சிறந்த மருந்து
கானாவிலுள்ள அக்காரா நகரில் நடந்த போக்குவரத்து சண்டைகளுக்கு, வாடகைக் கார் (taxi) மற்றும் சிற்றுந்து (mini bus) ஓட்டும் வாகன ஓட்டிகள் மத்தியில் காணப்பட்ட கவனமற்ற முறையில் காரை ஓட்டுதல், வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் எரிச்சல், மேலும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற செயல்களே காரணங்களாக இருந்தன. ஆனால், போக்குவரத்தில் நான் கண்ட ஒரு நிகழ்ச்சி வேறுபட்ட விளைவை உண்டுபண்ணினது. ஒரு வாடகைக்காரை கவனமற்று ஓட்டிவந்த ஓட்டுநர் கிட்டத்தட்ட ஒர் பேருந்தின்மேல் மோதி விட்டான். அந்தப் பேருந்து ஓட்டுநர் கோபப்பட்டு வாடகைக் கார் ஓட்டுநரை சத்தமாக திட்டப்போகிறான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, முகத்தில் ஏற்பட்ட கோப உணர்வை மாற்றி தவறுபுரிந்த வாகன ஓட்டியைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் சிரித்தான். அந்தச்சிரிப்பு ஆச்சரியமான விளைவுகளை உண்டுபண்ணினது. அந்த வாடகைக்கார் ஓட்டுநரும் பதிலுக்கு அவனது கைகளை உயர்த்தி, மன்னிப்பு கேட்டு, சிரித்துவிட்டு நகர்ந்து சென்றான். இறுக்கமான சூழ்நிலை தளர்ச்சி அடைந்தது.
சிரிப்பு, நமது மூளையில் ஆச்சரியமான வேதிமாற்றங்களை உண்டுபண்ணுகிறது. நாம் சிரிக்கும்பொழுது, நமது மூளையில் எண்டார்வின் (endorphin ) என்ற வேதிப்பொருள் செலுத்தப்படுகிறது. அது நமது சரீரப்பிரகாரமான சோர்வை தணிக்கும் சக்தி உடையது. சிரிப்பு இறுக்கமான சூழ்நிலையை மாற்றி அமைப்பதோடு, நமக்கு உள்ளாக இருக்கும் மன இறுக்கத்தையும் தளர்வுறச் செய்கிறது. நமது உணர்வுகள் நம்மை மட்டும் அல்லாது நம்மைச் சுற்றியுள்ள பிறரையும் பாதிக்கிறது. “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து,” (எபே. 4:31–32) என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது.
கோபமோ, மன இறுக்கமோ அல்லது கசப்பான உணர்வுகளோ நமக்கும் தேவனுக்கும், நமக்கும் பிறருக்கும் இடையே உள்ள உறவைப் பாதிப்பதாக இருந்தால் நம்முடைய சொந்த சந்தோஷத்திற்கும், உடல் நலத்திற்கும் “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என்பதை நினைவு கூருவது நல்லது.
சிறைப்பட்டவர்களை விடுவித்தல்
ஜார்ஜியாவில், சாவன்னாவில் உள்ள வலிமை மிக்க எட்டாவது விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்கு நானும், என் மனைவியும் சென்றபொழுது, அங்கு ஜெர்மன் தேசத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகளின் பாசறைகளை மறுபடியும் உருவாக்கி இருந்ததைப் பார்த்தோம். அதில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த போர்க்கைதிகளின் துயரங்களை நானும், என் மனைவியும் பார்த்தபொழுது, மிகவும் அதிகமாக தொடப்பட்டோம். மார்லினின் தகப்பனார், ஜிம் வலிமைமிக்க எட்டாவது விமானப்படையில் சேவை செய்திருந்தார். இந்த “வலிமையான எட்டு” என்ற அந்த விமானப்படை, இரண்டாம் உலகப்போரின் போது அநேகமுறை ஐரோப்பாவில் பறந்து சென்றுள்ளது. அந்தப்போரில், அந்த எட்டாம் விமானப்படையைச் சேர்ந்த 47000க்கும்மேற்பட்ட வீரர்கள் காயப்பட்டார்கள். 26000க்கும் மேற்பட்ட வீரர்கள் மரித்துவிட்டார்கள். ஜிம்மும் சுடப்பட்டு போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். காட்சிப் படுத்தப்பட்டவைகளின் ஊடாக நாங்கள் நடந்து சென்றபொழுது, ஜிம்மும், அவருடன் இருந்த மற்றக்கைதிகளும் விடுதலையாக்கப்பட்ட அந்த நாளில், அவர்கள் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியை, ஜிம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தோம்.
