ஒரு பழங்கால கதையில், நிக்கோலாஸ் என்ற ஒரு மனிதன் (கிபி 270 ல் பிறந்தவர்) ஓர் ஏழை தகப்பனைக் குறித்துக் கேள்விப் படுகின்றான். அவர் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப்படுகின்றார், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கவும் அவரிடம் ஒன்றுமில்லை. அந்த தகப்பனாருக்கு ரகசியமாக உதவும் படி விரும்பிய நிக்கோலாஸ், தங்கம் வைக்கப்பட்ட ஒரு பையை, ஜன்னல் வழியே எறிகின்றார். அது அங்கு, அனல் அடுப்பின் அருகில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள் விழுந்தது. அவர் தான் செயின்ட். நிக்கோலாஸ், பின்னர் சான்டா கிளாஸ் என்று நினைவு கூறப்படுகின்றவர்.

நான், பரிசுகள் மேலிருந்து வரும் என்ற கதையை கேட்டபோது, நம்முடைய பிதாவாகிய தேவன், நம்மீது உள்ள அன்பினாலும், இரக்கத்தினாலும், தம்முடைய சொந்த குமாரனை, இவ்வுலகிற்கு மிகப்பெரிய ஈவாக, ஓர் அற்புதமான பிறப்பின் மூலமாக அனுப்பினார், என்பதை நினைத்துக் கொண்டேன். பழைய ஏற்பாட்டில் கூறப் பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்படி, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள், இம்மானுவேல் என்பதற்கு “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்று அர்த்தம் (1:23) என்பதை மத்தேயு சுவிசேஷத்தில் காண்கின்றோம்.

நிக்கோலாஸ்ஸின் பரிசு எத்தனை அருமையாயிருந்ததோ, அதையும் விட மிகவும் அற்புதமானது இயேசுவாகிய ஈவு. அவர் பரலோகத்தை விட்டு இறங்கி, மனிதனாகப் பிறந்தார். மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார், அவர் இப்பொழுது நம்மோடிருக்கும் தேவன். நாம் கவலையும் வேதனையும் அடைந்த வேளைகளில் நமக்கு ஆறுதல் தருகின்றார், நாம் மனம் சோர்ந்த வேளைகளில், நமக்கு ஊக்கம் தருகின்றார், நாம் ஏமாற்றப்படும் போது, நமக்கு உண்மையைத் தெரிவிக்கிறார்.