வகை  |  odb

நன்றியுள்ள மனப்பான்மை

அமெரிக்காவில் எங்களுடைய மாநிலத்தில், குளிர் காலம் கடுமையானதாகவும், பூஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையிலும், முடிவில்லா பனிப்பொழிவையும் கொண்டிருக்கும்.அப்படிப்பட்ட, மிகக் குளிர்ந்த ஒரு நாளில், எங்கள் வீட்டிற்கு முன்பக்கமிருந்த பனியை ஆயிரமாவது முறை, அகற்றிக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த தபால்காரர், எங்கள் நலனைக் குறித்து விசாரித்தார். நான் அவரிடம், இந்தக் குளிர் காலத்தை நான் விரும்பவில்லையெனவும், இந்த பனியினால் நான் சோர்வடைந்துவிட்டேன், எனவும் கூறினேன். அத்தோடு, இந்த மோசமான காலநிலையில், அவருடைய வேலை இன்னும் கடினமாயிருக்குமே எனவும் கேட்டேன். அவர்,” ஆம், ஆனால் எனக்கு ஒரு வேலையாகிலும் இருக்கிறதே, அநேகருக்கு வேலையும் இல்லை, நான் வேலை செய்வதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்றார்.

அவருடைய நன்றியுள்ள மனப்பான்மையைப் பார்த்த போது, நான், என்னுடைய குற்றத்தை உணர்ந்தேன். நம் வாழ்வின் சூழ்நிலைகள் மகிழ்ச்சியற்றதாக அமையும் போது, நாம் நன்றி கூறவேண்டிய அநேக காரியங்களைக் காணத் தவறிவிடுகின்றோம் என்பதை உணர்ந்தேன்.

கொலோசே சபை விசுவாசிகளுக்கு பவுல்,” தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.” (கொலோசெயர் 3:15) என்று எழுதுகின்றார். தெசலோனிக்கேயருக்கு எழுதும் போது,” எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது,” என்கின்றார் (1 தெச. 5:18).

போராட்டங்களும், வேதனைகளும் நிறைந்த நாட்களில், தேவனுடைய சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்படி நாம் ஒப்புக்கொடுப்போம். அந்த சமாதானம் நமக்குள்ளே இருக்கும் போது, கிறிஸ்துவுக்குள் நாம் பெற்றுள்ள அனைத்தையும் நினைவுகூருவோம், அப்பொழுது, நாம் உண்மையாய் நன்றி கூறுவோம்.

எல்லாம் தருபவரை மறந்து விடாதே

அது கிறிஸ்மஸுக்கு முந்திய நாட்கள், அவளுடைய குழந்தைகளின் இருதயத்தில் நன்றியறிதலை உருவாக்குவது, கடினமாயிருந்தது. அவளுடைய குழந்தைகளின் சிந்தனையில் அதனை எவ்வாறு எளிதாக கொண்டு வருவது என்பதனையும், அவர்களின் இருதயத்தில் அதனை எவ்வாறு ஆழமாகப் பதியச் செய்வது என்பதையும் அவள் திட்டமிட்டாள். அவள் தன்னுடைய வீட்டில் அநேக இடங்களில் சிவப்பு ரிப்பன்களைக் கட்டினாள், சுவிட்சுகள், அலமாரியின் கதவுகள், குளிர் சாதனப் பெட்டியின் கதவு, துவைக்கும் இயந்திரம், உலர்ப்பான், தண்ணீர் குழாய்கள், என பல இடங்களில் சிவப்பு ரிப்பன்களோடு, “தேவன் தந்துள்ள அநேக  ஈவுகளை நாம் எளிதாக மறந்து விடுகிறோம், எனவே நான் அவற்றில் ஒரு ரிபன் கட்டியுள்ளேன், தேவன் நம் குடும்பத்தில் எத்தனை நல்லவராய் இருக்கிறார், அவரிடத்திலிருந்து வருகின்ற ஈவுகளை நாம் மறவாதிருப்போம்” என்ற குறிப்பையும் எழுதி வைத்தேன்.

உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் நாம் காண்கின்றோம், இஸ்ரவேலர்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைவதற்கு முன்பாக அநேக இடங்களில் வெற்றி பெற வேண்டியிருந்தது. அவர்கள் கட்டாத வசதியான பெரிய பட்டணங்களில் பிரவேசிப்பார்கள், (வ.10) சகல நல்ல வஸ்துக்களால் நிரப்பப்பட்ட வீடுகளில் குடியேறுவார்கள், அவர்கள் வெட்டாத துரவுகளையும், நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும் அவர் உங்களுக்கு கொடுப்பார்,(வ.11) இத்தனை ஆசீர்வாதங்களையும் தருபவர் “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே”(வ.10) இவை அத்தனையும், இன்னும் அநேக நன்மைகளையும் அன்போடு தேவன் தருகின்றார் எனவே மோசே ஜனங்களிடம்,” உன் கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (வ.12) என்கின்றார்.

நம் வாழ்வின் சில காலங்களை, நாம் எளிதாக மறந்து விடுகின்றோம். ஆனால் நம்முடைய அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் காரணராகிய தேவனையும், அவருடைய நன்மைகளையும் நம் கண்கள் காணத் தவறக்கூடாது.