ஒடுக்கப்பட்டவர்கள், சிறைப்பட்டவர்களின் விடுதலையைக் குறித்து தேவன் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்று சங்கீதம் 146 அறிவிக்கின்றது. “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” என்று அவரைப்பற்றி சங்கீதக்காரன் விளக்குகிறான் (வச. 7). துதித்துப் போற்றுவதற்கு இவையே காரணமாக உள்ளது. ஆனால், விடுதலைகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த விடுதலை, நாம் நமது குற்ற உணர்விலிருந்தும், வெட்கத்திலிருந்தும் பெறும் விடுதலையேயாகும். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு கூறியது ஆச்சரியமில்லை.
கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நாம் நமது பாவச்சிறையிலிருந்து விடுபட்டு, மன்னிப்பினால் மட்டுமே கிடைக்கக்கூடிய, தேவன் அருளும் மகிழ்ச்சி, அன்பு, விடுதலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுகிறோம்.
ஒருவரும் அந்நியரல்லை!
கானாவில் நான் சிறுவனாக ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து வந்தேன். அங்கு வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் “உணவு வேளை, சிநேகிதர்கள் வரவேண்டாம்” என்ற முதுமொழி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனென்றால் அங்கு உணவு கிடைப்பதில் மிகவும் கஷ்டமான காலமது. ஆகவே உணவு உண்ணும் வேளையில் ஒருவரது வீட்டிற்குச் செல்வது மரியாதை அற்ற செயல் என்று கருதினார்கள். அந்த முதுமொழி அயலகத்தாருக்கும், அந்நியருக்கும் பொருந்தும்.
சிறிதுகாலம் நான் பிலிப்பைன்ஸிலும் வாழ்ந்து வந்தேன். அங்கு உணவு வேளையில், முன்னறிவிப்பு எதுவுமின்றி நீங்கள் சென்றுவிட்டாலும், விருந்தளிப்பவருக்கு போதுமான அளவு உணவு இல்லாதபொழுதும், அவர்களுக்குள்ள உணவை நீங்களும் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்துவார்கள். சில காரணங்களால் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டபொழுது, அவர்களது கலாச்சாரத்தை காத்துக்கொள்வதற்காக தேவன் சில சிறப்பான கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் கட்டளைகள் - தேவனுடைய கட்டளைகளாக இருந்தாலும், மனிதர்களது உள்ளத்தை ஒருக்காலும் மாற்ற இயலாது. ஆகவே மோசே, “உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்” (உபா. 10:16) என்று கூறினார். அந்த சவாலை மோசே, இஸ்ரவேல் மக்களின் முன்வைத்தவுடன், அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த அந்நிய தேசத்தாரை அவர்கள் நடத்தி வந்த விதத்தைப்பற்றிக் கூறினார். “அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரை சிநேகிப்பீர்களாக” (உபா. 10:18–19) என்று கூறினார்.
இஸ்ரவேல் மக்கள் “தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமான” (உபா. 10:17) தேவனை சேவித்து வந்தார்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த இஸ்ரவேலரின் கலாச்சாரத்திற்கு வேறு அந்நியர்களை நேசிப்பதின் மூலம் மட்டும் தேவனோடு அவர்களுக்குள்ள உறவை வெளிக்காண்பிக்க வேண்டும்.
தேவனுடைய இந்த குணாதிசயத்தை சித்தரிக்கும் இந்தக்காரியம், இன்று நமக்கு என்ன கற்பிக்கிறது? நமது உலகில் ஒதுக்கப்பட்டவர்கள், தேவை உள்ளவர்களுக்கு நாம் தேவனுடைய அன்பை எவ்வாறு காண்பிக்க முடியும்?
தேவனின் நினைப்பூட்டுதல்கள்
எனது சிநேகிதன் பாப் ஹார்னர் “நினைப்பூட்டுவதில் தலைசிறந்தவர்” இயேசு என்று குறிப்பிடுவார். அவர் மிகவும் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் நாம் மிகவும் சந்தேகப்படுகிறவர்களாகவும், மறக்கும் தன்மையுடையவர்களாகவும் இருக்கிறோம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, உதவிதேடி அவரிடம் வந்த மக்களின் தேவைகளை அவர் எத்தனையோ முறை சந்தித்திருந்தாலும், அவரது முதன்மைச் சீடர்களே, அவர்களது தேவைகள் சந்திக்கப்படாமல் இருந்து விடுமோ, என்று பயந்தார்கள். அநேக அற்புதங்களை அவர்கள் கண்டிருந்த பின்னும், கர்த்தர், அவர்கள் நினைவு கூர வேண்டுமென்று கருதிய முக்கியமான காரியங்களை அவர்கள் புரிந்துகொள்ள தவறி விட்டார்கள்.
