வெப்ப மண்டல பசுமை காடுகள் வழியே, மெதுவாக நகர்ந்து வரும் நெருப்பு குழம்பு ஏற்படுத்திய ஓசை, அந்த அமைதியான சூழலில் கேட்டுக்கொண்டிருந்தது. அருகில் குடியிருப்பவர்களின் முகம் விறைத்துப் போனாலும், ஆச்சரியப்பட்டனர். அநேக நாட்களில் இவ்விடம் “பரதீசு” என்றே அழைக்கப்பட்டாலும், தற்சமயம், ஹவாய் தீவிலுள்ள பூனா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலபிளவு, தேவன் இந்த தீவுகளை கட்டுக்கடங்காத எரிமலையின் வல்லமையோடு உண்டாக்கியுள்ளார் என்பதைக் காட்டுகின்றது. 

ஆதி இஸ்ரவேலர்களும் கட்டுப்படுத்த முடியாத ஒரு வல்லமையைச் சந்தித்தனர். தாவீது அரசன் உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் கைப்பற்றிய போது (2 சாமு. 6:1-4), ஒரு பெரிய ஆர்ப்பரிப்பு எழும்புகின்றது (வச. 5). உடன்படிக்கை பெட்டி சரிந்து விடாமல் பிடிக்கும்படி கையை நீட்டின ஒரு மனிதன் செத்த போது, அவர்களின் மகிழ்ச்சி நின்று போனது (வச. 6-7).

ஒரு எரிமலையைப் போன்று தேவனும் எப்பொழுது, எப்படி செயல் படுவார் என்பதை முன்னறிய முடியாதவர் என்று நாம் நினைக்கத் தோன்றும்.,உருவாக்கிய அவர் அழிக்கவும் செய்வார் எனவும் நினைக்கத்தோன்றும். ஆனால் தேவன் தன்னை ஆராதிப்பதற்கு என்று உருவாகிக்கியவற்றை எப்படி கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். (எண். 4 பார்க்கவும்) இஸ்ரவேலர் தேவன் அருகில் வர உரிமையைப் பெற்றிருந்தும், அவருடைய பிரசன்னத்தின் மகிமை தகுதியற்ற அவர்களால் மேற்கொள்ள முடியாததாயிருக்கின்றது.

எபிரெயர் 12, பற்றியெரிகிற ஒரு மலையைப் பற்றி நினைவு படுத்துகின்றது. அங்கு தேவன் மோசேக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அது காண்போரை நடுங்கச் செய்தது (வச. 18-21). எபிரெயரை ஆக்கியோன், இந்த காட்சிக்கு மாறாக “நீங்கள் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கு… வந்து சேர்ந்தீர்கள்” (வச. 22-24) என்கின்றார். அருகில் நெருங்க முடியாத, ஆனால் அன்புள்ள தந்தையிடம் நாம் நெருங்கி வரக்கூடிய வழியை, அவருடைய குமாரனாகிய இயேசு நமக்கு உருவாக்கிக் கொடுத்தார்.