நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய தந்தை, இதுவரை விவசாயம் பண்ணப்படாத வயல்களை உழுது கொண்டிருந்ததைக் கவனித்தேன். முதல் முறை உழும்போது அக்கருவியில் பெரிய கற்கள் பெயர்ந்து வரும் அவற்றை என் தந்தை சுமந்து, எடுத்துப் போடுவார். அவர் மீண்டும், மீண்டும் அந்த வயலை உழுது, மணலை நன்கு உடைத்து விடுவார். ஒவ்வொரு முறை உழும் போதும் அந்த கருவியில் சில கற்கள் வந்து சேரும். அவற்றை அவர் எடுத்துப் போடுவார். இவ்வாறு பலமுறை அந்த வயலை உழுவதைத் தொடர்ந்தார்.

கிருபையில் வளர்தலும் இத்தகைய உழுதலைப் போன்றதே. நாம் முதல் முறை விசுவாசியான போது, பெரிய பாவங்கள் நமக்கு வெளிப்படுத்தப்படும். நாம் அவற்றை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்வோம். வருடங்கள் செல்லும் போது, தேவ வார்த்தைகள் நமக்குள் செயல்பட்டு ஆழமாகச் செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் மற்ற பாவங்களையும் வெளிக் கொண்டு வருவார். ஆவிக்கு விரோதமான பாவங்கள் முன்பு அவை தவறென்றே தோன்றாதவை, சிறிய முக்கிய மற்றதாகத் தோன்றிய குற்றங்கள், யாவும் இப்பொழுது அருவருப்பாகவும், நாசகரமான செயல்களாகவும், அணுகுமுறைகளாகவும் தோன்றுகின்றன. பெருமை, சுயநலம், குறைகூறல், சிறுபிள்ளைத்தனம், பொறாமை, சிறிய காரியங்களைப் பெரிதுபடுத்துதல், கெட்ட எண்ணம், தன்னை முக்கியப்படுத்தல், தனக்கு யாவரும் உதவ வேண்டுமென எதிர்பார்த்தல் போன்ற சிறிய தவறுகளையும் தேவன் வெளிக் கொணர்வார்.

தேவன் ஒவ்வொரு பாவத்தையும் வெளிப்படுத்தி, அதை எடுத்துப் போடுவார். தேவன் குணப்படுத்துவதற்காக வெளிப்படுத்துகிறார். தீங்கு விளைவிக்கக் கூடிய, மறைந்திருக்கும் அணுகுமுறைகள் வெளியே வரும் போது, சங்கீதக்காரன் சொல்வது போல நாமும் ஜெபிக்கலாம், ‘‘கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்” (சங். 25:11).

தாழ்மையோடு தெரியப்படுத்துதல், வேதனையுடையதாக இருந்தாலும் அது நம் ஆன்மாவிற்கு நல்லது. ‘‘அவர் பாவிகளுக்கு அவர்களின் வழியைத் தெரிவிக்கின்றார்” இதுவே அவருடைய செயலாகும். அவர் சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார் (வச. 8-9).