வகை  |  odb

தேவனுடைய விருப்பதின் படியே ஆகட்டும்

நாங்கள் நியூயார்க் செல்லும் வழியில் ஒமகசே என்ற ஜப்பானிய உணவகத்திற்குச் சென்றிருந்த போது, நாட்டே, ஷெர்லின் ஆகிய இருவரும் அதனை மிகவும் ரசித்தனர். ஒமகசே என்பதற்கு ” உன்னுடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் “என்று அர்த்தம். இவ்வகை உணவகங்களுக்கு வருபவர்களின் உணவை சமையற்காரரே தீர்மானிப்பார். இந்த வகை உணவகத்திற்கு முதல் முறையாக வந்திருந்த போதிலும், இதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருந்த போதிலும், அந்த சமையற்காரர் தேர்ந்தெடுத்து தயாரித்த உணவை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர்.

இந்த கருத்தினைப் போன்று, நாம் தேவனிடம் எடுத்துச் செல்லும் ஜெபங்களை “நான் உம்முடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று கூறுவது சிறந்ததாகும். இயேசு அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிப்பதைக் கண்ட சீடர்கள் (லூக். 5:16) இயேசுவிடம் தங்களுக்கும் ஜெபிக்க கற்றுத் தருமாறு கேட்கின்றனர். இயேசு, அவர்களின் அனுதின தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், சோதனையில் விழாதபடி காக்கவும் ஜெபிக்க கற்பிக்கின்றார். இந்த ஜெபத்தின் மற்றொரு பகுதி நம்மை முற்றிலுமாக தேவனுக்கு அர்ப்பணிக்கும் படி கூறுகிறது. “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும் படி கற்பித்தார்.

நம்முடைய தேவைகளை நாம் ஜெபத்தில் தேவனிடம் ஊற்றிவிட வேண்டும். அவர் நம்முடைய இருதயத்தின் விருப்பங்களைக் கேட்க விரும்புகின்றார், அவற்றைக் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியடைகின்றார். ஆனால் நாம் குறைவுள்ள மனிதர்கள், நமக்கு எது நல்லது என்பது தெரியாது எனவே, தாழ்மையான சிந்தையோடு, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. அவர் நம்பத்தகுந்தவர், அவர் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நமக்கு தருவார் என்ற நம்பிக்கையோடு, ஜெபத்திற்கான பதிலையும் அவரிடமே விட்டு விடுவோம்.

பரதீசில் எரிமலையின் அக்கினிக் குழம்பு

வெப்ப மண்டல பசுமை காடுகள் வழியே, மெதுவாக நகர்ந்து வரும் நெருப்பு குழம்பு ஏற்படுத்திய ஓசை, அந்த அமைதியான சூழலில் கேட்டுக்கொண்டிருந்தது. அருகில் குடியிருப்பவர்களின் முகம் விறைத்துப் போனாலும், ஆச்சரியப்பட்டனர். அநேக நாட்களில் இவ்விடம் “பரதீசு” என்றே அழைக்கப்பட்டாலும், தற்சமயம், ஹவாய் தீவிலுள்ள பூனா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலபிளவு, தேவன் இந்த தீவுகளை கட்டுக்கடங்காத எரிமலையின் வல்லமையோடு உண்டாக்கியுள்ளார் என்பதைக் காட்டுகின்றது. 

ஆதி இஸ்ரவேலர்களும் கட்டுப்படுத்த முடியாத ஒரு வல்லமையைச் சந்தித்தனர். தாவீது அரசன் உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் கைப்பற்றிய போது (2 சாமு. 6:1-4), ஒரு பெரிய ஆர்ப்பரிப்பு எழும்புகின்றது (வச. 5). உடன்படிக்கை பெட்டி சரிந்து விடாமல் பிடிக்கும்படி கையை நீட்டின ஒரு மனிதன் செத்த போது, அவர்களின் மகிழ்ச்சி நின்று போனது (வச. 6-7).

ஒரு எரிமலையைப் போன்று தேவனும் எப்பொழுது, எப்படி செயல் படுவார் என்பதை முன்னறிய முடியாதவர் என்று நாம் நினைக்கத் தோன்றும்.,உருவாக்கிய அவர் அழிக்கவும் செய்வார் எனவும் நினைக்கத்தோன்றும். ஆனால் தேவன் தன்னை ஆராதிப்பதற்கு என்று உருவாகிக்கியவற்றை எப்படி கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். (எண். 4 பார்க்கவும்) இஸ்ரவேலர் தேவன் அருகில் வர உரிமையைப் பெற்றிருந்தும், அவருடைய பிரசன்னத்தின் மகிமை தகுதியற்ற அவர்களால் மேற்கொள்ள முடியாததாயிருக்கின்றது.

எபிரெயர் 12, பற்றியெரிகிற ஒரு மலையைப் பற்றி நினைவு படுத்துகின்றது. அங்கு தேவன் மோசேக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அது காண்போரை நடுங்கச் செய்தது (வச. 18-21). எபிரெயரை ஆக்கியோன், இந்த காட்சிக்கு மாறாக “நீங்கள் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கு… வந்து சேர்ந்தீர்கள்” (வச. 22-24) என்கின்றார். அருகில் நெருங்க முடியாத, ஆனால் அன்புள்ள தந்தையிடம் நாம் நெருங்கி வரக்கூடிய வழியை, அவருடைய குமாரனாகிய இயேசு நமக்கு உருவாக்கிக் கொடுத்தார்.