அவர்கள் கலிலேயா கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, மீதியான அப்பங்களை கொண்டுவர மறந்து போனதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். “நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவு கூராமலுமிருக்கிறீர்களா?” (மாற். 8:17–18) என்று இயேசு அவர்களிடம் கேட்டார். ஐந்து அப்பங்களைக்கொண்டு 5000 பேரை போஷித்தபின், மீதமான துணிக்கைகளை அவர்கள் 12 கூடை நிறைய சேகரித்ததை அவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். ஏழு அப்பங்களைக் கொண்டு 4000 பேரை போஷித்தபின், மீதமுள்ள துணிக்கைகளால் ஏழு கூடைகளை நிரப்பினார்கள் என்று கூறி “நீங்கள் இன்னமும் உணராதிருப்பது எப்படி” (வச. 21) என்று அவர்களிடம் கூறினார்.
மக்களது சரீரப்பிரகாரமான தேவைகளை சந்தித்த செயல், அவரே உண்மையான ஜீவ அப்பம் என்பதையும், அவர்களுக்காகவும், நமக்காகவும் அவரது சரீரம் “உடைக்கப்படப்” போகிறது என்ற மிகப்பெரிய உண்மையை நமக்கு சுட்டிக் காண்பிப்பதாக உள்ளது.
கர்த்தருடைய பந்தியில் நாம் ஒவ்வொரு முறையும் அப்பத்தைப் பிட்டு, பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், நம்முடைய கர்த்தரின் மகாப்பெரிய அன்பையும், அவர் நமக்கு அருளும் கிருபைகளையும் குறித்து நினைவுறுத்தப்படுகிறறோம்.
உறுதியாக பற்றிக்கொள்
சீனாவில் ஷாங்க் ஜியாஜியிலுள்ள டையமன் மலை, உலகிலுள்ள அழகான மலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மலையின் உயர்ந்த சிகரங்களின் முழு அழகையும் நீங்கள் கண்டு களிக்க டையமன் ஷான் கேபிள் காரின் (Cable Car) மூலம் செல்ல வேண்டும். இந்த கேபிள் கார் 7455 மீட்டர் (4.5 மைல்) தூரத்திற்கு பயணிக்கிறது. அந்த கேபிள் காரில் எந்த ஒரு மின் மோட்டாரும் இல்லாமல் மிக உயரமான மலைகளை அவ்வளவு தூரம் கடந்து செல்வது என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. ஆனாலும் இது பிரமிக்கத்தக்க உயரமான அந்த மலைகளை பாதுகாப்பாக கடந்து செல்லுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்சார மோட்டாருடன், மிக வலுவான கம்பிவடத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
நமது விசுவாசப் பயணத்தில் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:14) என்று, நாமும் நமது ஓட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்க இயலும்? அந்த கேபிள் காரைப்போல நமக்கு கிறிஸ்துவுடன் கூட மிக வலுவான பிணைப்பு இருக்க வேண்டும். அதைத்தான் பவுல் “கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” (பிலி. 4:1) என்று கூறியுள்ளார். நாமாக செயல்படக்கூடிய வழிமுறைகள் நம்மிடம் இல்லை. நாம் முன்னேறிச் செல்ல முழுவதுமாக கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறோம். நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களைக் கடந்து செல்ல, அவர் உதவிசெய்து நம்மை பாதுகாவலாகப் பரலோகத்தில் சேர்ப்பார்.
இந்த உலகில் வாழ்ந்த இறுதி நாட்களில், அப்போஸ்தலனாகிய பவுல் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ. 4:7) என்று அறிவித்தார்; நீங்களும் அவ்வாறே கூற இயலும். கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அது போதும்.
நல்ல விசுவாசம், கெட்ட விசுவாசம்
“உனக்கு விசுவாசம் தேவை” என மனுஷர்கள் சொல்லுவார்கள். ஆனால், அதன் அர்த்தம் என்ன? எந்த விசுவாசமானாலும் அது நல்ல விசுவாசமா?
“உன்னிலும், உன்னிலிருக்கிற அனைத்தின் மேலும் விசுவாசம் வை” என ஒரு நூற்றாண்டு முன்பு சிந்தனையாளர் ஒருவர் எழுதினார். “எப்பேர்பட்ட தடையைக் காட்டிலும் மகத்தான ஒன்று உனக்குள் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்.” இது கேட்க நன்றாக இருந்தாலும், நடைமுறை வாழ்வை எதிர்கொண்டு மோதும் பொழுது, இக்கூற்று சுக்குநூறாகிவிடும்.
