அது, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திறந்த வெளி ஓட்டப் பந்தயம். ஆனால் அவளுக்கு அதில் பங்கு பெற விருப்பம் இல்லை. அவள், அந்த நிகழ்ச்சிக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதும், தான் மோசமாக செய்து விடக் கூடும் என பயந்தாள். இருப்பினும், எல்லாரோடும் சேர்ந்து ஓட்டத்தை ஆரம்பித்தாள். அந்த இரண்டு மைல் ஓட்டத்தை ஒவ்வொரு நபராக முடிக்க ஆரம்பித்தனர். ஒருசில ஆர்வமற்ற நபர்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தனர். தன்னுடைய மகள் ஓட்டத்தை முடிப்பதைக் காண வந்திருந்த அவளுடைய தாயார், தொலைவில் அவள் ஓடி வருவதைக் கண்டார். உடனே அவள் ஓட்டத்தை முடிக்கும் கோட்டிற்குச் சென்றாள், அவமானப்படும் படி, முடிக்கும் தன் மகளைத் தேற்றும்படி தயாராக நின்றாள் ஆனால் அந்த இளம்பெண், தன்னுடைய தாயாரைப் பார்த்ததும் “அது மிக அற்புதமானது!” என்றாள்.

கடைசியாக முடித்தது எப்படி அற்புதமாயிருக்க முடியும்? அதை முடித்ததாலேயே அந்தப் பெண், தனக்கு கடினமாயிருந்த ஒன்றை நிறைவேற்றி முடித்தாள்! கடின உழைப்பையும், தனக்கு கொடுக்கப்பட்டதில் ஜாக்கிரதையாய் இருப்பதையும் வேதாகமம் பாராட்டுகிறது. விளையாட்டு போட்டிகளும், இசைப்பயிற்சியும் மற்றும் சில காரியங்களிலிருந்தும் இந்த விடாப்பிடியான முயற்சியைக் கற்றுக்கொள்ளலாம் 

நீதிமொழிகள் 12:24ல், “ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.” எனவும்,”சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” (14:23) என்றும் காண்கிறோம். இந்த ஞானமுள்ள யோசனைகளே—வாக்குத்தத்தங்களல்ல நாம் தேவனுக்கு இன்னும் நன்கு பணி செய்ய, நமக்கு உதவும். 

தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டங்களில், வேலையும் அடங்கும். ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்பு, தேவன் அவனை, “ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும், காக்கவும் வைத்தார்” (ஆதி. 2:15). எனவே எதைச் செய்தாலும் அதை… மனப்பூர்வமாய் செய்யுங்கள்” (கொலோ. 3:24) தேவன் தரும் பெலத்தோடு நம் வேலையைச் செய்வோம், அதற்கான பலனை அவர் தருவார்.