பரத்திலிருந்து வரும் ஈவு

ஒரு பழங்கால கதையில், நிக்கோலாஸ் என்ற ஒரு மனிதன் (கிபி 270 ல் பிறந்தவர்) ஓர் ஏழை தகப்பனைக் குறித்துக் கேள்விப் படுகின்றான். அவர் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப்படுகின்றார், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கவும் அவரிடம் ஒன்றுமில்லை. அந்த தகப்பனாருக்கு ரகசியமாக உதவும் படி விரும்பிய நிக்கோலாஸ், தங்கம் வைக்கப்பட்ட ஒரு பையை, ஜன்னல் வழியே எறிகின்றார். அது அங்கு, அனல் அடுப்பின் அருகில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள் விழுந்தது. அவர் தான் செயின்ட். நிக்கோலாஸ், பின்னர் சான்டா கிளாஸ் என்று நினைவு கூறப்படுகின்றவர்.

நான், பரிசுகள் மேலிருந்து வரும் என்ற கதையை கேட்டபோது, நம்முடைய பிதாவாகிய தேவன், நம்மீது உள்ள அன்பினாலும், இரக்கத்தினாலும், தம்முடைய சொந்த குமாரனை, இவ்வுலகிற்கு மிகப்பெரிய ஈவாக, ஓர் அற்புதமான பிறப்பின் மூலமாக அனுப்பினார், என்பதை நினைத்துக் கொண்டேன். பழைய ஏற்பாட்டில் கூறப் பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்படி, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள், இம்மானுவேல் என்பதற்கு “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்று அர்த்தம் (1:23) என்பதை மத்தேயு சுவிசேஷத்தில் காண்கின்றோம்.

நிக்கோலாஸ்ஸின் பரிசு எத்தனை அருமையாயிருந்ததோ, அதையும் விட மிகவும் அற்புதமானது இயேசுவாகிய ஈவு. அவர் பரலோகத்தை விட்டு இறங்கி, மனிதனாகப் பிறந்தார். மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார், அவர் இப்பொழுது நம்மோடிருக்கும் தேவன். நாம் கவலையும் வேதனையும் அடைந்த வேளைகளில் நமக்கு ஆறுதல் தருகின்றார், நாம் மனம் சோர்ந்த வேளைகளில், நமக்கு ஊக்கம் தருகின்றார், நாம் ஏமாற்றப்படும் போது, நமக்கு உண்மையைத் தெரிவிக்கிறார்.

ஆவலோடு காட்டப்படும் இரக்கம்

ஓர் இளம் தாய், தன்னுடைய மூன்று குழந்தைகளோடு விமானத்தில் பயணம் செய்தபோது, அவளுடைய மூன்று வயது பெண் குழந்தை போராடி, அழ ஆரம்பித்தது. அவளை அமைதிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய நான்கு மாத பையனும் பசியால் அழ ஆரம்பித்தான். 

உடனே, அவளருகிலிருந்த பயணி, அக் குழந்தையை வைத்துக்கொள்ள முன்வந்தார். எனவே அந்த தாயார், ஜெசிக்கா, தன்னுடைய மகளை இருக்கையில் அமர்த்தி, பெல்ட் போட உதவியாக இருந்தது. பின்னர் அந்த பயணி, தான் இளம்பெற்றோராக இருந்த போது செய்தவற்றை நினைவு படுத்திக் கொண்டு, அப்பெண் குழந்தையோடு சேர்ந்து படங்களில் கலர் அடிக்க ஆரம்பித்தார், அச்சமயத்தில், அந்த தாய் தன்னுடைய குழந்தைக்கு உணவு ஊட்டினாள். அதே பயணத்தில், அடுத்த விமானத்தில் பயணிக்கும் போதும், தேவைப்பட்டால் தான் உதவுவதாக முன் வந்தார்.

“நான் தேவனுடைய கரத்தினால் இந்த இடத்திற்கு அனுப்பப்பட்டேன். நான் யாரோ ஒருவரின் அருகில் இருக்குமாறு நேர்ந்திருக்கலாம். ஆனால் தேவன், நான் இதுவரை கண்டிராத அளவு மிகச் சிறந்த நபரின் அருகிலேயே  என்னை அமரச் செய்தார்” என்று ஜெசிக்கா கூறினாள்.

அறிமுகமில்லாதவரிடமும் ஆவலோடு காட்டப்படும் இரக்கத்தை 2 சாமுவேல் 9 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். சவுல் ராஜாவும், அவனுடைய மகன் யோனத்தானும் மரித்த பின்பு, அரசாட்சியைப் பிடிக்கக் கூடியவராக யாரேனும் இருந்தால், அவர்களை கொன்று போட்டு விடுவானென, சிலர் தாவீதைக் குறித்து எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவன், ”தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயை செய்யும் படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா? (வச. 3) என்று கேட்கிறான். அப்பொழுது, யோனத்தானின் குமாரனான மேவிபோசேத்தை தாவீதிடம் கொண்டு வருகிறார்கள். தாவீது அவனுடைய தகப்பனாகிய சவுலின் நிலத்தையெல்லாம் அவனுக்குத் திரும்பக் கொடுக்கிறான், அவனைத் தன்னுடைய சொந்த குமாரனைப் போல பாவித்து, நித்தம் தன்னுடைய பந்தியில் அப்பம் புசிக்கும் படி செய்கின்றான்.(வ.11)

தேவனுடைய அளவற்ற இரக்கத்தைப் பெற்ற நாம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களிடம் ஆவலோடு இரக்கத்தைக் காட்டுவோம். (கலா. 6:10)