தேவன் ஆபிரகாமைப் பார்த்து உன் சந்ததியார் எண்ணற்றவர்களாயிருப்பார்கள் என வாக்குத்தத்தம் பண்ணினார் (ஆதி. 15:4-5). ஆனால்,…
கல்லெறி தூரத்தில்
விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, மதத்தலைவர்கள் கூட்டம் ஒன்று அவளை மந்தையை ஓட்டி வருவது போல இயேசுவிடம் இழுத்து வரும் பொழுது, கல்லெறி தூரத்திலுள்ள கிருபைக்குள் அவளை அழைத்து வருகிறார்கள் என்பதை அறியாதிருந்தார்கள். இயேசுவை இழிவுபடுத்துவதே அவர்களுடைய எதிர்பார்ப்பாய் இருந்தது. ஒரு வேளை அவர் அவளை விட்டுவிடும்படி சொன்னால், மோசேயின் பிரமாணங்களை மீறுகிறதாய் குற்றம் சாட்டலாம் அல்லது அவளை ஆக்கினைக்குள்ளாக தீர்த்து மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தால், அவரை பின்பற்றும் கூட்டம் அவருடைய இரக்கமும், கிருபையும் நிறைந்த வார்த்தைகளை உதறிவிடுவார்கள்.
ஆனால் இயேசுவோ, குற்றம்சாட்டினவர்கள் எய்த அம்பை…
ஜெபிக்கும் நோயாளி
நான் வாழ்ந்து வந்த நகரில் வசித்து வந்த ஆலன் நானிங்கா என்ற நபர் இறந்தபொழுது, அவரைப்பற்றி வெளியான இரங்கல் செய்தி மூலம், எனது ஊரில் வாழ்ந்து வந்த அனைத்துக் கிறிஸ்தவர்களைவிட அவர் “மிகவும் அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தவர்” என்ற செய்தி எல்லாராலும் அறியப்பட்டது. அந்த இரங்கல் செய்தியில் அவரது குடும்பம், அவர் செய்து வந்த வேலை ஆகியவற்றைப் பற்றிக் கூறினபின், அவருடைய உடல்நிலை 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்ததையும் விளக்கினது. அவர் மருத்துவமனையில் இருந்தபொழுது, அங்கிருந்த உள்நோயாளிகள் மத்தியில் அர்ப்பணிப்புடன் செய்து வந்த ஜெப ஊழியத்தின் நிமித்தமாக “ஜெபிக்கும் நோயாளி” என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார் என்ற விளக்கத்துடன் அந்த இரங்கல் செய்தி முடிவடைந்திருந்தது. அவரது நோயின் வேதனைகள் மத்தியிலும் அவரைச் சுற்றியிருந்த தேவையுள்ள மக்களுக்காக ஜெபித்து வந்த ஒரு மனிதனை இங்கு பார்க்கிறோம்.
இயேசுவை, யூதாஸ் காட்டிக்கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக “நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவா. 17:11) என்று இயேசு அவருடைய சீஷர்களுக்காக ஜெபித்தார். அவருக்கு நேரிடப்போவதை அவர் நன்கு அறிந்திருந்தும், அவர் தன்னைக் குறித்து சிந்திக்காமல், அவரைப் பின்பற்றின சீஷர்களைப்பற்றி அவரது கவனத்தை செலுத்தினார்.
நமது சுகவீனம், துன்பமான நேரங்கள் மத்தியில் பிறருடைய ஜெப உதவிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த ஜெபங்கள் நம்மை ஊக்கப்படுத்த நமக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால், நாமும் நம்முடைய கர்த்தரைப்போல நம்மைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் மக்களுக்காக, தேவனை நோக்கி நமது கண்களை ஏறெடுத்து ஜெபிப்போமாக.
இன்று உனக்காக ஜெபிக்கிறேன்
நாம் ஒரு குழப்பமான சூழ்நிலையையோ அல்லது கடினமான பிரச்சனையையோ எதிர்கொள்ளும் பொழுது, அநேகந்தரம், கிறிஸ்துவுக்குள் உள்ள நம் சகோதர, சகோதரிகளிடம் நமக்காக ஜெபிக்கக் கேட்போம். நம்மேல் அக்கறைகொண்டவர்கள் தங்களுடைய ஜெபத்தினாலே நம்மை தாங்கி தேவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பதை அறியும் பொழுது, நமக்கு மிகப்பெரிய ஆறுதலாயிருக்கிறது. ஆனால், உங்களுக்கு நெருங்கிய கிறிஸ்தவ நண்பர்கள் இல்லையென்றால் என்ன செய்வது? ஒருவேளை நீங்கள் வாழும் இடத்தில் கிறிஸ்துவின் நற்செய்தியை எதிர்க்கலாம். ஆகவே, யார் உங்களுக்காக ஜெபிப்பார்கள்?
வேதத்தில், வெற்றியை அறிவிக்கும் மகத்தான அதிகாரங்களில் ஒன்றான ரோமர் 8ஆம்…