நிலைத்திருக்கும் ஜெபங்கள்

“ஜெபங்கள் சாவில்லாதவை” என்பவை இ.எம். பவுண்ட்ஸ் (1835-1913) என்பவர் ஜெபத்தை குறித்து எழுதிய தனிச்சிறப்பு வாய்ந்த, பல தலைமுறையினரின் கவனத்தையீர்த்த வார்த்தைகள். என்றும் நிலைத்திருக்கும் வல்லமை பெற்ற நம்முடைய ஜெபங்களைப் பற்றி அவர், “ ஜெபத்தை உச்சரித்த உதடுகளும் சாவில் மூடப்பட்டு விடலாம், ஜெபத்தை உணர்ந்த இருதயமும் துடிப்பை நிறுத்தி விடலாம், ஆனால், ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளவைகளாய் நிற்கின்றன. அவை தேவனுடைய இருதயத்தில் இடம் பெறுகின்றன. ஜெபங்கள் அவற்றை உச்சரித்தவர்களின் வாழ் நாட்களையும், அவர்களின் தலைமுறையையும், ஒரு யுகத்தையும், இந்த உலகையும் விட தாண்டி வாழ்பவை” என்று எழுதியுள்ளார்.

உன்னுடைய துன்பங்கள், வேதனைகள், துயரங்களின் மத்தியில் நீ ஏறெடுத்த ஜெபங்கள் தேவனை அடைந்தனவா என்று எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? பவுண்ட்ஸ்ஸின் வார்த்தைகளின் உட்கருத்தும், வெளிப்படுத்தல் 8:1-5ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளும் நம்முடைய ஜெபங்களின் முக்கியத்துவத்தை நினைப்பூட்டுகின்றன. பரலோகத்தில் தேவன் வீற்றிருக்கும் சிங்காசனம், (7:17) உள்ளது, அந்த இடம் தான் இவ்வுலகத்தை கட்டுப்படுத்தும் அறை. தேவனுக்கு முன்பாக அவருக்கு பணி செய்யும் தூதர்கள் நிற்கின்றார்கள் (வச. 2) ஒரு தூதன் பழைய ஏற்பாட்டு ஆசாரியரைப் போன்று, தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துக்கொண்டு, சகல பரிசுத்தவான்களின் ஜெபங்களோடு தூபவர்க்கத்தை செலுத்துகின்றான்.(வச. 3,4) புவியில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் பரலோகத்தின் தேவனிடம் கொடுக்கப்படுகின்ற இக்காட்சி, நம் கண்களைத் திறந்து, நமக்கு ஊக்கத்தை தருகிறதல்லவா? நம்முடைய ஜெபங்கள் வழியில் தொலைந்திருக்கலாம் அல்லது மறக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் இங்கே பார்க்கும் காட்சி நமக்கு ஆறுதலாகவும், நாம் ஜெபத்தில் உறுதியாய் இருக்கவும் நம்மை கட்டாயப்படுத்துகின்றது. நம்முடைய ஜெபங்கள் தேவனுக்கு விலையேறப் பெற்றவை!

அது அற்புதமானது!

அது, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திறந்த வெளி ஓட்டப் பந்தயம். ஆனால் அவளுக்கு அதில் பங்கு பெற விருப்பம் இல்லை. அவள், அந்த நிகழ்ச்சிக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதும், தான் மோசமாக செய்து விடக் கூடும் என பயந்தாள். இருப்பினும், எல்லாரோடும் சேர்ந்து ஓட்டத்தை ஆரம்பித்தாள். அந்த இரண்டு மைல் ஓட்டத்தை ஒவ்வொரு நபராக முடிக்க ஆரம்பித்தனர். ஒருசில ஆர்வமற்ற நபர்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தனர். தன்னுடைய மகள் ஓட்டத்தை முடிப்பதைக் காண வந்திருந்த அவளுடைய தாயார், தொலைவில் அவள் ஓடி வருவதைக் கண்டார். உடனே அவள் ஓட்டத்தை முடிக்கும் கோட்டிற்குச் சென்றாள், அவமானப்படும் படி, முடிக்கும் தன் மகளைத் தேற்றும்படி தயாராக நின்றாள் ஆனால் அந்த இளம்பெண், தன்னுடைய தாயாரைப் பார்த்ததும் “அது மிக அற்புதமானது!” என்றாள்.

கடைசியாக முடித்தது எப்படி அற்புதமாயிருக்க முடியும்? அதை முடித்ததாலேயே அந்தப் பெண், தனக்கு கடினமாயிருந்த ஒன்றை நிறைவேற்றி முடித்தாள்! கடின உழைப்பையும், தனக்கு கொடுக்கப்பட்டதில் ஜாக்கிரதையாய் இருப்பதையும் வேதாகமம் பாராட்டுகிறது. விளையாட்டு போட்டிகளும், இசைப்பயிற்சியும் மற்றும் சில காரியங்களிலிருந்தும் இந்த விடாப்பிடியான முயற்சியைக் கற்றுக்கொள்ளலாம் 

நீதிமொழிகள் 12:24ல், “ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.” எனவும்,”சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” (14:23) என்றும் காண்கிறோம். இந்த ஞானமுள்ள யோசனைகளே—வாக்குத்தத்தங்களல்ல நாம் தேவனுக்கு இன்னும் நன்கு பணி செய்ய, நமக்கு உதவும். 

தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டங்களில், வேலையும் அடங்கும். ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்பு, தேவன் அவனை, “ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும், காக்கவும் வைத்தார்” (ஆதி. 2:15). எனவே எதைச் செய்தாலும் அதை… மனப்பூர்வமாய் செய்யுங்கள்” (கொலோ. 3:24) தேவன் தரும் பெலத்தோடு நம் வேலையைச் செய்வோம், அதற்கான பலனை அவர் தருவார்.