ஒரு மனிதன் தன்னுடைய விமானத்தின் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது, அமைதியற்ற நிலையில் கால்களை ஆட்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய கண்கள் விமானத்தின் ஜன்னலைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தன. பின்னர் அவன் தன் கண்களை மூடி, தன்னை அமைதிப்படுத்தும்படி பெருமூச்செடுத்தான். ஆனால், இவையொன்றும் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை. விமானம் மேலேறி பறந்தபோது, அவன் மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, தன் கரத்தை அவன் புயத்தின் மீது வைத்து, அவனுடைய மன அழுத்தத்திலிருந்து அவனைத் திருப்பும்படியாக, மெதுவாக அவனோடு உரையாட ஆரம்பித்தாள். ‘‘உன்னுடைய பெயரென்ன?” ‘‘நீ எங்கேயிருந்து வருகிறாய்?” “நமக்கு எல்லாம் சரியாகிவிடுவோம்”, “நீ நன்றாக இருக்கின்றாய்” என்பன அவளுடைய மென்மையான வார்த்தைகள். அவனுடைய நடத்தையால் அவள் எரிச்சலடைந்திருக்கலாம் அல்லது அவனை அவள் உதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அவனைத் தொட்டு அவனோடு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டாள். இது ஒரு சிறிய காரியம்தான். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் இறங்கிய போது, எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி” என்று கூறினான்.

இத்தகைய இளகிய மனதுடைய செயல்களைப் பார்ப்பது அரிது. அநேகருக்கு இரக்கம் என்பது தானாக வருவதில்லை. நம்முடைய முதல் கவனம் எப்பொழுதும் நம்மைப் பற்றியேயிருக்கும். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ‘‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயுமிருங்கள்” என்கிறார். (எபே. 4:32) இக்குணம் ஒவ்வொருவரையும் சார்ந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது தாம் பெற்றுக் கொண்ட புது வாழ்வில் ஆவியானவர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார். ஆவியானவர் நம்முடைய எண்ணங்களையும் நடத்தையையும் புதிப்பிக்கும் போது நாம் இரக்க குணத்தைப் பெற்றுக் கொள்கிறோம் (வச. 23).

இரக்கத்தின் தேவன் நம் இருதயங்களில் கிரியை செய்து, நம்முடைய மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளால் பிறர் வாழ்வைத் தொடும்படி நம்மில் செயல்படுகிறார்.