சிலர் இவ்வுலகை, அதில் நடக்கும் தவறுகளை மட்டும் பார்க்கும்படியான பார்வையுடையவர்கள். டிவிட் ஜோன்ஸ் என்பவர் உலக புவியியல் படம் எடுப்பவர். உலகில் உள்ள நல்லவற்றைப் படம் பிடித்துக் காட்டி மகிழக் கூடியவர், அதனையே தன் தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் காத்திருந்து கவனித்து ஓர் ஒளிக் கற்றையை அல்லது ஏற்கனவே இருக்கின்றவற்றில் திடீரெனத் தோன்றும் ஓர் அதிசயத்தையோ படம் எடுக்கின்றார். அவர் தன் புகைப்பட கருவியை சாதாரண மக்களின் முகத்தில் வெளிப்படும் அழகையும் இயற்கையின் அழகையும் கண்டு கொள்ள பயன்படுத்துகின்றார்.

யாரேனும் இவ்வுலகில் நடக்கும் அநியாயங்களைக் கவனிக்க வேண்டியவரென்றால் அது யோபுவே. தனக்கு மகிழ்ச்சி தந்தவற்றையெல்லாம் இழந்த பின், அவனுடைய நண்பர்கள் கூட அவனைக் குற்றப்படுத்தினர். அவன் தன் பாவங்களை மறைப்பதாலேயே கஷ்டப்படுவதாக அவர்களெல்லாருடைய குரலும் ஒன்று சேர்ந்து அவனைக் காயப்படுத்தினது. யோபு பரலோகத்தை நோக்கிக் கதறிய போதும், தேவனும் அமைதியாயிருந்தார்.

கடைசியாக பெருங்காற்றின் சுழற்சியின் நடுவே, இருண்ட புயலின் மத்தியில் தேவன் யோபுவிடம், அவனுடைய ஞானத்திற்கும் வல்லமைக்கும் அப்பாற்பட்ட இயற்கையின் அதிசயங்களைப் பார்க்கும்படி சொல்கின்றார் (யோபு 38:2-4).

இப்பொழுது தேவன் நம்மிடம் கேட்கிறார். இயற்கையாக நடைபெறும் ஒரு நாய் அல்லது பூனையின் வழியையோ, அல்லது அசைந்தாடும் இலை, புல்லின் ஓர் இலையின் அசைவையோ அறிய முடியுமா? ஓர் ஒளிக்கற்றை அல்லது ஒரு நிகழ்வின் திருப்பம் ஆகியவற்றை அறிய முடியுமா? நம்முடைய துன்பத்தின் மத்தியிலும் நம்மோடிருக்கும் நம்மைப் படைத்தவரின் மனதையும் இருதயத்தையும் அறிய முடியுமா?