில் பெரிய கற்கள் பெயர்ந்து வரும் அவற்றை என் தந்தை சுமந்து, எடுத்துப் போடுவார். அவர் மீண்டும், மீண்டும் அந்த வயலை உழுது, மணலை நன்கு உடைத்து விடுவார். ஒவ்வொரு முறை உழும் போதும் அந்த கருவியில் சில கற்கள் வந்து சேரும். அவற்றை அவர் எடுத்துப் போடுவார். இவ்வாறு பலமுறை அந்த வயலை உழுவதைத் தொடர்ந்தார்.

கிருபையில் வளர்தலும் இத்தகைய உழுதலைப் போன்றதே. நாம் முதல் முறை விசுவாசியான போது, பெரிய பாவங்கள் நமக்கு வெளிப்படுத்தப்படும். நாம் அவற்றை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்வோம். வருடங்கள் செல்லும் போது, தேவ வார்த்தைகள் நமக்குள் செயல்பட்டு ஆழமாகச் செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் மற்ற பாவங்களையும் வெளிக் கொண்டு வருவார். ஆவிக்கு விரோதமான பாவங்கள் முன்பு அவை தவறென்றே தோன்றாதவை, சிறிய முக்கிய மற்றதாகத் தோன்றிய குற்றங்கள், யாவும் இப்பொழுது அருவருப்பாகவும், நாசகரமான செயல்களாகவும், அணுகுமுறைகளாகவும் தோன்றுகின்றன. பெருமை, சுயநலம், குறைகூறல், சிறுபிள்ளைத்தனம், பொறாமை, சிறிய காரியங்களைப் பெரிதுபடுத்துதல், கெட்ட எண்ணம், தன்னை முக்கியப்படுத்தல், தனக்கு யாவரும் உதவ வேண்டுமென எதிர்பார்த்தல் போன்ற சிறிய தவறுகளையும் தேவன் வெளிக் கொணர்வார்.

தேவன் ஒவ்வொரு பாவத்தையும் வெளிப்படுத்தி, அதை எடுத்துப் போடுவார். தேவன் குணப்படுத்துவதற்காக வெளிப்படுத்துகிறார். தீங்கு விளைவிக்கக் கூடிய, மறைந்திருக்கும் அணுகுமுறைகள் வெளியே வரும் போது, சங்கீதக்காரன் சொல்வது போல நாமும் ஜெபிக்கலாம், ‘‘கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்” (சங். 25:11).

தாழ்மையோடு தெரியப்படுத்துதல், வேதனையுடையதாக இருந்தாலும் அது நம் ஆன்மாவிற்கு நல்லது. ‘‘அவர் பாவிகளுக்கு அவர்களின் வழியைத் தெரிவிக்கின்றார்” இதுவே அவருடைய செயலாகும். அவர் சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார் (வச. 8-9).